search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹமாஸ் இஸ்ரேல் போர்"

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல்.
    • 1200 பேரை கொன்று குவித்ததுடன், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென காசா எல்லையைத் தாண்டி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்தனர். இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், 250 பேரை பிணைக்கைதிகளை பிடித்துக் சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்திய தொடங்கியது. ஏழு மாதங்களாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் அமைப்பினர் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு, இஸ்ரேல் ராணுவத்தின் உளவுத்துறை தோல்வியும் முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை உயர்அதிகாரிகளும் பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜானாமா செய்யாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று ராணுவத்தின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இஸ்ரேல் ராணுவத்தின் தலைசிறந்த பாதுகாப்பு அமைப்பை முறியடித்து இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தடுக்க முடியாததற்கு தான் பொறுப்பேற்பதாக தாக்குதல் நடைபெற்ற பிறகு ஹலிவா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில் 1200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தல்.
    • உலக நாடுகள் வலியுறுத்தலை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 4-வது மாதமாக தொடரும் இந்த தாக்குதலில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் இன்னும் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவிக்காத நிலையில் போர் நீடித்துக் கொண்டே இருக்கிறது. எங்களது இலக்கை எட்டும் வரை போர் பல மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.

    25105 பேர் உயிரிழந்த நிலையில் 62681 பேர் காயம் அடைந்துள்ளனர். சனிக்கிழமையில் இருந்து தற்போது வரை 178 உடல்கள் காசாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    காசா மீதான தாக்குதலில் இதுவரை 195 வீரர்களை இழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    காசாவில் உள்ள 85 சதவீதம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். காசாவில் மொத்தம் 23 லட்சம் பேர் வசித்து வந்த நிலையில், மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் பட்டினியால் வாடுவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    அதன்பின் இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    • ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது.
    • பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவதால், போரை நிறுத்த உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. மூன்று மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் இப்போரில் குழந்தைகள், பெண்கள் என அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகிறார்கள்.

    காசா முழுவதிலும் இஸ்ரேலின் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. போரில் பாலஸ்தீனியர்களை குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை இஸ்ரேல் மறுத்து வந்தது.

    இதற்கிடையே காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச கோர்ட்டில் தென்ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது.

    காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்கவும், உடனடி போர் நிறுத்தத்தை கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை இன்று கோர்ட்டில் தொடங்குகிறது. இதில் இஸ்ரேல் ஈடுபடுவது போர் இனப்படுகொலைகள் என தென் ஆப்பிரிக்கா வாதிடவுள்ளது. மேலும் போர் நடவடிக்கைகளுக்கு கோர்ட்டு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்காவின் கோரிக்கை குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் வாதிட சட்டக்குழுவை இஸ்ரேல் அனுப்பி உள்ளது.

    இவ்வழக்கில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள நாடுகளும் தங்களது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும்.

    இதற்கிடையே காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. காசா முழுவதும் இஸ்ரேல் ஏவுகணை, குண்டுகளை வீசிவருகிறது.

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் ஹமாஸ்க்கு ஆதரவாக ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது.
    • லெபனானின் தெற்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. மூன்று மாதங்களை கடந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் லெபனான் தெற்குப் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று சொகுசு காரில் சென்ற ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதியை குறிவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லா தளபதி விஸ்ஸாம் அல்-டவில் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது.

    லெபனானின் தெற்குப் பகுதியில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா குழுவின் தளபதியாக செயல்பட்டு வந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இது ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆத்திரமூட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல்- காசா இடையிலான சண்டை மத்திய கிழக்கு போராக விரிவடையும் என அச்சம் நிலவுகிறது.

    அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டதன் காரணமாக சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

    காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 23 லட்சம் மக்கள் தொகை கொண்ட காசாவில் இருந்து சுமார் 85 சதவீதம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

    • பிணைக்கைதிகளை மீட்கும்வரை போர் தொடர்ந்து நடைபெறும்.
    • இஸ்ரேல் குடிமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உள்ளூர் அமைப்புகள் மூலம் காசா நிர்வகிக்கப்படும்.

    இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் காசா பகுதியின் போருக்குப் பிந்தைய நிர்வாகத்திற்கான தனது திட்டத்தை முன்வைத்தார்.

