search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palestine"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரியை நாஜிக்களுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தார் கொலம்பியா அதிபர் பெட்ரோ.
    • இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் பெட்ரோ அறிவித்துள்ளார்.

    பெகோட்டா:

    இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபா நகரிலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.

    பெகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தினவிழாவில் பங்கேற்ற அதிபர் பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார். காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது. அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை.
    • தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இதில் காசாவில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.

    இந்த நிலையில் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்ற முயற்சியை பாலஸ்தீனம் மேற்கொண்டது.

    இதை பரிந்துரைக்கும் வரைவு தீர்மானத்தின் மீது 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    தற்போது பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக உள்ளது. ஐ.நா.வின் நடவடிக்கைகளில் பாலஸ்தீனம் பங்கேற்க முடியும். ஆனால் தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
    • 2014-ம் ஆண்டு இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, காசாவின் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்.

    பாலஸ்தீனத்தின் பிரதமராக முகமது இப்ராஹிம் ஷ்டய்யே இருந்து வந்தார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், தனது பொருளாதார ஆலோசகரான முகமது முஸ்தபாவை அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் (West Bank) பாலஸ்தீன அதிகாரிகத்திற்கு உட்பட பகுதியில் புதிய அரசை உருவாக்குவதில் இவரது பங்கு முக்கியமானதாக இருக்கும்.

    முகமது முஸ்தபா வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் சுதந்திர செயற்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

    பொருளாதார விவகாரத்திற்கான துணை பிரதமராக பணியாற்றியுள்ளார். பாலஸ்தீன முதலீடு நிதி குழுவில் பணியாற்றியுள்ளார். உலக வங்கியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர்.

    குவைத் அரசுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார். சவுதி அரேபியாவின் இறையாண்மை சொத்து நிதி, பொது முதலீட்டு நிதி ஆகியற்றின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். 2014-ம் ஆண்டு இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, காசாவின் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்.

    • ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா மீது தாக்குதல் நடத்துவம் அவசியம் என்கிறது இஸ்ரேல்.
    • சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பாலஸ்தீன மக்களுக்கு ஒரு இடத்தை உருவாக்க இஸ்ரேல் திட்டம்.

    கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.

    கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

    முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காசா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.

    வடக்கு காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக மற்ற பகுதிகளிலும் தங்களது தாக்குதலை விரிவுப்படுத்தியது. காசாவின் முக்கிய நகரான ரஃபாவை தவிர்த்து ஏறக்குறைய மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. காசாவில் உள்ள மொத்த மக்கள் தொகையான 2.3 மில்லியனில் 1.4 மில்லியன் மக்கள் ரஃபா நகரில் உள்ளன. ரஃபா பாதுகாப்பான பகுதியை என மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இங்கு தாக்குதல் நடத்தப்பட்டால் பொதுமக்கள் என்ன ஆவார்கள் என்று நினைத்து பார்க்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளத. இந்த நிலையில் தாக்குல் நடத்தப்பட உள்ளதால், மக்கள் வெளியேறுமாறு உத்தரவிட இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காசா முனைக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு ரஃபா எல்லை முக்கியமானதாக திகழ்கிறது. இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாலஸ்தீன மக்கள் உதவிப் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏற்கனவே மக்கள் பட்டினி விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 31 ஆயிரம் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 80 சதவீத மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக இஸ்ரேல் தலைமை ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில் "1.4 மில்லியன் மக்கள் அல்லது அதில் குறிப்பிட்டுள்ள அளவு மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வது அவசியம். எங்கே?. சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து அதற்கான ஒரு இடத்தை உருவாக்குவோம். ஹமாஸ் நிர்வகித்து வரும் நான்கு பட்டாலியன்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் ரஃபா மீது தாக்குதல் நடத்த தயாராகவதற்கு மக்களை வெளியேற்றுவது முக்கிய பகுதியாகும்" என்றார்.

    • காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் வீடுகளை காலி செய்து முகாமில் தங்கியுள்ளனர்.
    • லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா. தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது.

    காசா மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்க்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தாலும், இந்த போரில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீர்குலைந்துள்ள வடக்கு காசாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

    சாலை வழியாக உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு காசாவில் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு வான்வழியாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யும்போது பாராசூட் செயல்படாமல் உணவு பொட்டலங்களுடன் மக்கள் மீது விழுந்தது. இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.

