search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hydrocarbon"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
    • பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் சந்தன தாஸ் முன்னிலை வகித்தார்.பசுமை தாயகத்தின் மாநில துணை செயலாளர் கர்ண மஹாராஜா வரவேற்றார்.

    கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலமாக புதியதாக 20 இடத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பு சம்பந்தமாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் இந்நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. இதை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

    இந்த நிறுவனத்தின் மூலமாக இப்பணி செய்தால் ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் வாழ்வதற்கே பயனற்றதாக ஆகிவிடும். இது போன்ற மக்கள் விரோத மற்றும் இயற்கை வளங்களை அழிக்கக்கூடிய மண் வளங்களை அழிக்க கூடிய இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளை செய்யும் பட்சத்தில் குடிப்பதற்கு குடிநீர் கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகிவிடும்

    ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். எனவே இந்தத் திட்டத்தை ஒருபோதும் ராமநாதபுரம் மாவட்ட மக்களும் பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்த விடாது.

    ஆகவே இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அதை மீறி நமது மாவட்டத்தில் இத்திட்டத்தை கொண்டு வந்தால் அனைத்து சமுதாயத் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மக்களவை உறுப்பினர் தலைவர் அன்புமணி ராமதாசை அவர்களை வரவழைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறை வேற்ற ப்பட்டது

    இக்கூ ட்டத்தில் ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா, திருவாடானை ஒன்றிய செயலாளர் மக்தூம் கான். ராமாபுரம் ஒன்றிய செயலாளர் ஷரீஃப்.

    மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் மாவட்ட மாணவர் சங்கர் செயலாளர் சந்தோஷ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வருகிற 16-ந் தேதி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வழுதூரில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அந்நிறுவனத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் இத்திட்டத்தை செயல்ப டுத்துவதற்கு மக்களின் எதிர்ப்பு இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதிக்க கூடாது.
    • முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர்.மாடசாமி முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மத்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மக்களின் கருத்துக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

    அப்போது ஹைட்ரோ கார்பன் தொடர்பாக பாதிப்புகள், தீமைகள் குறித்து அதிகாரிகள் உரிய பதில் தெரிவிக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க 20 கிலோ மீட்டர் முதல் 25 கி.மீ. வரை நிலம் கையகப்படுத்தப்படும். இதனால் குடியிருப்புகள், வரலாற்று சின்னங்கள், கோவில்கள், நீர் நிலைகள் பாதிக்கப்படும்.

    மாவட்ட மக்கள் 75 சதவீத நிலப்பரப்பை இழந்த வெளியேறும் சூழல் ஏற்படும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள் மலட்டு தன்மையாக மாறும். பெண்கள் கருவுற்றல் பாதிக்கப்படும். தொற்று நோய் ஏற்படும். நிலத்தடி நீர் மாசுபடும். இது போன்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் நீர்நிலை பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
    • கடந்த ஓராண்டில் 1,175 டன் அளவிலான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்ப–ட்டு 177 கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது.

    வல்லம்:

    தஞ்சை அருகே வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக 34-வது ஆண்டுவிழா நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணி தலைமை வகித்தார். இதில் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தஞ்சை மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேலுசாமி வரவேற்றார். பதிவாளர் ஸ்ரீவித்யா நன்றி கூறினார்.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் பின்னர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் நீர்நிலை பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் மண்ணை மலடாக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ எடுக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என முதல்-அமைச்சர் தெளிவாக அறிவித்து–ள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க முடியாது.

    தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 1,175 டன் அளவிலான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்ப–ட்டுள்ளது. பிளாஸ்டிக் தயாரிக்கும் 177 கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது. ரூ.105 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தினால் தமிழகத்தில் 20 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு மக்களிடம் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வீரமணி அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா அல்லது முக்கோண தலைமையா என்று பேசுவதை தாண்டி, முதலில் தாங்கள் அடமானம் வைத்த பொருளை மீட்க வேண்டும். முதலில் தங்களுடைய தலைமையை உறுதி செய்யும் முன்பாக, தங்களுடைய கட்சியை மீட்க வேண்டும். அதுதான் தமிழ் மானம் விரும்பக் கூடியவர்களும், தாய் கழகத்துக்கும் உள்ள விருப்பமாகும் என்றார்.

    ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியின்போது அமெரிக்காவில் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமானதாக வெளியான தகவலின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வோம்.
    ஹைட்ரோகார்பன் எரிவாயு பாதிப்பு பற்றி பல்வேறு விவரங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியில் சுமார் 6,75,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகி, மக்கள் வாழ முடியாத பகுதியானது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    அவ்வாறு பரவிய தகவலில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் அருகில் உள்ள பெலாக்வா என்னும் பகுதியின்  பெரும்பாலான நிலப்பரப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மீம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், இதனை உண்மை போன்று சித்தரிக்கும் பெயர் பலகையின் புகைப்படமும் சமூக வலைத்தள வாசிகளால் அதிகம் பகிரப்படுகிறது.



