search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்ம விருது"

    • ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 105 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • பத்ம விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 மதிப்பூதியம் அளிக்கப்பட உள்ளது.

    புவனேஸ்வர்:

    கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 90 பேர் பத்ம ஸ்ரீ, 11 பேர் பத்ம பூஷண் மற்றும் 4 பேர் பத்ம விபூஷண் என மொத்தம் 105 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே தெலுங்கானா அரசு பத்ம விருது பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பர்பதி குடும்பத்தில் 40 யானைகள் வளர்த்துள்ளார்கள்.
    • மலைவாழ் மக்கள் முன்னேற்றத்துக்காக தனியாக ஒரு அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

    ஆண்டுதோறும் மத்திய அரசின் பத்ம விருது பெறுபவர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.

    ஆனால் இந்த ஆண்டு மக்கள் மத்தியில் பிரபலம் ஆகாமல் பிரமிக்கத்தக்க செயல்களை நாடு முழுவதும் ஆங்காங்கே செய்து கொண்டிருப்பவர்களை தேடி கண்டுபிடித்து விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இவர்கள் நிஜ ஹீரோக்கள்.

    அவர்களில் யானைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் பெண் யானை பாகன் என்ற பெருமைக்குரிய பர்பதிபரூவாவும் ஒருவர்.

    67 வயதாகும் பர்பதி அசாமின் அரச குடும்பத்தில் பிறந்தவர். அந்த காலத்தில் யானைகள் வளர்ப்பது பணக்கார குடும்பங்களில் அந்தஸ்தின் அடையாளமாக இருந்தது.

    அந்த வகையில் பர்பதி குடும்பத்தில் 40 யானைகள் வளர்த்துள்ளார்கள். நம்மில் பலர் யானையை கட்டி தீனி போட்ட கதை என்று யானை வளர்ப்பின் சிரமத்தை பற்றி பேசுவதுண்டு.

    ஆனால் நாம் மாடு வளர்ப்பது போல் பர்பதியின் குடும்பத்தில் யானைகளை வளர்த்து இருக்கிறார்கள். வீட்டை சுற்றி சுற்றி வந்த யானைகளுடன் தனது 14 வயது முதல் பழக தொடங்கிய பர்பதி ஒரு கட்டத்தில் யானைகளின் செல்லப் பிள்ளையாக மாறிவிட்டார்.

    அதன் பிறகு யானைகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் பல நடவடிக் கைகளை எடுத்துள்ளார். 1975-களில் 14 காட்டு யானைகளை கட்டுப்படுத்தி அடக்கினார். தொடர்ந்து அந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், உணவுகள் வழங்கவும் வன அதிகாரிகளுக்கு உதவி செய்தார்.

    2000-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் யானைகள் கணக்கெடுப்பில் வனத்துறைக்கு உதவி செய்தார். யானைகள் நலனுக்காக அவர் எடுத்து வந்த முயற்சியை பாராட்டி ஐக்கிய நாடுகள் சபையில் சுற்றுச் சூழல் விருது வழங்கப்பட்டது.

    இதையடுத்து அசாம் அரசு கவுரவ தலைமை யானை வார்டன் என்று அவரை பாராட்டியது.

    50 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகள் நலனில் அவர் காட்டி வரும் அக்கறையால் இப்போது மத்திய அரசின் விருதும் கிடைத்துள்ளது.

    சத்ய நாராயண பெலரி, ஜாகேஸ்வர யாதவ்

    சத்ய நாராயண பெலரி, ஜாகேஸ்வர யாதவ்

    காட்டு வாசிகளை நாட்டு வாசியாக்க தன்னையே அர்ப்பணித்தவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜாகேஷ்வர் யாதவ். சிறு வயதிலேயே காடுகளில் வாழும் மலைவாழ் மக்களை பார்த்து அவர்களை முன்னேற்றுவதில் ஈடுபட்டார்.

    அதற்காக அந்த காட்டுவாசிகளுடன் சென்று வசித்து அவர்கள் பேசும் மொழியை கற்க தொடங்கினார். அந்த மொழி தெரிந்த பிறகு அவர்களுடன் சகஜமாக பேசி பழகி அவர்களுக்காக பாடுபட தொடங்கினார்.

    அடர்ந்த காட்டு பகுதியில் வசிக்கும் அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பது, சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது போன்ற பணிகளை செய்ய தொடங்கினார்.

