search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hostel owner arrest"

    ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான உரிமையாளரிடமிருந்து ஆபாச சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #AdambakkamHostel
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் கண்ணுக்கு தெரியாத வகையில் சிறிய ரக ரகசிய கேமராக்களை பொருத்திய விடுதி உரிமையாளர் சஞ்சீவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருச்சியை சேர்ந்த சஞ்சீவுக்கு திருமணமாகி பள்ளியில் படிக்கும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகவே அவர் செக்ஸ் மன்னனாக வலம் வந்துள்ளார். விடுதியை நடத்துவதற்கு முன்னர் கட்டுமான நிறுவனம் ஒன்றை சஞ்சீவ் நடத்தி வந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய பெண்கள் பலரை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். அப்படி செக்ஸ் சுகம் அனுபவித்த போது அப்பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்று வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோக்களை சி.டி.யாகவும் சஞ்சீவ் பதிவு செய்து வைத்திருந்தார். இதனை காட்டியே மீண்டும் மீண்டும் பல பெண்களை ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

    விடுதியில் பொருத்திய கேமரா தொடர்பாக ஏதாவது வீடியோ காட்சிகள் கிடைக்குமா? என்பது பற்றி சஞ்சீவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கட்டுமான அதிபராக இருந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சிக்கின. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சி.டி.யில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அந்த சி.டி.யில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலர் இருந்தனர். சஞ்சீவ் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாட்ஸ்-அப் குழு ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.

    இந்த குழு மூலம் ஆபாச படங்களை சஞ்சீவ் வாட்ஸ்- அப்பில் பரப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்துச் செல்லப்பட்ட போது சஞ்சீவ் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். அவரது காலில் முறிவு ஏற்பட்டது போன்று காணப்பட்டது.

    இதுபற்றி போலீசார் கூறும்போது, தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்துவிட்டதால் காலில் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    சஞ்சீவியின் லீலைகள் வெளியில் வருவதற்கு புதுவையை சேர்ந்த பேராசிரியை ஒருவரே முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர்தான் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி மூலமாக இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமி, உதவி கமி‌ஷனர் கெங்கைராஜ் ஆகியோரது மேற்பார்வையில் ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி சஞ்சீவை கைது செய்தனர். #AdambakkamHostel
    சென்னை ஆதம்பாக்கம் விடுதியில் தங்கியிருந்த பெண்களை ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் பிடித்த உரிமையாளரின் பல்வேறு தில்லுமுல்லுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. #AdambakkamHostel
    ஆலந்தூர்:

    சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் 1-வது தெருவில் பெண்கள் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இந்த தங்கும் விடுதியை குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் சம்பத் ராஜ் என்கிற சஞ்சீவி (வயது 48) என்பவர் நடத்தி வந்தார். பி.இ. பட்டதாரியான அவர் கட்டுமான நிறுவனமும் நடத்தி வந்தார்.

    இந்த தங்கும் விடுதியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியை உள்பட 7 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் தலா ரூ.7 ஆயிரம் வாடகை கொடுத்தனர். பேராசிரியை புதுச்சேரியை சேர்ந்தவர் ஆவார். மற்றவர்கள் மதுரை, புதுக்கோட்டை, கர்நாடகா, கொல்கத்தா ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

    நேற்று முன்தினம் பேராசிரியை குளித்து விட்டு தலைமுடியை காய வைப்பதற்காக ஹேர்டிரையரை பயன்படுத்த அங்குள்ள மின்சார பிளக்கில் சொருகினார். ஆனால் பிளக்கில் அது நுழையவில்லை. எனவே அவர் பிளக்கை கழற்றி பார்த்தார். அப்போது அதனுள் சிறிய கேமரா இருந்தது. கேமராவே பிளக்காக வடிவமைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் புதுச்சேரியில் உள்ள தனது உறவினரான போலீஸ் அதிகாரிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அவர் இதுபற்றி பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் கூறினார்.

