search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "porn film"

    பள்ளிக்கரணை அருகே என்ஜினீயரிங் மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மாணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ஸ்ரீநாத். தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகினார்.

    இந்த நிலையில் ஸ்ரீநாத், எதிர்கால வாழ்க்கை குறித்து பேசவும், பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் கூறி மாணவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

    இதனை நம்பிய மாணவி, ஸ்ரீநாத்தின் வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு அவரது பெற்றோர் இல்லை. இதனை தொடர்ந்து மாணவியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று தனது குழந்தை பருவ புகைப்படத்தை காண்பித்ததாக ஸ்ரீநாத் கூறினார்.

    அப்போது அங்கு ஏற்கனவே திட்டமிட்டப்படி மற்றொரு அறையில் ஸ்ரீநாத்தின் நண்பரான யோகேஷ் மறைந்து இருந்தார்.

    அவர், ஸ்ரீநாத்தும் மாணவியும் நெருக்கமாக இருக்கும் காட்சியை வீடியோவாகவும், மாணவியை ஆபாசமாகவும் புகைப்படம் எடுத்தார்.

    இதற்கிடையே மறுநாள் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீநாத், மாணவியிடம் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டினார். மேலும் இதனை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவதாகவும் கூறினார்.

    இதனை செய்யாமல் இருக்க மீண்டும் வீட்டுக்கு வர வேண்டும். கூடுதலாக பணம் தர வேண்டும் என்று ஸ்ரீநாத்தும், யோகேசும் மாணவிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநாத், யோகேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். #PollachiAbuseCase
    நாகப்பட்டினம்:

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

    நாகை வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சுந்தர் (வயது23). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    சுந்தர் அந்த கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சுந்தருக்கும் ஆழியூரை சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் அவர்களை காதலர்களாக மாற்றி உள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் காதலன் சுந்தரின் நடவடிக்கையில் இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் சுந்தரிடமிருந்து விலகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் இளம்பெண்ணை மீண்டும் தன்னுடன் பழக வைக்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.

    இதையடுத்து சுந்தர் மீண்டும் தனது காதலியான அந்த இளம்பெண்ணை சந்தித்து சாமர்த்தியமாக மயக்குவது போல் பேசி நட்பை நீட்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அவரின் நம்பிக்கைக்கு உரியவராக நடித்துள்ளார்.

    இந்நிலையில் காதலியிடம் நாம் காரைக்கால் கோவிலுக்கு சென்று வருவோம் என்று கூறி அழைத்துள்ளார். காதலன் மேல் இருந்த நம்பிக்கையில் அந்த இளம்பெண்ணும் சுந்தருடன் வர சம்மதித்துள்ளார்.

    இதையடுத்து தனது காதலியை காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு அறையில் தங்கியுள்ளனர். அப்போது குளிர்பானம் வாங்கி வந்த சுந்தர் அதை காதலியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த குளிர்பானத்தை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். தான் குளிர்பானத்தில் கலந்து கொடுத்த மயக்க மருந்தால் காதலி மயக்கமடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சுந்தர் அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.



    இந்நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தாயா எனக் கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது சுந்தர் தன் செல்போனில் பதிவு செய்த பதிவுகளை காட்டி மிரட்டியதோடு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். ஆனால் தன் செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை பற்றி இளம்பெண்ணிடம் கூறி அடிக்கடி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    கொலை மிரட்டலால் அதிர்ச்சியும், தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதை அறிந்து அவமானமும் அடைந்த இளம்பெண் உடனடியாக இதுபற்றி கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வாலிபர் சுந்தர் கூறியதாக தெரியவருகிறது. பல பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி சம்பவத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ள நிலையில் இளம்பெண்ணை ஆபாச படமெடுத்து வாலிபர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PollachiAbuseCase
    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே சிறுமியை மிரட்டி ஆபாச படம் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஊ.மங்கலம் எலுமிச்சை காலனியை சேர்ந்தவர் அபிமன்யூ (வயது 20). இவரது நண்பர் அம்பேத்கார் (21).

    இவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். உடனே சிறுமியின் தாய் ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் அபிமன்யூ, அம்பேத்கார் ஆகிய 2 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து அபிமன்யூவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அம்பேத்காரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆசிரியைக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் அனுப்பிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    அயனாவரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு செல்போனில் தொடர்ச்சியாக ஆபாச தகவல்கள் வந்தன. வாட்ஸ்-அப் மூலமும் ஆபாச புகைப்படங்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாட்ஸ் அப்பில் வரும் நம்பரை வைத்து ஆபாச தகவல் அனுப்பியவரின் முகவரியை கண்டு பிடித்தனர்.