    உண்மையில் அமெரிக்காவில் பெலாக்வா என்ற பெயர் கொண்ட நகரம் எதுவும் இல்லை என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலான பெயர் பலகை கொண்ட புகைப்படம் நௌம் மக்னுசன் என்பவரால் வரையப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

    ஹைட்ரோகார்பன் பாதிப்பால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு மனிதர்கள் வாழ தகுதியற்றதாக சித்தரிக்கும் மீம் சமூக வலைதளவாசிகளை இத்தனை நாட்களாக ஏமாற்றியிருப்பதை ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தி இருக்கிறது.
    தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே ஹைட்ரோ கார்பன் அகழ்வு திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ள நிலையில் ஹைட்ரோ கார்பனின் உற்பத்தி, அதன் பயன்பாடு மற்றும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
    இந்தியா பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல 45 சதவீதம் எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறார்கள்.

    இதற்காக பெருமளவு பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. மேலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. எனவே இந்தியாவிலேயே எரிபொருள் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.

    இதனால் மாற்று ஏற்பாடாக எரிபொருள்களை உற்பத்தி செய்யும் திட்டங்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதில் ஒன்று தான் ஹைட்ரோ கார்பன் திட்டம்.

    நாம் பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களில் ஹைட்ரஜனும், கார்பனும் கலந்துள்ளது. அவைதான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோன்று ஹைட்ரஜனும், கார்பனும் கலந்த பல்வேறு வகையான எரிபொருள்கள் பூமிக்கு அடியில் வாயுவாக தேங்கி உள்ளன. அவை மீத்தேன், புரோபைன், பியூடேன், ஈத்தேன், பென்டேன் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் எரிபொருள் ஆகும்.

    அதாவது ஹைட்ரஜன் அணுக்களும், கார்பன் அணுக்களும் எந்த வகையில் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன என்பதன் அடிப்படையில் இவற்றிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    உதாரணத்திற்கு 4 ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு கார்பன் அணுவும் சேர்ந்திருந்தால் அது மீத்தேன். 2 கார்பன் அணுவும், 6 ஹைட்ரஜன் அணுவும் கலந்திருந்தால் அது ஈத்தேன்.

    இவ்வாறு அணுக்கள் சேர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு எரிபொருளும் உள்ளன. நிலத்திற்கு அடியில் இந்த அனைத்து வகை எரிபொருள்களும் கலந்திருக்கின்றன. இவற்றை ஒட்டுமொத்தமாக ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கிறார்கள்.

    பூமிக்கு அடியில் இவைகள் பாறைகளின் இடுக்குகளில் ஆங்காங்கே ஏராளமாக தேங்கி நிற்கின்றன. இந்தியாவின் சில பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

    அவ்வாறு அதிகமாக காணப்படும் பகுதிகளில் தமிழ்நாடு ஒன்று. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் வரை அதிக அளவில் ஹைட்ரோ கார்பன்கள் பூமிக்கு அடியில் இருக்கின்றன.

    இவற்றை தோண்டி எடுப்பதற்கு தான் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இவற்றை தோண்டி எடுக்கும் பணிகளை மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா நிறுவனங்கள் செய்து வந்தன. ஆனால் இந்த நிறுவனங்களால் பெருமளவு பணத்தை செலவிட்டு பணிகளை செய்ய முடியவில்லை. எனவே தனியாருக்கு இது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    பூமிக்கு அடியில் 1000 மீட்டரில் இருந்து 5000 மீட்டர் ஆழம் வரை இவை படிந்திருக்கின்றன. அவற்றை தோண்டி எடுக்கவேண்டுமானால் ராட்சத வடிவில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும். செங்குத்தாகவும், குறுக்கு நெடுக்குமாகவும் இந்த கிணறு அமைக்கப்படும்.

    அப்போது பாறை இடுக்குகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் வெளியேறும். இதற்காக உள்ளுக்குள் தண்ணீர் அல்லது வாயுக்கள் மூலமாக அழுத்தம் கொடுக்கப்படும். அப்போது வெளியே வரும் வாயுக்களை கலன்களில் சேமித்து அவற்றை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வார்கள். அங்கிருந்து தரமான ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கப்பட்டு அவை எரிபொருள்களாக பயன்படுத்தப்படும்.

    பொதுவாக நமது நிலப்பரப்பில் மீத்தேன் வாயுதான் அதிகமாக பரவி உள்ளது. கிட்டத்தட்ட 90-லிருந்து 95 சதவீதம் வரை மீத்தேன் எடுக்கப்படும். இதற்காகத்தான் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள்.



    1000 மீட்டரில் இருந்து 3000 மீட்டர் வரை ஆழ்துளை கிணறு தோண்ட உள்ளனர். அப்போது அங்கு தேங்கி இருக்கும் ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் வெளியேற தொடங்கும். அந்த இடுக்குகளில் நிலத்தடி நீர் சென்றுவிடும்.

