search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழ்குழாய்"

    • மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தொடங்கி வைத்தார்
    • 15-வது மத்திய நிதி குழு மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட காளியாயன் விளை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜனை அணுகி தங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் 15-வது மத்திய நிதி குழு மானியத்திலிருந்து ரூ.3.26 லட்சம் ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாதேவி ரவிச்சந்திரன், 1-வது வார்டு உறுப்பினர் ராஜகுமாரி கலைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ரவிக்குமார், அனந்தகிருஷ்ணன், தியாகராஜன், அழகேசன், முத்துக்குட்டி, முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சுங்ககாரன்பட்டி, வீரணம்பாளையம், பிராந்தகம், கூடச்சேரி ஆகிய வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • (8 விவசாயிகள்) விவசாயிகளுக்கு நிலத்தடி போர் அமைத்து மின்சாரம் வழங்கி சொட்டுநீர் பாசனமும் அமைத்து தரப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நடப்பு நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சுங்ககாரன்பட்டி, வீரணம்பாளையம், பிராந்தகம், கூடச்சேரி ஆகிய வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இக்கிராமங்களில் 10 ஏக்க ருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்கள் உள்ள (8 விவசாயிகள்) விவசாயிகளுக்கு நிலத்தடி போர் அமைத்து மின்சாரம் வழங்கி சொட்டுநீர் பாசனமும் அமைத்து தரப்படுகிறது. தகுதியுடைய விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    ×