    இதற்கிடையே லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் தவித்து வருவதாக ஐ.நா. தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வந்தது. இந்த நிலையில் பிரபல சமையல் கலைஞர் ஜோஸ் அன்ட்ரேஸ் காசாவிற்கு உணவு பொருட்கள் சேகரித்து வழங்க முடிவு செய்தார். அவரது அறக்கட்டளை மூலம் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டது.

    சுமார் 200 டன் உணவுப் பொருட்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த உணவு பொருட்கள் கப்பல் மூலம் காசா கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருந்து காசாவிற்கு கப்பல் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று உணவுப் பொருட்களுடன் சைப்ரஸ் நாட்டில் இருந்து கப்பல் புறப்பட்டுள்ளது.

    இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கப்பல் காசா சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உணவுப் பொருட்கள் மற்றும் உதவி பொருட்கள் வழங்க காசா அருகே கடல் பாலம் அமைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்த கடல் பாலம் செயல்பாட்டிற்கு வர பல வாரங்கள் ஆகலாம். இதற்கிடையே அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ராணுவ உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் வினியோகம்

    ஐந்து மாத போரில் காசாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில், பெரும்பாலான மக்கள் தங்களது வீட்டில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து பொதுமக்களை படுகொலை செய்தனர். சுமார் 1200 பேரை கொலை செய்த நிலையில் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    சண்டைக்கிடையில் ஒரு வாரம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    • நான்கு நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே ஏற்பட்டது.
    • பின்னர் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டு ஏழு நாளாக அதிகரித்தது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல் 240 பேரை பிணைக்கைதிகளைாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 46 நாட்கள் இடைவிடாத தாக்குதலில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

    இதனால் உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் போர் நிறத்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டன. இதன் பயனாக கடந்த 24-ந்தேதி வெள்ளிக்கிழமை இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஒரு பிணைக்கைதியை விடுவிக்க 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்பட்டது.

    முதல் நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது 50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின் இரண்டு நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது.

    நேற்று மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. 7-வது நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்றது. ஹமாஸ் அமைப்பினர் அனைத்து பாலஸ்தீனர்களையும் ஜெயிலில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினர் அனைவரையும் விடுதலை செய்கிறோம் எனத் தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் எனத் தெரிவித்தது. இதனால் இழுபறியான நிலையில் கடைசி நிமிடத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இதனால் 7-வது நாளான நேற்று ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்தனர். இஸ்ரேல் ஜெயிலில் இருந்து பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் ஏழு நாள் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வருகிறது. இதனால் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையே பிணைக்கைதிகள்- பாலஸ்தீனர்கள் விடுதலை பரிமாற்றத்திற்காக இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதை விரும்புவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    உலக நாடுகளும் இதைத்தான் விரும்புகின்றன. இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டணி பிளிங்கடன், "இந்த நடைமுறை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்பதை பார்க்கிறோம். 8-வது நாள், அதையும் தாண்டி இருக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

    இஸ்ரேல் தெற்கு காசாவில் தாக்குதலை விரிவுப்படுத்தினால் மக்கள் அதிகமான அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பாதுகாப்பான இடத்தை உருவாக்கி, அந்த இடத்தில் குண்டு மழை பொழியாது என்பதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்த அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுதத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஹமாஸ் இடைக்கால போர் நிறுத்த செயல்பாட்டை மீறிவிட்டது. கூடுதலாக இஸ்ரேல் பகுதி மீது தாக்குல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    இதனால் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததுள்ளது.

    • முதலில் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. பின்னர் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
    • ஹமாஸ் ஒரு பிணைக்கைதியை விடுவிக்கும்போது, இஸ்ரேல் 3 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்.

    ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கத்தார், எகிப்பு, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டன.

    இதன் பயனாக இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதற்குப் பதிலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. ஒரு பிணைக்கைதிக்கு மூன்று பாலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் பரிமாற்றம் நடைபெற்றது.

    முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. நேற்று 6-வது நாளாக ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதற்குப் பதிலாக இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை விடுவித்தது.

    இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் 6 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடருமா? போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவு இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் "ராணுவ நடவடிக்கை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது அப்படியே தொடரும். வரையறைக்கு உட்பட்டு மத்தியஸ்தரர்கள் பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு தொடருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் ஒரு பிணைக்கைதியை விடுவிக்கும்போது, இஸ்ரேல் 3 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து விடுவிக்கும். மேலும், காசாவிற்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

    கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் எதிர்பாராத வகையில் கொடூர தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.

    ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் 1200 பேரும், இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

    • ஆறு நாள் போர் நிறுத்தத்தின்போது பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர்.
    • பிணைக்கைதிகளுக்குப் பதிலாக பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்களை ஹமாஸ் விடுவித்து வந்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்படுள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

    நான்கு நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு மேலும் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்றிரவு கடைசி கட்டமாக 10 இஸ்ரேலியர்கள், நான்கு தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் விடுவித்துள்ளது. காசா முனையில் இருந்து எகிப்து ராபா எல்லையில் அவர்கள் விடப்பட்டுள்ளனர்.

    மருத்துவ பரிசோதனைக்குப்பின் குடும்பத்தினருடன் சேர்க்கப்படுவார்கள் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடைசி கட்டமாக பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள்.

    இன்று காலை 10.30 மணியுடன் ஆறு நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. அதன்பின் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொள்ளும்.

    10 மாத குழந்தை மற்றும் அந்த குழந்தையின் குடும்பத்தினரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்கள் காசா மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் இஸ்ரேல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்தம் ஒப்பந்தம் காரணமாக பிணைக்கைதிகள் விடுவிப்பு.
    • பெற்றோரை இழந்த பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தினர். இரண்டு நிமிடத்திற்குள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர்.

    மேலும் 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் சிறு குழந்தைகள் உள்பட 84 வயது முதியோர் வரை அடங்குவர்.

    46 நாட்களுக்கு மேல் சண்டை நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அந்த போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

    முதல் நான்கு நாட்களில் 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

     

    ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ள செய்தி நிறுவனங்கள் முயற்சி செய்தன.

    ஆனால், மருத்துவமனைகளுக்கு தகவலை பரிமாறிக் கொள்ளவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தகவல் கசிந்துள்ளது. வடக்கு காசாவில் பிடிக்கப்பட்ட தாய்லாந்தை சேர்ந்த 17 பேர் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் உள்ள அதிகாரி மூலம் பிணைக்கைதிகள் எதிர்கொண்ட இன்னல்கள் தெரியவந்துள்ளது.

    அவர்களுக்கு மிகவும் குறைந்த ஊட்டச்சத்து குறைந்த உணவுகளே கொடுக்கப்பட்டடுள்ளத. மேலும், கொஞ்சமாக அரிசி உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, ஃபவா பீன்ஸ், சில நேரங்களில் பிட்டாவுடன் உப்பு கலந்த சீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து மற்ற ஏதும் வழங்கப்படவில்லை. காய்கறிகள், முட்டை போன்ற உணவுகள் வழங்கவில்லை.

    பலர் தங்களுடைய எடையில் 10 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் குறைந்துள்ளனர். அவர்களுக்கு ஒளி (வெளிச்சம்) காட்டப்படவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வெளிச்சம் காட்டப்பட்டுள்ளது.

    தங்களது தகவலை பரிமாறிக்கொள்ள பேனா அல்லது பென்சில் கேட்டபோது, அதற்கு ஹமாஸ் அமைப்பினர் அனுமதி அளிக்கவில்லை. எழுத்து மூலம் தகவலை பரிமாற்றம் செய்யக்கூடும் என பயந்ததால் அனுமதிக்கவில்லை. தொலைக்காட்சி, வாசிப்பு தொடர்பானதுக்கும் அனுமதிக்கவில்லை. ஒருவர் மூலம் ஒருவர் என்ற வகையில் தகவலை பரிமாறிக் கொள்ள அனுமதித்துள்ளனர். முதியவர்கள் தூங்குவதற்கு சிரமப்பட்டுள்ளனர். சேரில் இருந்தவாறு தூங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு இன்னல்களை சந்தித்ததாக மருத்துவமனை அதிகாரி தகவலை பகிர்ந்துள்ளார்.

    இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் விடுவிக்கப்பட்ட பிறகு தங்களது தாயாரை சந்திக்கும் மகிழ்ச்சியில் வந்தபோது, ஹமாஸ் தாக்குதலின்போது உயிரிழந்ததாக அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் மனவேதனை அடைந்தனர்.

    • 50 பிணைக்கைதிகளை விடுவிக்க 4 நாள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    • மேலும் 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் செய்யப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதிலடியாக காசா மீது போர் தொடுத்தது. இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் காசா சீர்குலைந்தது. சுமார் 46 நாட்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை நான்கு நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    இந்த நான்கு நாட்களில் ஹமாஸ் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதேவேளையில் இஸ்ரேல், தங்கள் நாட்டின் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

    அதன்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர். இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது. இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் போர் நிறுத்தம் ஒப்பந்தும் முடிவடைகிறது.

