என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எச்சூர் கிராமத்தில் ரூ.1.11 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- 12.60 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
செய்யாறு:
செய்யாறு தாலுக்கா, அனக்காவூர் ஒன்றியம் எச்சூர் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மலைவையாவூர்- திருப்பதி தாங்கள் இடையே ரூ.1 கோடியே 11 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது.
புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் வழக்கறிஞர் புரிசை எஸ்.சிவகுமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஒ. ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சின்ன செங்காடு மற்றும் செங்காடு ஆகிய கிராமங்களில் 12.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடங்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார், திராவிட முருகன், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்