    முதலில் அவர்களுக்கு செருப்புகள், அரைக்கால் சட்டைகள் வாங்கி கொடுத்து அணிய வைத்தார். அவரது கடின முயற்சியால் 2021-ம் ஆண்டு முதல் முதலாக பெண் குழந்தை ஒன்று பள்ளிஇறுதி தேர்வை எழுதி வெற்றி பெற்றார். ஜாகேஷ்வர் யாதவ் சுகாதார திட்டங்களை தீவிரமாக அமல்படுத்தியதால் மலைவாழ் மக்களிடையே சிசு மரணம் தடுக்கப்பட்டது.

    ராய்ப்பூர் தொகுதி எம்.பி.யாகவும் ஒரு முறை வென்றார்.

    மலைவாழ் மக்கள் முன்னேற்றத்துக்காக தனியாக ஒரு அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா கர்சாவான் மாவட்டம் பக்ரைசாய் கிராமத்தை சேர்ந்தவர் சாமி முர்மு. 57 வயதாகும் முர்மு கடந்த 24 ஆண்டுகளில் 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

    மாவோயிஸ்டுகளால் வெட்டி கடத்தப்பட்ட மரங்களுக்கு பதிலாக இதை நட்டு பராமரித்து வருகிறார். இவரது அமைப்பில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்.

    40 கிராமங்களில் 30 ஆயிரம் பெண்களை திரட்டி சுய உதவி குழுக்களை தொடங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

    அரியானா மாநிலம் சிர்சா கிராமத்தை சேர்ந்தவர் குர்விந்தர்சிங் (53). இவருக்கு நேர்ந்த விபத்து இவரது வாழ்க்கை பாதையை மாற்றியது.

    நடக்க இயலாமல் போனதால் மற்றவர்களின் நலனுக்காக உழைக்க தொடங்கினார். தனது சமூக சேவையால் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார்.

    வீடற்றவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இது தவிர ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 300 குழந்தைகளை பராமரிக்கிறார். இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் வழங்கி வருகிறார். இதன்மூலம் விபத்துகளில் சிக்கிய 6 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.

    கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சத்யநாராயண பெலேரி. நெல் விவசாயியான இவர் தென்னிந்தியாவில் 650 பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து வருகிறார்.

    ஆராய்ச்சி மையங்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவசமாக நெல் விதைகளை வழங்கி நெல் ரகங்களை பாதுகாக்கிறார்.

    செல்லம்மா

    செல்லம்மா

    அந்தமானை சேர்ந்த செல்லம்மா (69). 6-ம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். இயற்கை விவசாயம் செய்யும் இவர் தென்னை மற்றும் பனை மரங்களை நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளார்.

    • பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    • தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களுக்கும் மற்றும் பத்ம விருது பெற்றவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் ஆபத்தான பாம்புகளை கையாள்வதில் நமது பூர்வ குடிகள் கொண்ட அறிவின் களஞ்சியமாக விளங்குபவர்கள். ஏராளமான விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றிய அரிய பாம்பு விஷங்களை சேகரிப்பதிலும் இவர்கள் உதவி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதேபோல் தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இருளர் சமுதாயத்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாம்பு பிடி நிபுணர்கள் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ பா.ஜ. க சார்பில் நன்றி களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    • 2023ம் ஆண்டு குடியரசுதின விழாவில் பத்ம விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விருதுக்கான விண்ணப்பம் www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.

    திருப்பூர் :

    கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2023ம் ஆண்டு குடியரசுதின விழாவில் பத்ம விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்விருது தொழில், இனம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. விருதுக்கான விண்ணப்பம் www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. தகுதியானவர் செப்டம்பர் 15ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • சிறந்த சாதனையாளர் நலனுக்கான பத்மவிருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் வழங்கப்படுகிறது.
    • விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட கலெக்டர் இணைப்பு கட்டிடம் நாகர்கோவில் என்ற முகவரியில் அலுவலக வேலைநாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-

    இந்திய அரசு மூலம் சிறந்த சாதனையாளர் நலனுக்கான பத்மவிருதுகள், (பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ) ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் வழங்கப்படுகிறது. தற்போது 2022-2023ம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமுக சேவை, அறிவியல், பொறியியல், பொது நல தொண்டு, குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் சிறந்த சாதனை படைத்த சாதனையாளர்களிடமிருந்து பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட கலெக்டர் இணைப்பு கட்டிடம் நாகர்கோவில் என்ற முகவரியில் அலுவலக வேலைநாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறுவதற்கு கடைசி நாள் 31.07.2022 ஆகும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×