     போர் நிறுத்தம் முடிவடைந்ததும், தாக்குதலை தொடங்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார். இதனால் எகிப்து, கத்தார், அமெரிக்கா போர் நிறுத்தத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தின. இந்த நிலையில் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நான்கு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேலியர்களுடன் வெளிநாட்டினரையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து வருகிறார்கள்.
    • தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாட்டினரை தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமி விடுவிப்பு.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை ரிலீஸ் செய்து வருகிறார்கள். நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது, ஒவ்வொரு நாளும் 13 இஸ்ரேலியர்கள் என்ற அடிப்படையில் பிணைக்கைதிகளை விடுவிக்கின்றனர்.

    அதேவேளையில் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டினரையும் விடுவித்து வருகின்றனர். அந்த வகையில நேற்று 3-வது கட்டமாக 13 இஸ்ரேலியர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறுமி உள்பட நான்கு வெளிநாட்டினர் என 17 பேரை விடுவித்தது.

     அமெரிக்காவைச் சேர்ந்தவர் 4 வயது சிறுமியாகும். அவரது பெயர் அபிகெய்ல் ஈடன். இவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர். கடந்த மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்ரகவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது, இவரது வீட்டிற்குள் நுழைந்து தந்தை மற்றும் தாயை சுட்டுக் கொன்றுள்ளனர்.

    அப்போது பக்கத்து வீட்டில் சென்று தஞ்சம் அடைந்துள்ளார் அபிகெய்ல் ஈடன். பக்கத்து வீட்டிற்குள்ளும் நுழைந்த பயங்கரவாதிகள் அந்த குடும்பத்துடன் இவரையும் சேர்த்து பிணைக்கைதிகளாக பிடித்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து மூன்று குழந்கைகள், குழந்தைகளின் தாய் மற்றும் ஈடன் ஆகிய ஐந்து பேரும் காணாமல் போனர். பின்னர் பிணைக்கைதிகளை பிடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

    இந்த நிலையில் அபிகெய்ல் ஈடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "கடவுளுக்கு நன்றி, அந்த சிறுமி வீட்டில் இருக்கிறார். அவளை கட்டிப்பிடித்து சந்தோகத்தை வெளிப்படுத்த அங்கே இருக்க விரும்புகிறேன். அவள் இஸ்ரேலில் பத்திரமாக இருக்கிறாள்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு இன்னும் அதிகமான பிணைக்கைதிகளை விடுவிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    பின்னர், அமெரிக்காவில் உள்ள அந்த சிறுமியின் குடும்பத்துடன் பேசியதாகவும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடமும் பேசியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்திய நேரப்படி நாளை காலை 10.30 மணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து தாக்குதலை தொடர்வோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க ஒருநாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான முயற்சிகளை மத்தியஸ்தரராக செயல்பட்டு வரும் கத்தார் மேற்கொண்டு வருகிறது.

    ஒவ்வொரு இஸ்ரேலியர் விடுதலைக்கும் 3 பாலஸ்தீனர்களை ஜெயிலில் இருந்து விடுவிக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது. அதன்படி 39 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 117 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து இஸ்ரேல் விடுவித்துள்ளது.

    நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்களை விடுவிக்கவும், கசாவிற்கு மனிதாபிமான உதவிகள் சென்றடையவும் இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது.

    • ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது.
    • 2-வது கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த 13 பேர், தாய்லாந்தை சேர்ந்த 4 பேர் என 17 பேரை ஹமாஸ் விடுவித்தது.

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.

    நேற்று முன்தினம் போர் நிறுத்தம் தொடங்கியது. அன்று 13 இஸ்ரேலியர்கள், 11 வெளிநாட்டினர் என 24 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

    தொடர்ந்து நேற்று நள்ளிரவில் 2-வது கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த 13 பேர், தாய்லாந்தை சேர்ந்த 4 பேர் என 17 பேரை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர்.

    இந்நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள துல்கரேம் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் உளவு பார்த்து தகவல் கொடுப்பதாக அவர்களை பாலஸ்தீன போராளிகள் பிடித்தனர்.

    இஸ்ரேல் படைகள் 24 மணி நேரத்தில் குறைந்தது 8 பாலஸ்தீனர்களை கொன்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளானர்.

    அந்த 8 பேரையும் கும்பல் ஒன்று கொலை செய்தது. பின்னர் அவர்களது உடல்களை தெருக்கள் வழியாக இழுத்து சென்றனர். அப்போது உடல்களை கால்களால் எட்டி உதைத்தனர். அதன் பின் 8 பேரின் உடல்களை மின் கம்பத்தில் தொங்கவிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×