search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் குறை தீர்க்கும் முகாம்"

    • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட 42 வழக்குகள் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.
    • கார் கண்ணாடியை சுத்தம் செய்ததாக கூறி வாகன ஓட்டிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்கின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட பல்லடம், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், ஆகிய போலீஸ் நிலையங்களில் இடப் பிரச்சனை, பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனை, உள்ளிட்ட நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் தலைமையில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா முன்னிலையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட 42 வழக்குகள் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:- போலீஸ் நிலையங்களில் விசாரணை நடைபெறும் போது அரசியல், பணம் உள்ளிட்ட சக்திகளின் இடையூறு இருக்கும். ஆனால் இந்த முகாமில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. மேலும் போலீசார் பொதுமக்களை கனிவுடன் நடத்தினர். இது போன்ற முகாம்களை அடிக்கடி நடத்த போலீசார் முன் வர வேண்டும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பல்லடம் சரஸ்வதி, மங்கலம் கோபால கிருஷ்ணன்,காமநாயக்கன்பாளையம் ரவி, அவிநாசி பாளையம் விஜயா, மற்றும் போலீசார் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் மதிமுக., நகரச் செயலாளர் வைகோ பாலு, ஆதித்தமிழர் பேரவை பவுத்தன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில் பல்லடம் நால்ரோடு சிக்னல், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிலர் கார் கண்ணாடிகளை தட்டி பிச்சை கேட்கின்றனர். கொடுக்க மறுத்தால் சாபம் இடுவதாகவும், இதனால் வாகன ஓட்டிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

    மேலும் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் கார் கண்ணாடிகளில் சோப்பு தண்ணீரை பீய்ச்சி அடித்து,கண்ணாடியை சுத்தம் செய்ததாக கூறி வாகன ஓட்டிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்கின்றனர். எனவே போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • மேலும் பிரச்சினைக்குரிய, 19 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
    • தீர்வு ஏற்படாத வகையில், 4 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கலந்து கொண்டு மனுக்களை வாங்கினார்.

    அதேபோல கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும், மற்ற போலீஸ் நிலையங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில், பொதுமக்கள் நீண்ட நாட்களாக தீர்வு ஏற்படாத நிலப்பிரச்சினை, பணம் கொடுக்கல் வாங்கல், மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகள் குறித்து மனு அளித்தனர்.

    மாவட்டம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டதில் தகுதியான, 94 மனுக்கள் ஏற்கப்பட்டு, 71 வழக்குகளுக்கு தீர்வுக்கான வழிவகைகள் செய்யப்பட்டன. மேலும் பிரச்சினைக்குரிய, 19 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. தீர்வு ஏற்படாத வகையில், 4 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    போலீஸ் நிலையங்களில் அவ்வப்போது இது போன்ற குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படும். இதில், நீண்டகால பிரச்னைகள், நிலப்பிரச்சனைகளில், போதிய ஆவணங்கள் இருந்தும் நடவடிக்கை தாமதமாகும் மனுதாரர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    அவர்களின் புகார்களில் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வாரத்தில் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • குறிப்பாக பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தொடர்பாக அதிக மனுக்கள் வந்துள்ளது. போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் தினமும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    இன்ஸ்பெக்டர் அடங்கிய குழுவினர் இந்த மனுக்களை பெற்று அதனை போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வாரத்தில் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மனுக்கள் அளிப்பதற்காக புதன் கிழமை தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து மனுக்களை கொடுத்து செல்கிறார்கள்.

    இன்றும் மனுக்கள் அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.சுமார் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்தனர். அதன் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் விசாரணை மேற் கொண்டார்.

    குறிப்பாக பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தொடர்பாக அதிக அளவு மனுக்கள் வந்துள்ளது. மேலும் போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுறுத்தினார். மனு அளிப்பதற்காக இன்று வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அவருக்கு போலீசார் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.சிறிது நேரத்துக்கு பிறகு அந்த பெண் சகஜநிலைக்கு திரும்பினார்.பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.மனு கொடுக்க வந்த இடத்தில் பெண் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×