    போர் முடிவடைந்த பின்னர் பாலஸ்தீன பகுதியை ஹமாஸ் அல்லது இஸ்ரேல் ஆளப்போவதில்லை. கடந்தாண்டு அக்டோபர் 7-ந்தேதி பிடித்துச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளை மீட்டெடுக்கும் வரை, ஹமாஸின் ராணுவ மற்றும் ஆளும் திறன்களை சிதைத்து, எஞ்சியிருக்கும் ராணுவ அச்சுறுத்தல்களை அகற்றும் வரை போர் தொடரும்.

    ஹமாஸ் கட்டுப்படுத்தாத வகையில், இஸ்ரேல் குடிமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உள்ளூர் அமைப்புகள் மூலம் காசா நிர்வகிக்கப்படும்.

    போரின் இலக்குகள் அடையப்பட்ட பிறகு காசா பகுதியில் இஸ்ரேலியர்களின் நடமாட்டம் இருக்காது. ஆனால் இஸ்ரேல் அப்பகுதிக்குள் செயல்படும் திறனை தக்க வைத்துக் கொள்ளும்.

    காசாவில் வாழும் மக்கள் பாலஸ்தீனியர்கள். எனவே பாலஸ்தீனிய அமைப்புகள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக விரோத நடவடிக்கைகளோ அச்சுறுத்தல்களோ இருக்காது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் அமைப்பு நிர்வாகத்தில் அமர்த்தப்படும்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று மத்திய கிழக்கு பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இந்த திட்டத்தை முன்வைத்துள்ளார்.

    • இஸ்ரேல் தாக்குதலால் வடக்கு காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தெற்கு பகுதியில் தஞ்சம்.
    • மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில் மழை, குளிரால் மேலும் அவதி.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான போரால் காசா மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து தெற்கு காசாவில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் உயிரை கையில் பிடித்தப்படி இருக்கிறார்கள். மேலும் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு உள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் காசாவில் ரபா நகரில் மழை பெய்து வருகிறது. மேலும் கடும் குளிரும் நிலவி வருகிறது. அதேபோல் மற்ற பகுதிகளிலும் மழை பெய்கிறது. இதனால் கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் அவதி அடைந்துள்ளனர். ஏற்கனவே உணவு பற்றாக்குறையால் தவிக்கும் காசா மக்களுக்கு தற்போதைய மழை துயரத்தை அதிகப்படுத்தி உள்ளது.

    • காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய குழு இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    லெபனான் இஸ்ரேல் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள ஷியா மாவட்டத்தில் உள்ள கட்டடத்தை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் சீனியர் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வரும் பகுதியிலேயே இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன தலைவர்களை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா தலைவர் சயத் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

    கொல்லப்பட்ட தலைவர் சலா அரூரி என்றும், குழுவின் ராணுவ பிரிவின் நிறுவனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் டிரோன் மூலம் இந்த தாக்குதலை நடத்தியதாக லெபனான் நாட்டின் தேசிய நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் இதற்கு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர், நாங்கள் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போரில் கவனம் செலுத்துவோம் என்றார்.

    ஆனால் அவர் நேரடியாக சலா அரூரி மரணம் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. நாங்கள் எந்த சூழ்நிலையிலும் தயாராக இருக்கிறோம்" என்றார்.

    • தாக்குதலை அதிகப்படுத்துவதுதான் பிணைக்கைதிகள் விடுவிப்பதற்கான வழி என இஸ்ரேல் நம்புகிறது.
    • நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட்டால்தான் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை.

    காசாவில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகிறது என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மனிதாபிமான உதவிகள் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கும் வகையில் இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

    காசாவின் வடக்கு பகுதிகளை மட்டுமே தாக்கிவந்த இஸ்ரேல் ராணுவம் தெற்குப் பகுதி, மத்தியப் பகுதி என அனைத்தும் இடங்களிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    காசாவில் மொத்தம் 2.3 மில்லியன் (23 லட்சம் மக்கள்) பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் 85 சதவீதம் பேர் வீட்டைவிட்டு வெளியேறி மருத்துவமனை, முகாம்களில் தங்கி வருகின்றனர். இவ்வாறு மருத்துவமனை, முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு போதுமான வகையில் உணவு அளிக்க முடியவில்லை என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தியபோது, மக்கள் அனைவரும் தெற்குப் பதிகுதிக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது அங்கேயும் தாக்குதல் நடத்தப்படுகிறது. மருத்துவமனை, முகாம் என எல்லா இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது இஸ்ரேல ராணுவம். இதனால் எங்கு செல்வது எனத் தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

    இதற்கிடையே மனிதாபிமான உதவிப் பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால். இதனால் உடனடியாக போரை நிறுத்தி, உதவிப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்கா பாராளுமன்ற அனுமதி பெறாமலேயே அவசரகால உதவி என்ற அடிப்படையில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்கியுள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 போர் கொல்லப்பட்டனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா முற்றிலும் சிதைந்துள்ளது. இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 9 ஆயிரம் பேர் சிறுமிகள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள்.

