search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி
    X

    தார் சாலை பணிகளை தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்த காட்சி.

    கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி

    • தார்சாலையினை சீரமைக்கும் ஆரம்பகட்ட பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
    • விழாவில் கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் மாணிக்கராஜ், துணைத்தலைவர் ராஜசேகர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சுரண்டை ரோடு வாய்க்கால் பாலம் முதல் பெரியகுளம் கரை, வடக்கு சிவகாமிபுரம் நாடார் தெரு, வணிகர் கீழத்தெரு மற்றும் 2-நம்பர் ரோடு ஆகிய பகுதிகளில் பழுதடைந்த தார்சாலையினை சீரமைக்கும் ஆரம்பகட்ட பணிகளை கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் மாணிக்கராஜ், துணைத்தலைவர் ராஜசேகர் முன்னிலையில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோடிஸ்வரன், மாலதி முருகேசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், இசக்கிராஜ், விஜிராஜன், இசக்கிமுத்து, தேவஅன்பு, முத்துசெல்வி ஜெகதீசன், சாமுவேல்துரைராஜ், பொன்செல்வன் மற்றும் ஜெகதீசன், செல்வன், ராஜாமணி, தெய்வேந்திரன், அறிவழகன், கணேசன், சுப்பிரமணியன், பால்துரை, ராமரத்தினசாமி, குத்தாலிங்கம், மாடசாமி, வெற்றி, மாரியப்பன், மதியழகன், தமிழ்செல்வன், மாரியப்பன் சாமிராஜ், இசக்கிமணி, கல்யாணசுந்தரம், மாரிச்செல்வம், சிவன், மாரிச்செல்வன், முருகன், பெரியசாமி, தங்கபழம், ராமசாமி, ராமகிருஷ்ணன், காலசாமி, துரை, ராம்குமார், பூங்குன்றன், மாயாண்டி, திருவம்பலம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×