search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IndiGo"

    • கொல்கத்தாவில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ஒரே ரன்வேயில் உரசிக் கொண்டன.
    • இந்தச் சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பீகாரின் தர்பங்கா நோக்கி இண்டிகோ விமானம் நேற்று புறப்பட்டது. அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. பயணிகளுடன் சென்ற இரு விமானங்களும் ஒரே ரன்வேயில் சென்றதாகக் கூறப்படுகிறது.

    அப்போது இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாகவும், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டதால் விமானம் திசை திருப்பப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சம்பவத்தின்போது விமானங்களில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

    இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்ததால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு, மாற்று விமானங்களால் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் ஊழியர்களிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

    • சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடி அபராதம்.
    • சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம்.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டியோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதில், சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது.
    • விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள்.

    மும்பை:

    டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் சில விமானங்கள் தரை இறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டுள்ளன. விமானங்கள் புறப்படுவதில் பல மணி நேரம் தாமதமாகிறது.

    கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது. டெல்லியில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் தரை இறங்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள். உடனே அவர்கள் விமான ரன்வேயின் அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு சென்று அமர்ந்தனர்.

    உடனே குடும்பத்துடன் அவர்கள் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்ததும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பயணிகளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பயணிகள் நகராமல் தொடர்ந்து சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த நிறுவனம் டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. இதற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக சுமார் 12 மணி நேரம் விமான பயணிகள் தவித்தனர்.

    • இந்திய விமான பயணிகளில் 60 சதவீதம் பேர் இண்டிகோ விமான சேவையை பயன்படுத்துகிறார்கள்.
    • இண்டிகோ நிறுவனம் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் குட்டி விமானங்களையும் இயக்கி வருகிறது.

    சென்னை:

    இந்தியாவில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களில் இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் அதிக விமானங்களை இயக்கி வருகிறது.

    இந்திய விமான பயணிகளில் 60 சதவீதம் பேர் இண்டிகோ விமான சேவையை பயன்படுத்துகிறார்கள்.

    மற்ற விமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இண்டிகோ விமான கட்டணம் குறிப்பிட்ட கால அளவில் முன்பதிவு செய்தால் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் தனது கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது.

    200-க்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்து செல்லும் பெரிய விமானங்களில் முன் இருக்கைகள் மற்றும் ஜன்னல் ஓர இருக்கைகளை விரும்புபவர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையை இண்டிகோ நிறுவனம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி முன் இருக்கைகளை தேர்வு செய்பவர்கள் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். அதுபோல ஜன்னல் ஓர இருக்கைகளை விரும்பி முன் பதிவு செய்பவர்கள் கூடுதலாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இண்டிகோ நிறுவனம் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் குட்டி விமானங்களையும் இயக்கி வருகிறது. அந்த விமானங்களில் கட்டண உயர்வு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    • ஏர் இந்தியா 470 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம்
    • 2035-க்குள் வினியோகம் செய்யப்படும் எனத் தகவல்

    இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, 500 ஏர்பஸ் (A320) விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. நேற்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    ஒரே தவணையில் 500 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாவது வணிக விமான சேவை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

    ஏர்இந்தியா சில வாரங்களுக்கு முன் 470 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது. இந்த நிலையில் இண்டிகோ 500 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

    விமானத்தில் பயணிப்பவர்களின் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், உலகளாவிய மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனங்களிடையேயான போட்டிதான் இதற்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

    2030-2035-க்குள் இந்த விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் வினியோகம் செய்ய இருக்கிறது.

    • சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
    • இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்று விமானி கூறியிருக்கிறார்.

    அகமதாபாத்:

    சண்டிகரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன், இண்டிகோ விமானம் வந்தது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. ஆனால் ரன்வேயை தொட்ட அடுத்த வினாடி திடீரென வீமானம் மீண்டும் டேக் ஆப் ஆகி வானில் பறந்தது.

    உள்ளே இருந்த பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கடும் குழப்பமும், அச்சமும் அடைந்தனர். சிலருக்கு உடல் வியர்த்து கொட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிலர் பயத்தில் கதறி அழுதுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திற்கு மேலே வானில் வட்டமடித்த விமானம், அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. அதன்பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு வழக்கமான தகவல் தொடர்பு பிரச்சனையே காரணம் என்றும், விமானத்தை தரையிறக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில் (ஏடிசி) அனுமதி கிடைக்கவில்லை என்றும் விமானி கூறியிருக்கிறார்.

    எனினும், விமானி சரியான நடைமுறையை பின்பற்றினாரா, இல்லையா? என்பது குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

    • விமான நிறுவனங்களில் ‘இண்டிகோ’, 15-வது இடத்தைப் பெற்றுள்ளது.
    • ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

    புதுடெல்லி :

    உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை 'அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்' எனப்படும் 'ஓஏஜி' நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமாகும் இது.