    போரின் நடுவே ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்து சுமார் 300 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    • ஒரு வாரம் இடைக்கால போர் நிறுத்தம் காரணமாக சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
    • 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் சுமார் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலால் சுமார் 85 சதவீத மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாமில் தங்கியுள்ளனர்.

    வடக்கு காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் தங்க இடமின்றி அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்திய போதிலும், போர் நிறுத்தப்படவில்லை.

    இந்த நிலையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர். அதேவேளையில் காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரின் அச்சுறுத்தல் இஸ்ரேலுக்கு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை தாக்குதல் தொடரும். இன்னும் மாதம் கணக்கில் போர் நீடிக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.

      இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    சுமார் ஒரு வாரம் போர் இடைநிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவித்தனர். ஒரு பிணைக்கைதிக்கு 3 பாலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இஸ்ரேல் விடுதலை செய்தது.

    • காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதுவரை காசாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    காசா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். வான் வழியாக சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால் தினமும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவு உயிர் துறந்து வருகின்றனர். சாவு எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி விட்டது.

    இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள விமான நிலையங்களை பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    லாஸ்ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். கையில் பதாகைகள் ஏந்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. விமான நிலைய நுழைவு வாயிலை அவர்கள் முற்றுகையிட்டனர்.

    விமான நிலையத்துக்கு செல்லும் ரோட்டில் கட்டிட குவியல்கள், மரக்கிளைகள், தடுப்புகள் போன்றவற்றை போட்டு அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி ஒருவரை அவர்கள் தாக்கினார்கள். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர். 45 நிமிடங்களுக்கு பிறகு விமான நிலையத்தை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த போராட்டத்தால் விமானங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. விமான பயணிகள் பத்திரமாக உள்ளனர். அவர்களை மீட்க 2 பஸ்களை பாதுகாப்பு படையினர் அனுப்பி வைத்தனர்.

    இதே போல நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்திலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் அவர்கள் கையில் பதாகையுடன் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் 26 பேரை கைது செய்தனர்.

    • காசாவில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
    • ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போர் பல மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேல் சொல்கிறது.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. போர் விமானங்கள் மூலம் குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் காசாவுக்குள் இஸ்ரேல் தரைப்படையும் தாக்குதல் நடத்துகிறது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், அதன்பின் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. மத்திய, தெற்கு, காசாவிலும் குண்டுகள் வீசப்படுகிறது.

    இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்கள் என பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. காசா முனை பகுதி முழுவதும் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் உயிர் பயத்தில் இருக்கிறார்கள்.

    காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மத்திய காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய காசா பகுதியில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகர்ப்புற அகதிகள் முகாம்களில் தரைவழி தாக்குதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வடக்கு, தெற்கு காசாவை தொடர்ந்து மத்திய காசாவிலும் தரைவழி தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி கூறும்போது, ஹமாஸ் மீதான போர் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கலாம். ஹமாஸ் அமைப்பை தகர்ப்பதில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை. உறுதியான மற்றும் தொடர்ச்சியான சண்டைகள் மட்டுமே நடக்கின்றன. நாங்கள் ஹமாசின் தலைமையை அழிப்போம். அதற்கு சில மாதங்கள் எடுக்கலாம் என்றார்.

    இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

    • கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 15 பேர் பலி.
    • பாலஸ்தீனத்தில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வடக்கு, தெற்கு, மத்தியப் பகுதி என காசாவின் அனைத்து பகுதியிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் சொல்கிறது.

    தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நேருக்கு நேர் தரைவழியில் சண்டையிட்டு வருவதால் ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை 154 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

    கடந்த வாரத்தில் மட்டும் 15 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. தெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உளள் மகாஜி அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலில் குறைந்தது 60-க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 15 வீரர்களை இழந்ததையடுத்து, மிகவும் அதிகப்படியான விலை என இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு எகிப்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், 240 பேர் பிணைக்கைதிகளை பிடித்துச் சென்றனர். தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசாவின் தெற்கு பகுதியை குறிவைத்து கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது. தற்போது காசா முழுவதும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 20,400 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    ×