    அசோக்நகர் 88-வது தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது 24). 11-வது அவென்யூ பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 25) ஆகியோர் தான் ஆபாச புகைப்படங்களை ஆசிரியைக்கு அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ஆகாஷ் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஆவார்.
    ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான உரிமையாளரிடமிருந்து ஆபாச சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #AdambakkamHostel
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் கண்ணுக்கு தெரியாத வகையில் சிறிய ரக ரகசிய கேமராக்களை பொருத்திய விடுதி உரிமையாளர் சஞ்சீவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருச்சியை சேர்ந்த சஞ்சீவுக்கு திருமணமாகி பள்ளியில் படிக்கும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகவே அவர் செக்ஸ் மன்னனாக வலம் வந்துள்ளார். விடுதியை நடத்துவதற்கு முன்னர் கட்டுமான நிறுவனம் ஒன்றை சஞ்சீவ் நடத்தி வந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய பெண்கள் பலரை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். அப்படி செக்ஸ் சுகம் அனுபவித்த போது அப்பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்று வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோக்களை சி.டி.யாகவும் சஞ்சீவ் பதிவு செய்து வைத்திருந்தார். இதனை காட்டியே மீண்டும் மீண்டும் பல பெண்களை ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

    விடுதியில் பொருத்திய கேமரா தொடர்பாக ஏதாவது வீடியோ காட்சிகள் கிடைக்குமா? என்பது பற்றி சஞ்சீவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கட்டுமான அதிபராக இருந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சிக்கின. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சி.டி.யில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அந்த சி.டி.யில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலர் இருந்தனர். சஞ்சீவ் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாட்ஸ்-அப் குழு ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.

    இந்த குழு மூலம் ஆபாச படங்களை சஞ்சீவ் வாட்ஸ்- அப்பில் பரப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்துச் செல்லப்பட்ட போது சஞ்சீவ் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். அவரது காலில் முறிவு ஏற்பட்டது போன்று காணப்பட்டது.

    இதுபற்றி போலீசார் கூறும்போது, தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்துவிட்டதால் காலில் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    சஞ்சீவியின் லீலைகள் வெளியில் வருவதற்கு புதுவையை சேர்ந்த பேராசிரியை ஒருவரே முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர்தான் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி மூலமாக இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமி, உதவி கமி‌ஷனர் கெங்கைராஜ் ஆகியோரது மேற்பார்வையில் ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி சஞ்சீவை கைது செய்தனர். #AdambakkamHostel
    சென்னை ஆதம்பாக்கம் விடுதியில் தங்கியிருந்த பெண்களை ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் பிடித்த உரிமையாளரின் பல்வேறு தில்லுமுல்லுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. #AdambakkamHostel
    ஆலந்தூர்:

    சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் 1-வது தெருவில் பெண்கள் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இந்த தங்கும் விடுதியை குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் சம்பத் ராஜ் என்கிற சஞ்சீவி (வயது 48) என்பவர் நடத்தி வந்தார். பி.இ. பட்டதாரியான அவர் கட்டுமான நிறுவனமும் நடத்தி வந்தார்.

    இந்த தங்கும் விடுதியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியை உள்பட 7 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் தலா ரூ.7 ஆயிரம் வாடகை கொடுத்தனர். பேராசிரியை புதுச்சேரியை சேர்ந்தவர் ஆவார். மற்றவர்கள் மதுரை, புதுக்கோட்டை, கர்நாடகா, கொல்கத்தா ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

    நேற்று முன்தினம் பேராசிரியை குளித்து விட்டு தலைமுடியை காய வைப்பதற்காக ஹேர்டிரையரை பயன்படுத்த அங்குள்ள மின்சார பிளக்கில் சொருகினார். ஆனால் பிளக்கில் அது நுழையவில்லை. எனவே அவர் பிளக்கை கழற்றி பார்த்தார். அப்போது அதனுள் சிறிய கேமரா இருந்தது. கேமராவே பிளக்காக வடிவமைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் புதுச்சேரியில் உள்ள தனது உறவினரான போலீஸ் அதிகாரிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அவர் இதுபற்றி பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் கூறினார்.

