search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்கும்"

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியான லூர்துமாதா தெருவில் உள்ள சானல் ரோட்டில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டி சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியின் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட உள்ள தடுப்பு சுவருடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆனி ரோஸ்தாமஸ், ஆட்லின் சேகர், அரசு ஒப்பந்ததாரர் சுதாபாஸ்கர், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், புனிதன், புஷ்பராஜ், சகாயம், நிசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பேரூராட்சி தலைவர் பொன்.ரவி தொடங்கி வைத்தார்
    • திற்பரப்பு பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மாவறத்துவிளை பகுதியில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    திற்பரப்பு பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மாவறத்துவிளை பகுதியில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. மழை காலங்களில தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கும். இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தார்கள். அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி தலைவர் பொன்.ரவியிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணியை தலைவர் பொன். ரவி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை தலைவர் ஸ்டாலின்தாஸ், வார்டு உறுப்பினர் சதீஷ், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ், திற்பரப்பு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எட்வின், முன்னாள் கவுன்சிலர் ராஜமணி, வட்டார கம்யூனிஸ்டு செயலாளர் விஸ்வாம்பரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரையுமன்துறை அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் அப்பகுதி பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணியினை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், தூத்தூர் ஊராட்சி முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூசை பிரடி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண், தூத்தூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் சாரா, பங்குதந்தை சூசை ஆன்றனி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தொடங்கி வைத்தார்
    • 15-வது மத்திய நிதி குழு மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட காளியாயன் விளை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜனை அணுகி தங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் 15-வது மத்திய நிதி குழு மானியத்திலிருந்து ரூ.3.26 லட்சம் ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாதேவி ரவிச்சந்திரன், 1-வது வார்டு உறுப்பினர் ராஜகுமாரி கலைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ரவிக்குமார், அனந்தகிருஷ்ணன், தியாகராஜன், அழகேசன், முத்துக்குட்டி, முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • பொதுமக்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றம்.

    சேலம்:

    மேட்டூர் அருகே பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி 7-வது வார்டு கருப்புரெட்டியூர் வண்டிக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுவாதி. இவரும், அப்பகுதி பொதுமக்களும் தங்களுக்கு பாதை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர் கார்மேகம் மேற்பார்வையில் சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர், மேட்டூர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட அலுவலர்கள் கடந்த 11-ந் தேதி சம்பந்தப்பட்ட வண்டிக்காரன்காடு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்களுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று பொதுமக்களின் வசதிக்காக ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரி வித்துள்ளார்.

    முன்னதாக, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மண் சாலை அமைத்து கொடுக்கும் பணியை தொடங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • பாலம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த பணி நடைபெறுவதையொட்டி சேலம்-சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் 4 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அடுத்துள்ள ரெட்டிபட்டி அம்பேத்கார் நகர் அருகே உள்ள சேலம்- சென்னை மார்க்க ரெயில் பாதையில் பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதற்காக 18 ராட்சத கான்கிரீட் பாக்ஸ் தயாரிக்கப்பட்டது, கடந்த 4-ந் தேதி 6 கான்கிரீட் பாக்ஸ் பொருத்தப்பட்டு பணி நடைபெற்றது. மீதமுள்ள 12 பாக்ஸ் பொருத்துவதற்கான பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பனியின் போது சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ், கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்து கவனித்து வருகின்றனர், இந்த பணி நடைபெறுவதை–யொட்டி சேலம்-சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் 4 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    காடையாம்பட்டி அருகே வீடுகளுக்குச் செல்லும் வழியை மறித்து உயரமாக அமைக்கப்படும் கழிவுநீரோடை

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் நாச்சனம்பட்டி ஆதிதிராவிடர் காலனி உள்ளது . இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியது. இதை தொடர்ந்து சாக்கடை வசதி வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் காடையாம்பட்டி பேரூராட்சி சார்பில் கழிவு நீர் சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நாச்சனம்பட்டி காலனி பகுதியில் உள்ள ஒரு பகுதியில் தெருக்களில் உள்ள வீடுகளுக்கு செல்லும் பாதியை வழிமறித்து ஒரு மீட்டர் உயரம் வரை சாக்கடை கால்வாய் அமைக்கப்படுகிறது.

    இதனால் கழிவுநீர் வீட்டுக்குள் செல்லும் சூழ்நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வீடு மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரம் மேல் பகுதியில் அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாயை அகற்றி விட்டு குழி தோண்டி கால்வாய் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி மூதாட்டி மாரியம்மாள் கூறும் போது எனக்கு மகன் ,மகள் என யாரும் இல்லை. நான் தனியாக வசித்து வருகிறேன். தற்போது அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய் எனது வீட்டில் இருந்து 4 அடி உயரமாக உள்ளது. இதனால் நான் வீட்டிற்குள் சென்று வர முடியவில்லை. நான் வீதியில் இருந்து தவழ்ந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நான் குடிநீர் எடுத்து வர முடியவில்லை. எனவே இதை முறையாக அமைக்கவேண்டும் என்றார்.

    ×