    இதையடுத்து தென் சென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமி மேற்பார்வையில் ஆதம்பாக்கம் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, ராஜு, போலீஸ் ஏட்டுகள் பாலகிருஷ்ணன், ரகு, அந்தோணி ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


    மொத்தம் 9 ரகசிய வயர்லெஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 3 குளியல் அறை, படுக்கை அறை விளக்கு, ஹாலில் உள்ள கடிகாரங்கள், ஹேங்கர், பூ ஜாடி, கண்ணாடி ஆகிய இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த கேமராக்கள் மூலம் சம்பத்ராஜ் பெண்களை ரகசியமாக படம் பிடித்தது தெரியவந்தது.

    இதையடுத்து சம்பத் ராஜை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினார்கள். விடுதியில் தங்கி இருந்த பெண்களிடம் விசாரித்தபோது சம்பத் ராஜின் வீட்டு முகவரி தெரியவில்லை. அவர் தாம்பரம், விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருவதாக முதலில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று விசாரித்தபோது அவரது வீடு அங்கு இல்லை என்று தெரியவந்தது.

    பின்னர் விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் யார் மூலம் விடுதியில் சேர்ந்தீர்கள் என்று போலீசார் விசாரித்தனர். அப்போது இணையதளம் மற்றும் பேஸ்புக்கில் முகவரி பார்த்து விடுதியில் வந்து தங்கியதாக தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் சம்பத்ராஜின் முகவரியை போலீசார் தேடினார்கள். அப்போது அவர் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பஜனை கோவில் 3-வது தெருவில் வசித்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு சென்று தொழில் அதிபர் சம்பத்ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்கள் தங்கும் விடுதி நடத்தினேன். கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தேன். அட்வான்சாக ரூ.50 ஆயிரமும், வாடகையாக மாதம் ரூ.24 ஆயிரமும் கொடுத்தேன். இது 2100 சதுரஅடியில் 3 படுக்கை அறை கொண்ட வீடு ஆகும். இங்கு 7 பேர் தங்கி இருந்தனர்.

    எனது மனைவி சித்தா மருத்துவர். அவர் சித்தா மருத்துவம் பார்ப்பதற்காக படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அந்த வீட்டில் போட்டிருந்தேன். ஹாலில் உள்ள ஒரு பகுதியை சித்தா மருத்துவத்துக்கான அலுவலகமாக பயன்படுத்த முடிவு செய்திருந்தேன். அங்கு தங்கியிருந்த 7 பெண்களும் பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள் என்பதால் பகலில் ஹாலை சித்தா மருத்துவத்துக்கு பயன்படுத்த அனுமதித்தனர்.

    எனவே பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்றபிறகு அங்கு வந்து விடுவேன். இதனால் கேமரா பொருத்துவது எனக்கு வசதியாக போய்விட்டது.

    வீட்டை வாடகைக்கு எடுத்தபோதே என்ஜினீயர் வேலை முடிந்ததும் கேமராக்களை நானே ரகசியமாக பொருத்தினேன். இந்த கேமராக்களை ஆன்லைன் இணையதளத்தில் வாங்கினேன். ஒவ்வொரு கேமராவும் ரூ.2,500 ஆகும்.

    இவை அனைத்துமே உளவுத்துறையினர் பயன்படுத்தும் ரகசிய கேமரா ஆகும். பட்டன் வடிவில், ஹேங்கர் வடிவில் இந்த கேமராக்கள் இருந்தன. இந்த கேமராக்களில் மெமரி கார்டையும் பொருத்தி இருந்தேன்.

    இந்த கேமரா ஆட்கள் நடமாடும் சத்தம் இருந்தால் மட்டுமே பதிவு செய்யும் கேமரா ஆகும். மற்ற நேரங்களில் இயங்காது. இந்த கேமராக்கள் மூலம் மெமரி கார்டில் பதிவான படங்களைத்தான் பார்க்க முடியும் என்பதால் தற்போது நவீன தொழில் நுட்பத்துடன் வைபை மூலம் இயங்க கூடிய 3 குண்டு பல்புகளுடன் கூடிய கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன். இந்த கேமராக்களை பொருத்தினால் மெமரி கார்டை கழற்ற தேவையில்லை. வைபை மூலமே ஆபாச காட்சிகளை பார்க்கலாம் என்பதால் அதை பொருத்த முடிவு செய்திருந்தேன். ஆனால் அதற்குள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சம்பத்ராஜ் இதற்கு முன்பு தேனாம்பேட்டையில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டபோது தனது நிறுவனத்தில் வேலை செய்த பெண்களை ஆபாச படம் எடுத்து வைத்திருந்தார். அந்த சி.டி.யை போலீசார் கைப்பற்றினார்கள். கட்டுமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததால் அவர் பெண்கள் விடுதியை நடத்தினார்.