    இதையடுத்து தென் சென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமி மேற்பார்வையில் ஆதம்பாக்கம் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, ராஜு, போலீஸ் ஏட்டுகள் பாலகிருஷ்ணன், ரகு, அந்தோணி ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


    மொத்தம் 9 ரகசிய வயர்லெஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 3 குளியல் அறை, படுக்கை அறை விளக்கு, ஹாலில் உள்ள கடிகாரங்கள், ஹேங்கர், பூ ஜாடி, கண்ணாடி ஆகிய இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த கேமராக்கள் மூலம் சம்பத்ராஜ் பெண்களை ரகசியமாக படம் பிடித்தது தெரியவந்தது.

    இதையடுத்து சம்பத் ராஜை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினார்கள். விடுதியில் தங்கி இருந்த பெண்களிடம் விசாரித்தபோது சம்பத் ராஜின் வீட்டு முகவரி தெரியவில்லை. அவர் தாம்பரம், விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருவதாக முதலில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று விசாரித்தபோது அவரது வீடு அங்கு இல்லை என்று தெரியவந்தது.

    பின்னர் விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் யார் மூலம் விடுதியில் சேர்ந்தீர்கள் என்று போலீசார் விசாரித்தனர். அப்போது இணையதளம் மற்றும் பேஸ்புக்கில் முகவரி பார்த்து விடுதியில் வந்து தங்கியதாக தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் சம்பத்ராஜின் முகவரியை போலீசார் தேடினார்கள். அப்போது அவர் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பஜனை கோவில் 3-வது தெருவில் வசித்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு சென்று தொழில் அதிபர் சம்பத்ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்கள் தங்கும் விடுதி நடத்தினேன். கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தேன். அட்வான்சாக ரூ.50 ஆயிரமும், வாடகையாக மாதம் ரூ.24 ஆயிரமும் கொடுத்தேன். இது 2100 சதுரஅடியில் 3 படுக்கை அறை கொண்ட வீடு ஆகும். இங்கு 7 பேர் தங்கி இருந்தனர்.

    எனது மனைவி சித்தா மருத்துவர். அவர் சித்தா மருத்துவம் பார்ப்பதற்காக படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அந்த வீட்டில் போட்டிருந்தேன். ஹாலில் உள்ள ஒரு பகுதியை சித்தா மருத்துவத்துக்கான அலுவலகமாக பயன்படுத்த முடிவு செய்திருந்தேன். அங்கு தங்கியிருந்த 7 பெண்களும் பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள் என்பதால் பகலில் ஹாலை சித்தா மருத்துவத்துக்கு பயன்படுத்த அனுமதித்தனர்.

    எனவே பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்றபிறகு அங்கு வந்து விடுவேன். இதனால் கேமரா பொருத்துவது எனக்கு வசதியாக போய்விட்டது.

    வீட்டை வாடகைக்கு எடுத்தபோதே என்ஜினீயர் வேலை முடிந்ததும் கேமராக்களை நானே ரகசியமாக பொருத்தினேன். இந்த கேமராக்களை ஆன்லைன் இணையதளத்தில் வாங்கினேன். ஒவ்வொரு கேமராவும் ரூ.2,500 ஆகும்.

    இவை அனைத்துமே உளவுத்துறையினர் பயன்படுத்தும் ரகசிய கேமரா ஆகும். பட்டன் வடிவில், ஹேங்கர் வடிவில் இந்த கேமராக்கள் இருந்தன. இந்த கேமராக்களில் மெமரி கார்டையும் பொருத்தி இருந்தேன்.

    இந்த கேமரா ஆட்கள் நடமாடும் சத்தம் இருந்தால் மட்டுமே பதிவு செய்யும் கேமரா ஆகும். மற்ற நேரங்களில் இயங்காது. இந்த கேமராக்கள் மூலம் மெமரி கார்டில் பதிவான படங்களைத்தான் பார்க்க முடியும் என்பதால் தற்போது நவீன தொழில் நுட்பத்துடன் வைபை மூலம் இயங்க கூடிய 3 குண்டு பல்புகளுடன் கூடிய கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன். இந்த கேமராக்களை பொருத்தினால் மெமரி கார்டை கழற்ற தேவையில்லை. வைபை மூலமே ஆபாச காட்சிகளை பார்க்கலாம் என்பதால் அதை பொருத்த முடிவு செய்திருந்தேன். ஆனால் அதற்குள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சம்பத்ராஜ் இதற்கு முன்பு தேனாம்பேட்டையில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டபோது தனது நிறுவனத்தில் வேலை செய்த பெண்களை ஆபாச படம் எடுத்து வைத்திருந்தார். அந்த சி.டி.யை போலீசார் கைப்பற்றினார்கள். கட்டுமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததால் அவர் பெண்கள் விடுதியை நடத்தினார்.