    உதாரணத்திற்கு தற்போது நிலத்தடி நீர் பூமிக்கு கீழே 100 மீட்டரில் இருந்து 400 மீட்டர் ஆழத்தில் இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும்போது 1000 மீட்டரிலிருந்து 3000 மீட்டர் ஆழத்தில் ஏற்படும் வெற்றிடத்திற்குள் இந்த தண்ணீர் புகுந்துவிடும்.

    அதாவது மேல்மட்டத்தில் உள்ள தண்ணீர் கீழ்மட்டத்திற்கு சென்றுவிடும். அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கிணறுகளில் இருந்து பெருமளவு தண்ணீரையும் வெளியேற்றுவார்கள்.

    இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நிலத்தடி நீரே கிடைக்காத நிலை ஏற்படும். இதன் காரணமாக அந்த பகுதி விவசாயமே அழிவு நிலைக்கு தள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியேறும். இவை காற்றில் கலந்து சுற்றுப்புற சூழலை முற்றிலும் நாசமாக்கிவிடும்.

    மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களின் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். செடி, கொடிகள் என இயற்கைகளையும் நாசமாக்கிவிடும்.

    விவசாயம் இல்லாத பாலைவன பகுதி அல்லது மக்கள் அதிகம் பயன்படுத்தாத பகுதி ஆகியவற்றில் இந்த கிணறுகளை தோண்டினால் அதனால் பெரிய அளவில் பிரச்சினைகள் வராது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இவற்றை உருவாக்கும்போது அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    எனவே தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். #PazhaNedumaran #Hydrocarbon

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சங்க காலத்தில் இருந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி திகழ்ந்து வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டங்களால் விளை நிலங்களை அழித்து வருகிறது. வேளாண்மை நிலங்களை நாசமாக்கினால் இந்த மக்கள் என்ன செய்வார்கள்.

    கிராம மக்களும், விவசாயிகளும் வாழையடி வாழையாக வசித்து தாங்களும் வாழ்ந்து மக்களையும் வாழ வைத்து வருகிறார்கள்.

    இன்றைய நவீன உலகில் பெட்ரோலிய பொருட்களின் தேவை மிகவும் குறைந்து வருகிறது. 2030-ம் ஆண்டு பெட்ரோலிய காரே கிடைக்காது என மோடி அரசு அறிவித்துள்ளது.

    இதன் பின்னர் மின்சார கார்கள் தான் 2030-க்குப் பிறகு வர உள்ளது. எனவே இன்னும் 11 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் விவசாய நிலங்களை பாழ்படுத்துவதால் என்ன பயன்? காவிரிப் படுகையை பாதுகாப்பதற்கு தான் இப்பகுதி மக்கள் போராடுகிறார்களே தவிர சொந்த நலனுக்காக அல்ல.

    எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயிகள் குமுறி எழுவார்கள்.

    இவ்வாறு நெடுமாறன் தெரிவித்தார். பேட்டியின் போது விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உடன் இருந்தார்.

    தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோ கார்பனை எடுக்க விடமாட்டோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #hydrocarbon #tngovt

    திருச்சி:

    திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது :-

    விவசாயிகளுக்கு லாபகரமான விலை, கடன் தள்ளுபடி அளிக்கும் கட்சிகளுக்கே விவசாயிகளின் வாக்கு. அவ்வாறு விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்காத கட்சிகளுக்கு எதிராக 29 மாநிலங்களிலும் பிரசாரம் செய்வோம். மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான எந்த திட்டங்களும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.‌ தமிழக பட்ஜெட்டிலும் மக்கள் தொகையில் 20 சதவீதம் உள்ள விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் அதிலும் விவசாயிகளுக்கான எந்த திட்டமும் இல்லை.

    விவசாயிகள் கடனிலே பிறந்து வாழ்ந்து மடிய வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய ரூ.400 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வீணாக செல்வதை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும் சென்னையில் இந்த மாதம் 25ந் தேதிக்கு பிறகு தற்கொலை செய்யும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    மேலும் வருகிற 21ந் தேதியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மார்ச் 28, 29-ந்தேதிகளில் டெல்லியில் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளோம். எந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோகார்பன் எடுக்க விடமாட்டோம். 

    இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #hydrocarbon #tngovt

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருக்காரவாசலில் குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். #PRPandian

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினத்தில் விவசாயிகள்- வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக காவேரி விவசாய சங்க மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டார்.

    கூட்டம் முடிந்த பிறகு பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களுக்கு துளியும் பயன் இல்லாத இந்த திட்டத்தை வருகிற ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகின்ற பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

    அவ்வாறு செய்யாவிட்டால் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருகாரவாசலில் விவசாயிகள், வர்த்தகர்கள், மீனவர்கள் அனைத்து கட்சியினருடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இதற்கு முன்பாக வருகின்ற 22-ந் தேதி விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை எதிர்த்து இரு மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்யப்படும்.

    மேலும் ஜனவரி 26-ந் தேதி நடைபெறும் கிராம சபா கூட்டங்களில் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ள கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian

    ×