search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "padmashri award"

    • 2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன

    2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன.

    இந்நிலையில், இன்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு, பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    விளையிட்டு துறையில் சிறந்து விளங்கிய டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஹன் போபண்ணாவிற்கு பதம்ஸ்ரீ விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    கலைத் துறையில் சிறந்து விளங்கிய பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கினார்.

    கலைத் துறையில் சிறந்து விளங்கிய நாட்டுப்புற நடனக் கலைஞர் நாராயணன் ஈபி, வங்கதேச பாடகி திருமதி ரெஸ்வானா சவுத்ரி பன்யா, பஜனை பாடகர் ஸ்ரீ கலுராம் பாமணியா ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய தேஜஸ் மதுசூதன் படேல் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கிய சீதாராம் ஜிண்டாலுக்கு பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    சமூக பணி துறையில் சிறந்து விளங்கிய பிந்தேஷ்வர் பதக்கிற்கு (மரணத்திற்கு பின்) பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த விருதை அவரின் மனைவி அமோலா பதக் பெற்று கொண்டார்.

    விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங் லோஹியாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய ராம் சேத் சவுத்ரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய மனோகர் கிருஷ்ணா டோலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

    • இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.
    • கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி.

    2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த பத்திரப்பன் என்பவருக்கு கலைப்பிரிவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

    கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நாட்டுப்புற கலைஞர் பத்ரப்பன் என்பவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    87 வயதான பத்ரப்பன் தனது நடனம் மூலம் இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.

    கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் கவுரவிக்கப்படுகிறார்.

    இதில், பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மாலிக் மற்றும் பிற விளையாட்டு வீரர்கள் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

    தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், "குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்க முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன்" என காட்டமாக பதிவிட்டார்.

    பஜ்ரங் புன்யாவை தொடர்ந்து, மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும் தடகள வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து விரேந்தர் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "எனது சகோதரியும், நாட்டின் மகளுக்காக, பிரதமர் நரேந்திர மோடியிடம் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன். உங்கள் மகள் மற்றும் எனது சகோதரி சாக்ஷி மாலிக்கைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். ஆனால், தங்களின் முடிவையும் முன்வைக்க வேண்டும் என நாட்டின் முன்னணி வீரர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ராவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

    ×