    மேலும் சம்பத்ராஜ் மீது வளசரவாக்கம், விருகம்பாக்கம், பெங்களூர் போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகளும் பதிவாகி உள்ளன. #AdambakkamHostel 
    சென்னை ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #AdambakkamHostel
    ஆலந்தூர்:

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து வேலை செய்யும் பெண்கள் தங்களது பாதுகாப்பு கருதி, தனியார் விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.

    இதனால் சென்னையில் புற்றீசல் போல் பெண்கள் விடுதிகள் முளைத்துக் கொண்டே உள்ளன.

    இதனை நடத்துபவர்களே பெண்களின் பாதுகாப்பு வி‌ஷயத்தில் அக்கறை காட்டாமல் வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.

    அந்த வகையில் சென்னை ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் ஆபாச படம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து பெண்கள் தங்கும் விடுதி நடத்தி வந்தவர் சஞ்சீவ்.

    இந்த விடுதியில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து 10-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர்.

    இதற்கிடையே அறைகளில் சீரமைப்பு பணி என்ற பெயரில் சஞ்சீவ் சில வேலைகளை செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் விடுதியில் தங்குவதற்காக வந்தார்.

    அவர் வைத்திருந்த செல்போனில் மறைவாக வைக்கப்பட்டு இருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டு பிடிக்கும் ‘ஹைடன் கேமிரா, டிடெக்டர் ஆப்’ என்னும் செயலி இருந்தது.

    அதன் மூலம் அவர் விடுதி அறையில் ரகசிய கேமிராக்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தார். அப்போது குளியல் அறை, படுக்கை அறை, துணிகள் தொங்கவிடும் கைப்பிடி உள்ளிட்ட இடங்களில் சிறிய வகை ரகசிய கேமிராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதனை கண்டு அங்கு தங்கி இருந்த இளம்பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். துணை கமி‌ஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் கெங்கைராஜ், இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரகசிய கேமிரா.

    இதையடுத்து போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமிராக்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக சஞ்சீவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆதார் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஏராளமான போலி ஆவணங்கள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான சஞ்சீவ் திருச்சியை சேர்ந்தவர். தாம்பரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுகிறார்.

    இவர் பெண்கள் தங்கும் விடுதி என்று சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து இளம்பெண்களை சேர்த்துள்ளார். பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே விடுதி இருந்ததால் போக்குவரத்து வசதியை கருதி பெண்கள் இதில் தங்கி உள்ளனர்.

    சஞ்சீவிடம் இருந்து ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதால் அதனை அவருக்கு தயாரித்து கொடுத்தவர்கள் யார்? போலி ஆவணம் தயாரிக்கும் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரகசிய கேமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் அழித்தனர். இந்த காட்சிகளை பதிவு செய்தது ஏன்? என்பது குறித்தும் சஞ்சீவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


    விடுதியில் தங்கி இருந்த பெண்கள் அனைவரும் நேற்று மாலையே அறைகளை காலி செய்து வேறு இடத்துக்கு சென்று விட்டனர். அனுமதி பெற்று செயல்படும் பாதுகாப்பான விடுதியில் தங்குமாறு அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘இந்த இடத்தில் விடுதி செயல்படுவதே பலருக்கு தெரியாது. விடுதிக்கான எந்த அறிகுறியும் இல்லை. போர்டும் வைக்கவில்லை. இதுபோல் போலியாக செயல்படும் விடுதிகளில் பெண்கள் தங்கி பாதிக்கப்படக் கூடாது’ என்றனர்.  #AdambakkamHostel
    குளச்சல் அருகே இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்த என்ஜினீயர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளச்சல்:

    குளச்சலை அடுத்த மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் சகாய பிரதீஷ்டன் (வயது 22).

    சகாய பிரதீஷ்டன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மண்டைக்காடு புதூரில் இவரது வீடு அருகே இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    சகாய பிரதீஷ்டன் சென்னையில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வரும்போது, அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி சந்தித்து கொண்டனர்.

