search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்கூட்டம்"

    • ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ்.என்.ஆர். கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெறுகிறது
    • வருகின்ற 12.10.2023 வியாழக்கிழமை மற்றும் 13-10-2023 வெள்ளிக்கிழமை என இரண்டு தேதிகளில் நடைபெறுகிறது. ம் தேதிகளில

    திருப்பூர்:

    பாதுகாப்புக்கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம் (சென்னை) சார்பில் ராணுவ ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் குறைபாடுகளை களைவதற்கு பாதுகாப்பு ஓய்வூதிய அதாலத் முகாம் கோவை அவினாசி ரோடு நவ இந்தியா பேருந்து நிறுத்தம் ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ்.என்.ஆர். கருத்தரங்கு மண்டபத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி (வியாழக்கிழமை) மற்றும் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.இந்த முகாமில் இராணுவ பணி மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள், முன்னாள் படைஅலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பொதுமக்கள் மற்றும் சி.பி.பி.சி., எஸ்.பி.ஏ.ஆர்.எஸ்.எச். மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தீர்வு பெறலாம்.

    இதற்கான விண்ணப்பத்தினை திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெற்று படைவிலகல் சான்று நகல் (முதல் 4 பக்கங்களுடன்), பி.பி.ஓ., எஸ்.பி.ஏ.ஆர்.எஸ்.எச்., இ-பி.பி.ஓ., கோர் பி.பி.ஓ. மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு முதல் பக்கம் மற்றும் நாளது தேதி வரையிலான வரவுப்பதிவு செய்யப்பட்ட கடைசி 2 பக்கங்கள் ஆகிய ஆவண நகல்களுடன் பாதுகாப்பு ஓய்வூதிய அதாலத் அதிகாரி, சி.டி.ஏ. அலுவலகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கோ அல்லது legaladalatcdachn@gmail.com என்ற இணையதளம் மூலமாகவே அனுப்பலாம். தபால் மூலமாக முடியாத பட்சத்தில் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

    இத்தகவலை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தொிவித்துள்ளார்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 20- ல் நடைபெறுகிறது.
    • கூட்டமானது 27-ந்தேதி (புதன்கிழமை) அன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர்,செப்.24-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 27-ந்தேதி ( புதன்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்காக குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 20- ல் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.இதில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக வழங்கலாம்.

    எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • 15-ந் தேதி காலை 11 மணிக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 15-ந் தேதி காலை 11 மணிக்கு அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

    தாலுகா அளவில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த கூட்டம் பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. இந்த முறை அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது.

    அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முதன்மை அஞ்சல் அதிகாரியால் காணொளி காட்சி மூலம் நடத்தப்படுகிறது.
    • காணொளி காட்சியின் உள்ளீட்டுக் குறியீடும், பாஸ்வேர்டும் ஓய்வூதியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய அளவிலான அஞ்சல ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் வருகிற மார்ச் மாதம் நாளை காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலக வளாகத்தில், முதன்மை அஞ்சல் அதிகாரியால் காணொளி காட்சி மூலம் நடத்தப்படுகிறது.

    தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை என தபால் உறையின் மீது எழுதி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி-635 001 என்ற விலாசத்திற்கு வருகிற 24-ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், அஞ்சலக ஓய்வூதியர்கள் தங்களின் குறைகளை மின்னஞ்சல் முகவரிக்கும் மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்குள் அனுப்பலாம்.

    ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் முழுமையாக குறிப்பிட வேண்டும் காணொளி காட்சியின் உள்ளீட்டுக் குறியீடும், பாஸ்வேர்டும் ஓய்வூதியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    மேலும், ஓய்வூதியர்கள் தாங்கள் அனுப்பும் புகார்களில் ஓய்வூதியம் தொடர்பானகுறைகளை முழு விவரங்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும். சட்டரீதியான பிரச்சினைகள் மற்றும் அரசின் கொள்கைகள் சார்ந்த குறைகளைத் தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
    • வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது, ஆட்சித் திறனாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை ) காலை 11 மணிக்கு தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    எனவே தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் வட்டத்தில் வசிக்கும் ஆட்சித் திறனாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வரும் 26-ந் தேதி விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெற உள்ளது
    • மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில், கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இக்கூட்டத்திற்கு கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கபிரதிநிதிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    ×