    மேலும் சம்பத்ராஜ் மீது வளசரவாக்கம், விருகம்பாக்கம், பெங்களூர் போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகளும் பதிவாகி உள்ளன. #AdambakkamHostel 
    சென்னை ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #AdambakkamHostel
    ஆலந்தூர்:

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து வேலை செய்யும் பெண்கள் தங்களது பாதுகாப்பு கருதி, தனியார் விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.

    இதனால் சென்னையில் புற்றீசல் போல் பெண்கள் விடுதிகள் முளைத்துக் கொண்டே உள்ளன.

    இதனை நடத்துபவர்களே பெண்களின் பாதுகாப்பு வி‌ஷயத்தில் அக்கறை காட்டாமல் வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.

    அந்த வகையில் சென்னை ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் ஆபாச படம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து பெண்கள் தங்கும் விடுதி நடத்தி வந்தவர் சஞ்சீவ்.

    இந்த விடுதியில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து 10-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர்.

    இதற்கிடையே அறைகளில் சீரமைப்பு பணி என்ற பெயரில் சஞ்சீவ் சில வேலைகளை செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் விடுதியில் தங்குவதற்காக வந்தார்.

    அவர் வைத்திருந்த செல்போனில் மறைவாக வைக்கப்பட்டு இருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டு பிடிக்கும் ‘ஹைடன் கேமிரா, டிடெக்டர் ஆப்’ என்னும் செயலி இருந்தது.

    அதன் மூலம் அவர் விடுதி அறையில் ரகசிய கேமிராக்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தார். அப்போது குளியல் அறை, படுக்கை அறை, துணிகள் தொங்கவிடும் கைப்பிடி உள்ளிட்ட இடங்களில் சிறிய வகை ரகசிய கேமிராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதனை கண்டு அங்கு தங்கி இருந்த இளம்பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். துணை கமி‌ஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் கெங்கைராஜ், இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரகசிய கேமிரா.

    இதையடுத்து போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமிராக்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக சஞ்சீவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆதார் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஏராளமான போலி ஆவணங்கள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான சஞ்சீவ் திருச்சியை சேர்ந்தவர். தாம்பரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுகிறார்.

    இவர் பெண்கள் தங்கும் விடுதி என்று சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து இளம்பெண்களை சேர்த்துள்ளார். பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே விடுதி இருந்ததால் போக்குவரத்து வசதியை கருதி பெண்கள் இதில் தங்கி உள்ளனர்.

    சஞ்சீவிடம் இருந்து ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதால் அதனை அவருக்கு தயாரித்து கொடுத்தவர்கள் யார்? போலி ஆவணம் தயாரிக்கும் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரகசிய கேமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் அழித்தனர். இந்த காட்சிகளை பதிவு செய்தது ஏன்? என்பது குறித்தும் சஞ்சீவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


    விடுதியில் தங்கி இருந்த பெண்கள் அனைவரும் நேற்று மாலையே அறைகளை காலி செய்து வேறு இடத்துக்கு சென்று விட்டனர். அனுமதி பெற்று செயல்படும் பாதுகாப்பான விடுதியில் தங்குமாறு அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘இந்த இடத்தில் விடுதி செயல்படுவதே பலருக்கு தெரியாது. விடுதிக்கான எந்த அறிகுறியும் இல்லை. போர்டும் வைக்கவில்லை. இதுபோல் போலியாக செயல்படும் விடுதிகளில் பெண்கள் தங்கி பாதிக்கப்படக் கூடாது’ என்றனர்.  #AdambakkamHostel
    ×