search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance redressal camp"

    • ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ்.என்.ஆர். கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெறுகிறது
    • வருகின்ற 12.10.2023 வியாழக்கிழமை மற்றும் 13-10-2023 வெள்ளிக்கிழமை என இரண்டு தேதிகளில் நடைபெறுகிறது. ம் தேதிகளில

    திருப்பூர்:

    பாதுகாப்புக்கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம் (சென்னை) சார்பில் ராணுவ ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் குறைபாடுகளை களைவதற்கு பாதுகாப்பு ஓய்வூதிய அதாலத் முகாம் கோவை அவினாசி ரோடு நவ இந்தியா பேருந்து நிறுத்தம் ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ்.என்.ஆர். கருத்தரங்கு மண்டபத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி (வியாழக்கிழமை) மற்றும் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.இந்த முகாமில் இராணுவ பணி மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள், முன்னாள் படைஅலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பொதுமக்கள் மற்றும் சி.பி.பி.சி., எஸ்.பி.ஏ.ஆர்.எஸ்.எச். மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தீர்வு பெறலாம்.

    இதற்கான விண்ணப்பத்தினை திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெற்று படைவிலகல் சான்று நகல் (முதல் 4 பக்கங்களுடன்), பி.பி.ஓ., எஸ்.பி.ஏ.ஆர்.எஸ்.எச்., இ-பி.பி.ஓ., கோர் பி.பி.ஓ. மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு முதல் பக்கம் மற்றும் நாளது தேதி வரையிலான வரவுப்பதிவு செய்யப்பட்ட கடைசி 2 பக்கங்கள் ஆகிய ஆவண நகல்களுடன் பாதுகாப்பு ஓய்வூதிய அதாலத் அதிகாரி, சி.டி.ஏ. அலுவலகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கோ அல்லது legaladalatcdachn@gmail.com என்ற இணையதளம் மூலமாகவே அனுப்பலாம். தபால் மூலமாக முடியாத பட்சத்தில் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

    இத்தகவலை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தொிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 256 மனுக்கள் பெறப்பட்டது.
    • உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 256 மனுக்கள் பெறப்பட்டது. மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

    பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்க ளுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்க ளிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவு றுத்தினார்

    தொடர்ந்து, அழகன்குளம் ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த சித்ராதேவி இயற்கை மரணம் அடைந்ததை யொட்டி ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை தாட்கோ தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வாரிசுதாரரிடம் கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன், தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட 42 வழக்குகள் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.
    • கார் கண்ணாடியை சுத்தம் செய்ததாக கூறி வாகன ஓட்டிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்கின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட பல்லடம், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், ஆகிய போலீஸ் நிலையங்களில் இடப் பிரச்சனை, பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனை, உள்ளிட்ட நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் தலைமையில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா முன்னிலையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட 42 வழக்குகள் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:- போலீஸ் நிலையங்களில் விசாரணை நடைபெறும் போது அரசியல், பணம் உள்ளிட்ட சக்திகளின் இடையூறு இருக்கும். ஆனால் இந்த முகாமில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. மேலும் போலீசார் பொதுமக்களை கனிவுடன் நடத்தினர். இது போன்ற முகாம்களை அடிக்கடி நடத்த போலீசார் முன் வர வேண்டும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பல்லடம் சரஸ்வதி, மங்கலம் கோபால கிருஷ்ணன்,காமநாயக்கன்பாளையம் ரவி, அவிநாசி பாளையம் விஜயா, மற்றும் போலீசார் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் மதிமுக., நகரச் செயலாளர் வைகோ பாலு, ஆதித்தமிழர் பேரவை பவுத்தன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில் பல்லடம் நால்ரோடு சிக்னல், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிலர் கார் கண்ணாடிகளை தட்டி பிச்சை கேட்கின்றனர். கொடுக்க மறுத்தால் சாபம் இடுவதாகவும், இதனால் வாகன ஓட்டிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

    மேலும் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் கார் கண்ணாடிகளில் சோப்பு தண்ணீரை பீய்ச்சி அடித்து,கண்ணாடியை சுத்தம் செய்ததாக கூறி வாகன ஓட்டிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்கின்றனர். எனவே போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு அரண் மனை எதிரே அமைந்துள்ள அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் அலுவல கத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தபால்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் முன்கூட்டியே மனுவாக அளித்து பயன் பெறலாம்.

    தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப் பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் பெயர், பெறுபவரின் பெயர், ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகிய வற்றுக்கான விவரங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    இதேபோல சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகார்களாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட குறைதீர்க்கும் முகாமிற்கு ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய பதிலால் திருப்தி யடையாதவர்கள் தங்களது குறைகளை மட்டும் அனுப்பி வைக்கலாம். அதன் பேரில் அளிக்கப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. தனியார் கூரிய ரில் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை தீத்தாரப்பன், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாத புரம் அஞ்சல் கோட்டம், ராமநாதபுரம் என்ற முகவ ரிக்கு வருகிற 22-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தின் உறையின் மீது தபால் சேவை குறைதீர்க்கும் முகாம், ஜூன் 23 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் தெரிவித்தார்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
    • DAK ADALAT CASE என்று குறிப்பிட்டு புகார் கடிதங்களை வருகிற 22-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திருப்பூர் ரெயில் நிலையம் முன் தலைமை தபால் நிலைய கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ளது. தபால் சேவையை பற்றி விவாதிக்க மக்கள் குறைதீர்க்கும் நாள் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை விஜயதனசேகர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரியில் DAK ADALAT CASE என்று குறிப்பிட்டு புகார் கடிதங்களை வருகிற 22-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்கிழமை) மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மத்திய மண்டலஅலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணன்கோவில் தெரு, ஜடாமுனி கோவில் தெரு, காஜிமார் தெரு, கிருஷ்ண ராயர் தெப்பக்குளம், ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், ரெயில்வே காலனி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி, அரசரடி, விராட்டிபத்து, பொன்மேனி, சொக்க லிங்கநகர், துரைச்சாமி நகர், சுந்தரராஜபுரம், மேலவாசல், சுப்பிரமணிய புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

    குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்–ப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய 5 உட்கோட்டங்களிலும் காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் புதன்கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார். இந்த மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் 22 மனுக்கள் மற்றும் உட்கோட்டங்களில் நடத்தப்பட்ட முகாமில் 15 மனுக்கள் என மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • சிவகங்கை அருகே காவல்துறை சார்பில் மக்கள்குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • முகாமில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகர், வட்டத்தை சேர்ந்த 7காவல் நிலையங்கள் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் கலைவாணி, எஸ்.எஸ்.கோட்டை அந்தோணி செல்லத்துரை, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் டவுன், நாச்சியாபுரம், கண்டவராயன்பட்டி திருக்கோஷ்டியூர் கீழச்சிவல்பட்டி எஸ்.எஸ்.கோட்டை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுகளுக்கு, புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு கடந்த 3தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டு அந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் செல்வபிரபு, பாலகிருஷ்ணன், சிவாஜி பாண்டியன், விஜய்,பெரியசாமி, கலையரசன், சாமுண்டீசுவரி, சேதுபாமா மற்றும் போலீசார் பங்கேற்று விசாரணை மேற்கொண்டனர். முகாமில் 300 மனுக்கள் விசாரணை மேற்கொண்டதில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் ஈட்டிவீரம்பாளையம் கிராமத்துக்கு முட்டியங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் தாலுகாவில் கிளாங்குண்டல் கிராமத்துக்கும், காங்கயம் தாலுகாவில் கீரனூர் கிராமத்துக்கும், மடத்துக்குளம் தாலுகாவில் ராமேகவுண்டன்புதூர் கிராமத்துக்கும், பல்லடம் தாலுகாவில் கே.அய்யம்பாளையம் கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    இதுபோல் திருப்பூர் வடக்கு தாலுகாவில் செட்டிப்பாளையம் கிராமத்துக்கும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் மங்கலம் கிராமத்துக்கும், உடுமலை தாலுகாவில் தும்பலப்பட்டி கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் செங்கப்பள்ளி கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வருவாய் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு தீர்வு காண்பார்கள். பொதுமக்கள் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற மனுக்களை பதிவு செய்யலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • உசிலம்பட்டியில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், நாளை (5-ந்தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி மற்றும் மாதாந்திர உதவித் தொகை ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே அந்தப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • மதுரை மண்டல அளவிலான தபால்துறை ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை தென் மண்டல அஞ்சல்துறை அலுவலக கணக்கு அதிகாரி பொற்கொடி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான தபால்துறை ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தென்மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலக பணியிட கணினி பயிற்சி மையத்தில் நடக்கிறது.

    அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம்,ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதவர்களின் குறைகள், ரெயில்வே மற்றும் தொலைபேசி துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்று, அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதா ரர்களின் குறைகள் இந்த முகாமில் பரிசீலிக்கப்படும்.

    மேற்குறிப்பிட்ட குறைதீர்க்கும் முகாம் சம்பந்தமாக கோட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணி ப்பாளர் அளித்த பதிலில் திருப்திய டையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். நேரடியாக இந்த முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

    குறைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 16.3.2023 ஆகும். குறைகளைஅனுப்ப வேண்டிய முகவரி:- ''ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம், ச.பொற்கொடி, கணக்கு அதிகாரி, அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், தென் மண்டலம்(தமிழ்நாடு), மதுரை- 625002'' ஆகும்.

    மின்னஞ்சல் accts.madurai@indiapost.gov.in-மூலமாகவும் அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் ''ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம்-2023'' என்று தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

    குறைகளை சாதாரண தபால், பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் சேவை மூலம் அனுப்பப் படும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேரில் வரமுடியாத ஓய்வூதியர்கள் 19.4.2023 அன்று மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலமாக நடத்தப்படும் முகாயில் கலந்து கொள்ளலாம். காணொலி காட்சி 'கூகுள் மீட்' மூலமாக நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

    எனவே தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, அலைபேசி எண் மற்றும் அருகில் இருக்கும் அஞ்சலக முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு தபால்களை மேற்கூறிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை தென் மண்டல அஞ்சல்துறை அலுவலக கணக்கு அதிகாரி பொற்கொடி தெரிவித்துள்ளார்.

    • 26-ந் தேதி நடக்கிறது
    • அதிகாரி தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப் பாளர் மு.மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் கோட்ட அஞ் சலக கண்காணிப்பாளர் அலு வலகத்தில் அஞ்சல் குறைத் தீர்வு முகாம் வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    எனவே, திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சலகங்களில் பதிவுத்த பால், விரைவுத்தபால், மணி யார்டர், சேமிப்பு கணக்குகள், சேமிப்பு பத்திரங்கள், சாதா ரண தபால் பட்டுவாடா அஞ்சலக ஆயுள் காப்பீடு மற் றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அஞ்சல் சேவை குறித்த தங்களின் புகாரினை முழு விவரங்களுடன் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளர், திருப்பத் தூர் கோட்டம், திருப்பத்தூர் என்ற முகவரிக்கு நேரடியா கவோ அல்லது தபால் மூலமா கவோ வருகிற 21-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மேலும் அஞ்சல் குறை தீர்வு முகாமில் நேரடியாகவும் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    ×