    சமீபத்தில் சகாய பிரதீஷ்டன் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அவர் அந்த பெண்ணை சந்திக்க சென்றார். அப்போது அந்த பெண் வீட்டின் குளியலறையில் இருந்து வெளியே வந்தார்.

    அதனை சகாய பிரதீஷ்டன் தனது செல்போனில் படம் பிடித்து கொண்டார். பின்னர் அந்த படத்தை பெண்ணிடம் காட்டி அதனை பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண்ணை சகாய பிரதீஷ்டன் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதற்கிடையே வெளிநாட்டில் இருந்த பெண்ணின் கணவர் சமீபத்தில் ஊருக்கு வந்தார். அதன்பின்பும் சகாய பிரதீஷ்டன் அடிக்கடி அந்த பெண்ணை ரகசியமாக சந்தித்து ஆசைக்கு இணங்க வலியுறுத்தினார்.

    சகாய பிரதீஷ்டனின் கோரிக்கையை ஏற்க மறுத்த பெண், இனி வீட்டிற்கு வரவேண்டாம் என்று அவரிடம் கூறிவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சகாய பிரதீஷ்டன், அந்த பெண்ணுடன் எடுத்து கொண்ட ஆபாச படங்களை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு சமூக வலை தளம் மூலம் அனுப்பினார். அதனை பார்த்த உறவினர்கள் மற்றும் கணவர் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவர்கள் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் பொன். கீதா ஆகியோர் புகார் மீது விசாரணை நடத்தினர்.

    பின்னர் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்ததாக சகாய பிரதீஷ்டனை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376, 364 (சி), 506 (2) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தீஸ்கர் மாநிலத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்காக அரசு பள்ளிகளுக்கு வழங்கிய டேப்லெட்களில் ஆபாச படங்கள் தோன்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ChhattisgarhGovt
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ‘டேப்-லெட்’ வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.

    இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு இதுவரை 51 ஆயிரம் பள்ளிகளுக்கு ‘டேப்-லெட்’டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ‘டேப்-லெட்’டுகள் இணைய தள வசதியுடன் செயல்படும்.

    துர்க், சுர்குஜா, பாஸ்டர் ஆகிய மாவட்டங்களில் வழங்கிய ‘டேப்- லெட்’டுகளை ஓப்பன் செய்தவுடனேயே ஆபாச படங்கள் திரையில் தோன்றி ஓடுகின்றன.

    இதுபற்றி தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, மறு உத்தரவு வரும் வரை இந்த ‘டேப்-லெட்’டுகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு வழங்கிய ‘டேப்- லெட்’டில் எப்படி ஆபாச படங்கள் வந்தது? என்பது தெரியவில்லை.

    இது சம்பந்தமாக சத்தீஸ்கர் மாநில தகவல் தொழில்நுட்ப துறை திட்ட மேலாளர் நிலேஷ் சோனி கூறும் போது, குறிப்பிட்ட ‘டேப்-லெட்’டுகளில் யாராவது ஆபாச படம் பார்த்திருக்க வேண்டும். அல்லது டவுன் லோடு செய்திருக்க வேண்டும்.

    அதை பார்த்து கொண்டு இருக்கும் போதே சில விளம்பரங்கள் தோன்றும். அதை ‘கிளிக்’ செய்தால் இவ்வாறு ‘டேப்-லெட்’டுகளையே ஆக்கிரமித்து ஆபாச படம் தானாகவே தோன்ற ஆரம்பித்து விடும்.

    இப்படித்தான ‘டேப்- லெட்’டில் ஆபாச படம் வந்துள்ளது. இவற்றை நீக்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக சென்னையில் இருந்து நிபுணர் குழு அழைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சரி செய்தபிறகு பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.
    திருவனந்தபுரம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து, ஆபாச படம் எடுத்து மிரட்டி நண்பர்களுக்கும் விருந்தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு உழுமலை பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    ஆரியநாடு பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் இந்த பெட்ரோல் பங்க் வழியாக தினமும் பள்ளிக்கு செல்வது வழக்கம். அப்போது அந்த மாணவிக்கும் ராகுலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியை தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் அவரிடம் ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து அவரிடம் ராகுல் பழகி வந்தார்.

    இந்த நிலையில் அந்த மாணவியை ஏமாற்றி அந்த பகுதியில் உள்ள ஆள் இல்லாத ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்ற ராகுல் அங்குவைத்து மாணவியை கற்பழித்துவிட்டார்.

