search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padma Awards"

    • 2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன

    2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன.

    இந்நிலையில், இன்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு, பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    விளையிட்டு துறையில் சிறந்து விளங்கிய டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஹன் போபண்ணாவிற்கு பதம்ஸ்ரீ விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    கலைத் துறையில் சிறந்து விளங்கிய பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கினார்.

    கலைத் துறையில் சிறந்து விளங்கிய நாட்டுப்புற நடனக் கலைஞர் நாராயணன் ஈபி, வங்கதேச பாடகி திருமதி ரெஸ்வானா சவுத்ரி பன்யா, பஜனை பாடகர் ஸ்ரீ கலுராம் பாமணியா ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய தேஜஸ் மதுசூதன் படேல் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கிய சீதாராம் ஜிண்டாலுக்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    சமூக பணி துறையில் சிறந்து விளங்கிய பிந்தேஷ்வர் பதக்கிற்கு (மரணத்திற்கு பின்) பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த விருதை அவரின் மனைவி அமோலா பதக் பெற்று கொண்டார்.

    விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங் லோஹியாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய ராம் சேத் சவுத்ரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய மனோகர் கிருஷ்ணா டோலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    • 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷன், 110 பேருக்கு பத்மஸ்ரீ என 132 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு பத்ம விருதுநகள் வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் என மூன்று பிரிவுகள் உள்ளன.

    2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷன், 110 பேருக்கு பத்மஸ்ரீ என 132 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பை இந்தியா மதிக்கிறது. அவர்கள் தங்கள் சிறப்பான பணிகளால் மக்களை ஊக்குவிக்கட்டும் என கூறியுள்ளார்.

    • இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.
    • கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி.

    2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த பத்திரப்பன் என்பவருக்கு கலைப்பிரிவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

    கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நாட்டுப்புற கலைஞர் பத்ரப்பன் என்பவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    87 வயதான பத்ரப்பன் தனது நடனம் மூலம் இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.

    கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் கவுரவிக்கப்படுகிறார்.

    இதில், பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவை என்ற முகவரிக்கு ஜூலை 31-ந் தேதிக்கு முன்பாக சமர்பிக்க வேண்டும்.
    • அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு தகுதியான வர்களை தேர்வு செய்து பரிந்துரை செய்யும்.

    புதுச்சேரி:

    புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசின் உயர் விருதான பத்ம விருதுகள் 1954-ம் ஆண்டு தோற்று விக்கப்பட்டு, பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ என 3 வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

    2024 குடியரசு தின விழாவில் அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுக்கான தகுதியாளர்கள் தேர்வு நடக்கிறது. தகுதியானர்கள் தேவையான ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி, விளம்பரத்துறை, 18 பெல்காம் வீதி புதுவை என்ற முகவரிக்கு ஜூலை 31-ந் தேதிக்கு முன்பாக சமர்பிக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர் புதுவை மாநிலத்தை சேர்ந்த வராக இருக்க வேண்டும். அரசின் இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்யலாம். அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு தகுதியானவர்களை தேர்வு செய்து பரிந்துரை செய்யும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது . இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

    • பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    • தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களுக்கும் மற்றும் பத்ம விருது பெற்றவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் ஆபத்தான பாம்புகளை கையாள்வதில் நமது பூர்வ குடிகள் கொண்ட அறிவின் களஞ்சியமாக விளங்குபவர்கள். ஏராளமான விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றிய அரிய பாம்பு விஷங்களை சேகரிப்பதிலும் இவர்கள் உதவி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதேபோல் தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இருளர் சமுதாயத்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாம்பு பிடி நிபுணர்கள் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ பா.ஜ. க சார்பில் நன்றி களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    • 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • ஓஆர்எஸ் கரைசலை கண்டுபிடித்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது

    புதுடெல்லி:

    கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை இன்று மத்திய அரசு இன்று அறிவித்தது. 

    தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களும் சமூக ஆர்வலர்களுமான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பாம்பு பிடிப்பது குறித்து உலக அளவில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

    மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதை கவுரவிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இறப்புக்கு பிந்தைய பத்ம விருதாக இது வழங்கப்படுகிறது. ஓஆர்எஸ் கரைசலை கண்டுபிடித்த இவர், உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1971-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடைபெற்ற விடுதலைப் போரின்போது, அகதிகள் முகாமில் இவர் பணியாற்றி வந்தார். அப்பகுதியில் வேகமாகக் காலரா பரவி மக்களை அச்சுறுத்தி வந்தது. அந்நேரம், டாக்டர் திலீப், ஓ.ஆர்.எஸ். கரைசலை கொடுத்து ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்.

    • ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
    • இந்த விருதுகளுக்கான விதிகள் குறித்து இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

    பத்ம விருதுகளுக்கு https://awards.gov.in என்ற முகவரியில் உள்ள தேசிய விருதுகளுக்கான இணையதளத்தில் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த விருதுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் விருதுகள் மற்றும் பதக்கங்கள் பகுதியிலும், பத்ம விருதுகளுக்கான இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.

    இந்த விருதுகளுக்கான சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்து https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அடுத்த குடியரசு தினத்தன்று விருதுகள் அறிவிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

    • பொதுசேவை புரிந்தவர்கள் பத்மா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.
    • குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக ஒன்றிய அரசாங்கம் பத்ம விருதுகள் வழங்க அறிவித்துள்ளது.

    கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15-ந் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகளைச் செய்தவா்களுக்கு குடியரசு தின விழாவின்போது பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
    • தோ்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    மத்திய அரசு 2023- ம் ஆண்டு ஜனவரியில் பத்ம விருதுகள்(பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ) ஆகிய விருதுகளை வழங்க உள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகளைச் செய்தவா்களுக்கு குடியரசு தின விழாவின்போது பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றுக்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய மத்திய அரசு இணையதளத்தை காணலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 15-ம் தேதிக்குள் தகுதியுடையோா் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை https://awards.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் உள்ளன. 

    இந்தியாவில் அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில் 2023-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை https://awards.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தலைநகர் டெல்லியில் நடந்த பத்ம விருது வழங்கும் விழாவில் 16 பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள்.
    புதுடெல்லி:

    கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இதற்கிடையே, 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. 

    இந்நிலையில், டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். 
    விருது பெற்றவர்களில் கங்கனா ரணாவத், அட்னான் சாமி, ஏக்தா கபூர், கரண் ஜோஹர் மற்றும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரும் அடங்குவர்.

    ×