search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Postal Pensioners"

    • மதுரை மண்டல அளவிலான தபால்துறை ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை தென் மண்டல அஞ்சல்துறை அலுவலக கணக்கு அதிகாரி பொற்கொடி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான தபால்துறை ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தென்மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலக பணியிட கணினி பயிற்சி மையத்தில் நடக்கிறது.

    அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம்,ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதவர்களின் குறைகள், ரெயில்வே மற்றும் தொலைபேசி துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்று, அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதா ரர்களின் குறைகள் இந்த முகாமில் பரிசீலிக்கப்படும்.

    மேற்குறிப்பிட்ட குறைதீர்க்கும் முகாம் சம்பந்தமாக கோட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணி ப்பாளர் அளித்த பதிலில் திருப்திய டையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். நேரடியாக இந்த முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

    குறைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 16.3.2023 ஆகும். குறைகளைஅனுப்ப வேண்டிய முகவரி:- ''ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம், ச.பொற்கொடி, கணக்கு அதிகாரி, அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், தென் மண்டலம்(தமிழ்நாடு), மதுரை- 625002'' ஆகும்.

    மின்னஞ்சல் accts.madurai@indiapost.gov.in-மூலமாகவும் அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் ''ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம்-2023'' என்று தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

    குறைகளை சாதாரண தபால், பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் சேவை மூலம் அனுப்பப் படும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேரில் வரமுடியாத ஓய்வூதியர்கள் 19.4.2023 அன்று மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலமாக நடத்தப்படும் முகாயில் கலந்து கொள்ளலாம். காணொலி காட்சி 'கூகுள் மீட்' மூலமாக நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

    எனவே தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, அலைபேசி எண் மற்றும் அருகில் இருக்கும் அஞ்சலக முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு தபால்களை மேற்கூறிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை தென் மண்டல அஞ்சல்துறை அலுவலக கணக்கு அதிகாரி பொற்கொடி தெரிவித்துள்ளார்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
    • வருகிற 10-ம் தேதி தபால் துறை ஊழியர்கள் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

    நெல்லை:

    அனைத்திந்திய அஞ்சல் ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பாளை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கோட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை கோட்ட செயலாளர் சண்முக சுந்தரராஜ் விளக்கி பேசினார்.

    இதில் நெல்லை மாவட்ட ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துசாமி, விஜயராஜா, செல்லதுரை, கண்ணன், கோட்ட பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அஞ்சல் சேவைகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ம் தேதி தபால் துறை ஊழியர்கள் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

    அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஓய்வூதியர்கள் தெரிவித்தனர்.

    ×