search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nara Lokesh"

    • மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
    • கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது . மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், கூட்டணி காட்சிகளான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா 21 இடங்களிலும் வென்றுள்ளது.

    இந்நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    ஒய்.எஸ்.ஆர் கட்சியினரே இந்த கொலையை செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த கொலைக்கு கண்டம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் நாரா லோகேஷும், கௌரிநாத் கொலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முனவித்துள்ளனர். மேலும் 'தேர்தலில் தோற்ற பிறகும் ஜெகன் ரத்த சரித்திரத்தை எழுதி வருகிறார், இந்த அரசியல் கொலைகளை ஜெகன் நிறுத்த வில்லை என்றால் விளைவு விபரீதமாக இருக்கும்' என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதற்கிடையில் தெலுங்கு தேசம் கட்சியினர் நாரா லோகேஷ் படத்திற்கு முன் ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டரை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொல்லி துன்புறுத்தும் வீடியோவை பகிர்ந்து, தலித்துகளின் உயிருக்கு தெலுங்கு தேசம் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நாளை சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலைவராக பதவியேற்க உள்ளது குறிபிடித்தக்கது. 

    • ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கு 424 ரூபாயில் இருந்து, 661.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
    • சந்திரபாபு நாயுடு இந்த நிறுவனத்தின் 2,26,11,525 பங்குகளை வைத்துள்ளார்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாநில தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதேபோல் மக்களவை தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றி என்டிஏ கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக விளங்குகிறது. சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக திகழ்கிறார்.

    சந்திரபாபு நாயுடு கட்சியின் வெற்றியில் அவரது மனைவி மற்றும் மகனின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடுவால் தொடங்கப்பட்டது ஹெரிடேஜ் ஃபுட்ஸ் (Heritage Foods). இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக அவரது மனைவி புவனேஷ்வரி மற்றும் அவரது மகன் லோகேஷ் இருந்து வருகிறார்கள்.

    மும்பை பங்குச் சந்தையின் தரவுகளின்படி புவனேஷ்வரியுடன் 2,26,11,525 பங்குகள் உள்ளன. லோகேஷிடம் 1,00,37,453 பங்குகள் உள்ளன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் திங்கட்கிழமை பங்குகள் உயர்வை கண்டன. கடந்த ஜூன் 3-ந்தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 424 ரூபாயாக இருந்தது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜூன் 4-ந்தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கு மளமளவென உயரத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடு கட்சி மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றதுதான். இறுதியாக நேற்று வெள்ளிக்கிழமை 661.25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

    இதனை வைத்து பார்க்கும்போது புவனேஷ்வரின் சொத்தி மதிப்பு 535 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. லோகேஷின் சொத்து மதிப்பு 237 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

    தேர்தல் முடிவில் கடந்த ஐந்து நாட்களில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு 770 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் பால் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் என பெரும்பாலான மாநிலங்களில் பால் விற்பனை செய்து வருகிறது.

    • முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக சென்ற கொண்டிருக்கிறது.
    • நாங்கள் அந்த நிலைப்பாடு எடுக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

    மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய போகிறது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பாஜக-வுக்கு அடுத்தப்படியாக அதிக இடங்களில் (16) வெற்றி பெற்ற கட்சியாக திகழ்கிறது.

    அதேவேளையில் ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 12-ந்தேதி ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது மோடி ஓபிசி-க்களின் இடஒதுக்கீட்டை பறித்து அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. நான் இருக்கும்வரை அதை நடக்க விடமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில், விளிம்பு நிலையில் இருக்கம் மக்களின் தரநிலையை உயர்த்துவதில் கவனம் செலுத்துவோம் என சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நாரா லோகேஷ் கூறியதாவது:-

    முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக சென்ற கொண்டிருக்கிறது. நாங்கள் அந்த நிலைப்பாடு எடுக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

    சிறுபான்மையினர் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய தனி வருமானம் மிகவும் குறைவு என்பதுதான் உண்மை. ஒரு அரசாக என்னுடைய பொறுப்பு அவர்களை வறுமையில் இருந்து மீட்பதுதான். எனவே நான் எடுக்கும் எந்த முடிவுகளும் சமரச அரசியல் (வாக்கு வங்கிக்காக இடஒதுக்கீடு வழங்குவது) அல்ல, மாறாக அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே.

    நீங்கள் நம்முடைய நாட்டை வளர்ச்சி நாடாக்க விரும்பினால், யாரையும் பின்னாடி விடமுடியாது. அவர்களை ஒன்றிணைத்து, சிறந்த வாய்ப்பை செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வது, தெலுங்கு தேசம் கட்சியின் முத்திரையாக (Trade Mark) இருந்து வருகிறது.

    நாங்கள் ஒருபோதுமு சபாநாயகர் பதவி குறித்து பாஜகவிடம் பேசவில்லை. நாங்கள் மாநிலத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றுதான் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் மந்திரி பதவி கேட்கவில்லை. மாநிலத்தின் நலம்தான் எங்களுடைய நலம்.

    இவ்வாறு நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    ஆந்திரா தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி வெற்றி பெற அவரது மகனான நாரா லோகேஷ் முக்கிய பங்காற்றினார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதுபோது, தெலுங்குதேசம் கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு 4 ஆயிரம் கிலோமீட்டர் அளவிற்கு பாதயாத்திரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
    • தனது தந்தை மீது ஆந்திரா அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் தற்போது அமராவதி தலைநகரில் உள் வட்ட சாலை அமைத்ததில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் பெயரை முதல் குற்றவாளியாக சி.ஐ.டி. போலீசார் சேர்த்துள்ளனர்.

    ஏ.சி.பி. நீதிமன்றத்தில் லோகேஷ் பெயரை குறிப்பிட்டு சி.ஐ.டி. மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் நாராயணா மற்றும் சிலர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

    இந்த வழக்கு காரணமாக அடுத்ததாக நாரா லோகேஷை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் நாரா லோகேஷ் நேற்று சந்தித்தார். தனது தந்தை மீது ஆந்திரா அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.

    ×