    நேற்று வெளியான இதன் பட்டியல்படி, உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் முதல் 20 விமான நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் கோவை விமான நிலையம் இடம்பெற்றுள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் இந்த விமான நிலையம், 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

    நேரந்தவறாத விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான 'இண்டிகோ', 15-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தோனேசியாவின் கருடா இந்தோனேசியா விமான நிறுவனம் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

    நேரந்தவறாத விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து கோவை விமான நிலையமும், இண்டிகோ விமான நிறுவனமும் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த டிஜிசிஏ மே 9ஆம் தேதி 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
    ராஞ்சி விமான நிலையத்தில் சிறப்புத் திறன் கொண்ட குழந்தையைப் பயணிக்க மறுத்த இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

    ராஞ்சி- ஐதராபாத் விமானத்தில் கடந்த மே 9-ம் தேதி சிறுவன் ஏறுவதற்கு இண்டிகோ நிறுவனத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. சிறுவன் அச்சத்தில் இருந்ததால் விமானத்தில் ஏற்ற மறுத்ததாகவும், இதனால் சிறுவனின் பெற்றோரும் விமானத்திற்குள் நுழைய வேண்டாம் எனவும் முடிவு செய்ததாக இண்டிகோ நிறுவனம் கூறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த டிஜிசிஏ கடந்த மே 9ம் தேதி 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
     
    இதுகுறித்து டிஜிசிஏ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இண்டிகோ ஊழியர்களால் சிறப்புக் குழந்தையைக் கையாள்வதில் ஏற்பட்ட குறைபாட்டால்  நிலைமையை மோசமாக்கியது.

    மிகவும் இரக்கமான செயலால் குழந்தையை அமைதிப்படுத்தி, தீவிர நடவடிக்கையின் அவசியத்தைத் தவிர்த்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.

    சிறப்பு சூழ்நிலைகள் அசாதாரணமான பதில்களுக்குத் தகுதியானவை. ஆனால் விமானத்தின் ஊழியர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட தவறிவிட்டதாகவும் கூறினர்.

    இந்நிலையில், இதைக் கருத்தில் கொண்டு டிஜிசிஏ-வில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரம் சம்பந்தப்பட்ட விமான விதிகளின் கீழ் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிசிஏ அறிவித்துள்ளது.

    இதையும் படியுங்கள்.. குஜராத்தில் பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
    செயல்பாட்டு காரணங்கள், மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. #FlightsDelayed
    மும்பை:

    மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சாலையில் வாகனங்களை இயக்குகின்றனர். 

    இந்நிலையில் மோசமான வானிலை, செயல்பாட்டு காரணங்கள், விமானிகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 8 விமானங்கள், ஐதராபாத்தில் இருந்து புறப்படும் 6  விமானங்கள் , ஜெய்பூரில்  இருந்து புறப்படும் 3 விமானங்கள் கடந்த சனிக்கிழமை அன்று ரத்து செய்யப்பட்டன. 

    இதேபோல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இண்டிகோ நிறுவனத்தின் 30 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது. 

    மேலும் ஒரு வருடத்திற்கு 1,000 மணி நேரத்திற்குமேல் ஒரு விமானி செயல்பட இயலாது என்பதால், விமானிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இது இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    விமான சேவையை மீண்டும் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  கடந்த வெள்ளி அன்று கடுமையான ஆலங்கட்டி மழை பெய்ததால் 11 விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. #FlightsDelayed
    தீபாவளி சிறப்பு சலுகையாக 899 ரூபாய் கட்டணத்தில் உள்நாட்டில் 64 வழித்தடங்களில் பயணம் செய்யலாம் என இன்டிகோ விமானச் சேவை நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. #IndiGoDiwalisale #IndiGofaresRs899
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் பயணக் கட்டணத்தில் சலுகை திட்டங்களை அறிவித்திருந்தன.

    அவ்வகையில், 899 ரூபாய் கட்டணத்தில் தொடங்கி, உள்நாட்டில் 64 வழித்தடங்களில் பயணம் செய்யலாம் என இன்டிகோ விமானச் சேவை நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

    8-11-2018 முதல் 15-4-2019 வரை பயணம் செய்யும் வகையில் அக்டோபர் 24 (இன்று) முதல் 26-ம் தேதிவரை இதற்கான டிக்கெட்டுகளை இன்டிகோ இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndiGoDiwalisale  #IndiGofaresRs899
    இண்டிகோ விமான நிறுவனம் தொடங்கப்பட்டு 11-ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல ரூ.1,212-க்கு சலுகை விலையில் டிக்கெட்டுகளை அறிவித்துள்ளது. #IndiGo
    மும்பை :

    இந்தியாவின் முன்னனி விமான சேவை நிறுவனமான இண்டிகோ கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதியுடன் இண்டிகோ நிறுவனம் 12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    இந்நிலையில், இதை சிறப்பிக்கும் விதமாக 12 லட்சம் விமான டிக்கெட்டுகளை சலுகை விலையாக ரூ.1,212-க்கு விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இந்த மெகா டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூலை 25-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி வரையிலான விமான டிக்கெட்டுகளை இந்த சலுகை விலையில் முன்பதிவு செய்ய முடியும் என இண்டிகோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி வில்லியம் போல்டர் தெரிவித்தார்.

    உள்நாடு மற்றும் வெளிநாடு என 57 நகரங்களுக்கு செல்லும் இண்டிகோ விமானத்தின் டிக்கெட்டுக்களை சலுகை விலையில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiGo
    ×