    மேலும் மாணவியை அவர் தனது செல்போனில் ஆபாச படமும் எடுத்து வைத்துக்கொண்டார். அதை காட்டி மிரட்டி அவரை தொடர்ந்து அவர் கற்பழித்து வந்தார். இதன் உச்சக்கட்டமாக தனது நண்பர்கள் 2 பேருக்கும் அந்த மாணவியை ராகுல் விருந்தாக்கினார்.

    ராகுலின் கொடுமை அதிகமானதால் அந்த மாணவி தனக்கு நடந்த சம்பவங்களை பள்ளி ஆசிரியையிடம் கூறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுலை கைது செய்தனர். அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக காப்பகத்தில் ஒப்படைத்தனர். ராகுலின் நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சேலம் அருகே ஆபாச படம் எடுத்து வைத்துள்ளதாக கூறி மிரட்டியதால் 2 மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த 15 வயது மாணவி நடுப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவியும் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இருவரும் சேர்ந்து பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் காடையாம்பட்டி வள்ளுவர் தெரு பகுதியை சேர்ந்த செல்வமணி, (20) வேலன் (28), மற்றொரு செல்வமணி (18), துரைமுருகன் (19) ஆகியோர் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழிமறித்து தனது மோட்டார் சைக்கிளில் உட்காருமாறும், நான் பள்ளிக்கு கொண்டு விடுகிறேன் என்றும் வர மறுத்தால் உங்களை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளோம். அதை வெளியே விட்டு விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த 2 மாணவிகளும் தங்கள் வீட்டில் தெரிவித்தால் பிரச்சனை ஆகிவிடுமோ என்ற பயத்தில் வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதை அறிந்த அவர்களது பெற்றோர்கள் 2 மாணவிகளையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நான்கு பேரில் ஒருவர் மேச்சேரி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். மற்ற அனைவரும் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மாணவிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    கேரளாவில் இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து லட்சக்கணக்கில் பணம் பறித்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்களுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இளம்பெண்ணும், வாலிபர்களும் செல்போனில் வீடியோ சாட்டிங் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இதன் மூலம் அந்த பெண்ணிடம் அதிக பணம் இருப்பதை 4 வாலிபர்களும் தெரிந்து கொண்டனர். அவர்கள் பெண்ணிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டனர்.

    இதற்காக அந்த பெண் நிர்வாணமாக இருப்பது போல் சித்தரித்து ஆபாச படம் தயாரித்தனர். அந்த படத்தை இன்னொரு செல்போன் மூலம் அந்த பெண்ணுக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அந்த பெண்ணிடம் செல்போனில் வேறு நபர் பேசுவதுபோல் பேசி, பணம் கேட்டனர். பணம் தர மறுத்தால் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினர். பயந்து போன அந்த பெண், அவர்களுக்கு பல்வேறு தவணையாக ரூ.10 லட்சம் வரை பணம் கொடுத்தார். மேலும் அவரது நகைகளையும் வழங்கினார்.

    பெண்ணிடம் இருந்து வாங்கிய பணம் மூலம் 4 வாலிபர்களும் தனியாக கார் வாங்கினர். அதில், கோவா, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக வாழ்ந்தனர்.

    தமிழில் வெளியான திருட்டு பயலே படம் போல நடந்த இச்சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் 4 வாலிபர்களையும் பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக வல்லாப்பாடு போலீஸ் அதிகாரி சைஜு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    4 வாலிபர்களும் அந்த பெண்ணிடம் மீண்டும் பணம் கேட்டபோது, அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வருமாறு அந்த பெண் அழைப்பதுபோல் போலீசார் அழைத்தனர்.

    அதனை நம்பி வந்த 4 வாலிபர்களையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் கொத்தகுளத்தைச் சேர்ந்த ஆதித்யன், வல்லப்பாட்டைச் சேர்ந்த அஜய், தலைக்குளத்தைச் சேர்ந்த அஸ்வின், ஆதில் ஆகியோர் ஆவார். அவர்களிடம் இதுபோல வேறு யாரிடமாவது பண மோசடி செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புஷ்கரன் கூறும்போது, பெண்கள் செல்போனில் தவறான நபர்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். கவனமாக செல்போனை கையாள வேண்டும் என்று கூறினார். #Tamilnews
    ×