search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ.1,013 கோடியில் கட்டப்பட்டுவரும்   மேம்பாலம் - சாலை அமைக்கும் பணி: விழுப்புரம் கலெக்டர் ஆய்வு
    X

    மேம்பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் மோகன்ஆய்வு செய்தார்.

    நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ.1,013 கோடியில் கட்டப்பட்டுவரும் மேம்பாலம் - சாலை அமைக்கும் பணி: விழுப்புரம் கலெக்டர் ஆய்வு

    • பணியினை மாவட்ட கலெக்டர்மோகன் பார்வையிட்டார்.
    • 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், ஜானகிபுரம் சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் கட்டும்பணி மற்றும் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர்மோகன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் சந்திப்பிலிருந்து பாண்டிச்சேரி வரை 29 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பணி ரூ.1,013 கோடி மதிப்பீட்டில் புதிய 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. ஜானகிபுரம் சந்திப்பில் புதியதாகபூஜ்ஜியம் கி.மீட்டராக நிலையாக வைத்து 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி - சென்னை நெடுஞ்சா லையில், அதிக ப்படியான வாகன ங்கள் சென்று வருவதால் பாதுகா ப்பான பயணத்தை உறுதிசெய்தி டும் பொருட்டு, பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் கூடுதலாக வைத்திடவும், எதிர்வரும் வாகனங்கள் தெரியும் அளவிற்கு தற்போது வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அளவை குறைத்து குறைந்த உயரத்தில் தடுப்புகள் அமைத்திடவும், வாகனங்கள் அதிகப்ப டியான வேகத்தில் செல்வ தனை கட்டுப்படுத்திடும் பொருட்டு தற்காலிக சிறிய அளவிலான வேகத்தடைகள் வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றிட தலைக்கவசங்கள் வழங்கிடவும், பிரதிபலிக்கும் பட்டை உடைய ஆடைகளை அணிந்து பணியாற்றிடவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்வதோடு, வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், இரவு நேரங்களில் பணிகள் நடைபெறும் சமயத்தில் வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் ஒளிரும் வகையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் மற்றும் பதாகைகள் ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்களுக்கோ, வாகன ஓட்டிகளுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவவாறு அவர் கூறினார்.

    Next Story
    ×