என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Postal Service"

    • தபால் துறை மூலம் பார்சல்கள் மற்றும் பிற பொருட்களை அனுப்புபவர்களை இந்த முடிவு பெரிதளவில் பாதிக்கும்.
    • ஏற்கனவே பொருட்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.

    அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் தபால் சேவைகளை நிறுத்துவதாக இந்திய தபால் துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய சுங்க விதிமுறைகள் காரணமாக ஆகஸ்ட் 25 முதல் தபால் சேவைகள் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. தபால் துறை மூலம் பார்சல்கள் மற்றும் பிற பொருட்களை அனுப்புபவர்களை இந்த முடிவு பெரிதளவில் பாதிக்கும்.

    ஜூலை 30 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, 800 டாலர் வரையிலான பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு பொருளுக்கும், அதன் மதிப்பு எதுவாக இருந்தாலும், சுங்க வரி விதிக்கப்படும்.

    இருப்பினும், இந்த விதிமுறைகளில் இருந்து சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 100 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் பரிசுகளை அனுப்புவதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது.

    எனவே கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் தவிர ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பிற அனைத்து வகையான அஞ்சல் சேவை சார்ந்த முன்பதிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது

    ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து அஞ்சல் பொருட்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக, கட்டாய சூழ்நிலைகளில் அஞ்சல் துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

    ஏற்கனவே பொருட்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.   

    • தென்மண்டல தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் முகாம் மதுரையில் 20-ந் தேதி நடக்கிறது.
    • தபால் கவரின் முன் பக்கத்தில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்- டிசம்பர் 2022 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    மதுரை

    தென்மண்டல தபால்துறை தலைவர் அலுவலக உதவி இயக்குநர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்மண்டல தபால்துறை தலைவர் அலுவலகத்தின்

    கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியா குமரிமாவட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் தொடர்பாக வாடிக்கையா ளர்களின் குறைதீர்க்கும் முகாம் வருகிற 20-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மதுரை பீ.பி.குளத்தில் உள்ள தென்மண்டல தபால் துறைத்தலைவர் அலுவலகத் தில் நடக்கும் இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ள புகார்தாரர்கள், தங்களது புகார் மனுக்களை வருகிற 13-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மனுவில், தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் பெயர், முகவரி, ரசீது எண், மணியார்டர், ஸ்பீடுபோஸ்ட், பதிவுத்தபால் ஆகிய விவரங் களை குறிப்பிட வேண்டும். சேமிப்பு வங்கி, தபால்

    காப்பீடு, கிராமிய தபால் காப்பீடு உள்ளிட்ட புகார் மனுக்களில், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர், முகவரி, பணம் செலுத்திய விவரம், பணம் செலுத்திய தபால் அலுவலகத்தின் பெயர், தபால்துறையில் பெறப்பட்ட கடிதங்கள் இருப்பின் அதனையும் இணைக்க வேண்டும்.

    இந்த முகாமை பொறுத்த மட்டில் சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களில் ஏற்கனவே மனு கொடுத்து கோட்ட தபால் கண்காணிப் பாளர் கொடுத்த பதிலில் திருப்தி இல்லாதவர்கள் மட் டும் தங்களது குறைகளை அனுப்ப வேண்டும். புதிய புகார்களின் மீது எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

    அதேபோல, தனியார் கூரியர் மூலம் அனுப்பும் புகார் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புகார் மனுக்களை உதவி இயக்குநர், தபால் துறைத்தலைவர் அலுவலகம், தென் மண்டலம், மதுரை-2 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    தபால் கவரின் முன் பக்கத்தில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்- டிசம்பர் 2022 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு அரண் மனை எதிரே அமைந்துள்ள அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் அலுவல கத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தபால்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் முன்கூட்டியே மனுவாக அளித்து பயன் பெறலாம்.

    தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப் பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் பெயர், பெறுபவரின் பெயர், ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகிய வற்றுக்கான விவரங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    இதேபோல சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகார்களாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட குறைதீர்க்கும் முகாமிற்கு ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய பதிலால் திருப்தி யடையாதவர்கள் தங்களது குறைகளை மட்டும் அனுப்பி வைக்கலாம். அதன் பேரில் அளிக்கப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. தனியார் கூரிய ரில் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை தீத்தாரப்பன், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ராமநாத புரம் அஞ்சல் கோட்டம், ராமநாதபுரம் என்ற முகவ ரிக்கு வருகிற 22-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தின் உறையின் மீது தபால் சேவை குறைதீர்க்கும் முகாம், ஜூன் 23 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் தெரிவித்தார்.

    ×