search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity connection"

    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது.
    • மின்வினியோகம் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன.

    தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18-ம் தேதிகளில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது. மிக குறைந்த நேரத்தில் அதீத கனமழை பெய்ததால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்தன. தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் சுற்றுவட்டார பகுதிகள் உள்பட மாவட்டம் முழுக்க ஆயிரத்திற்கும் அதிக கிராமங்களை வெள்ளம் சூழந்தது.

     


    இரண்டு மாவட்டங்களிலும் ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் மின்வினியோகம், தொலைதொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டது. மழை நின்று ஒரு வாரத்திற்கும் மேலாகி விட்ட நிலையில், தூத்துக்குடியில் முழுமையாக மின்சேவை வழங்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

    • ராஜபாளையம் அருகே செட்டியர்பட்டியில் ரூ.8.70 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.
    • 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எனது முயற்சியால் அசையா மணி விலக்கு மேற்குப்பகுதி யில் புதியதாக போர்வெல் அமைக்கப்பட்டதையும் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் சாஸ்தா கோவில் அணை பகுதிக்கு வந்து கொண்டி ருக்கும் குறைந்த அளவு நீர்வரத்தை முறையாக செட்டியார்பட்டி பேரூ ராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சேறுவராயன் கண்மாய்க்கு கொண்டு செல்லும் பணிகளை முடுக்கி விட்டுள்ளேன்.

    நீர் செல்லும் வழிப் பாதையை சீரமைக்கப்பட்டு வருவதை அணையின் உள் பகுதிக்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆலோ சனைகள் வழங்கி உள்ளேன்.ஒரு வாரத்திற்குள் கண்மாய் நிரம்பியவுடன் தற்போது 2 வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் குடிநீரை 3 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.

    சேத்தூர் மற்றும் செட்டி யார்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்க முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது.

    செட்டியார்பட்டி பேரூ ராட்சியில் 2006-ம் ஆண்டு நான் துணை சேர்மனாக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி யால் செட்டியார்பட்டி பேரூ ராட்சிக்கு சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 2000 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 3 மடங்காக குடிநீர் இணைப்பு உயர்ந்து 7000 குடிநீர் இணைப்பு உள்ளது. அதனால் தான் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.

    இதனையும் சரி செய்யும் விதமாக செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு முறையாக குடிநீர் வழங்க 8.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக சிறப்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். இப்பணியை ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டம் செயல் பாட்டிற்கு வரும்போது செட்டியார்பட்டி பேரூராட்சியில் தினந்தோறும் குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
    • விவசாய மின் இணைப்பு பெற அந்தந்த பகுதி மின்வாரிய செயற்பொறியாளரை அணுகி பயன்பெறலாம்.

    திருப்பூர்:

    தட்கல் சிறப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விவசாயிகள் அந்தந்தப் பகுதி மின்வாரியத்தை அணுகலாம் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    இது குறித்து மின் வாரியத்தினா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஆணையின்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் ஏற்கனவே தட்கல் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. ஆகவே, இத்திட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற அந்தந்த பகுதி மின்வாரிய செயற்பொறியாளரை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனா்.

    • தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த மாணவி வீட்டுக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்பட்டது.
    • ஏழை, எளிய மாணவ, மாணவியின் நிலை பற்றி தகவலறிந்த தனியார் அறக் கட்டளையினர் மின் இணைப்பு வழங்க முடிவு செய்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சமய–நல்லூர் அருகே பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த–வர் சின்னையா (வயது 56), சமையல் உதவியாளர். இவரது மனைவி சுதா (41). தற்காலிக டெங்கு ஒழிப்பு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு ஜனனி (15) என்ற மகளும், கபிலேஷ் (11) என்ற மகனும் உள்ளனர். இதில் ஜனனி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பும், கபிலேஷ் 7-ம் வகுப்பும் படித்து வரு–கின்றனர். இவர்கள் சொந்த இடத்தில் மண் மதில் வீடு கட்டி ஓடுகளால் மேற்கூரை அமைத்து வசித்து வருகின்ற–னர்.

    இவர்களது வீட்டிற்கு நேற்று வரை மின்சார இணைப்பு இல்லை. கார–ணம், இவர்கள் வீட்டின் அருகில் மின்சார லைன்கள் எதுவும் செல்ல வில்லை. அதற்கு தனியாக மின் கம்பம் அமைத்தால்தான் மின் இணைப்பு வழங்கமுடி–யும் என்று மின்வாரியத்தினர் தெரிவித்து விட்டனர். அதற்கு ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் செலவு ஏற்படும் என்பதாலும், பணவசதி இல்லாததால் மின் இணைப்பு பெற முடியாம–லும் அவதிப்பட்டு வந்த–னர்.

    அதனால் தெருவிளக்கு வெளிச்சத்தில் ஜனனி, கபிலேஷ் இருவரும் இரவு நேரங்களில் வீட்டு பாடங் கள் எழுதி, படித்து வந்தனர். இந்த ஏழை, எளிய மாணவ, மாணவியின் நிலை பற்றி தகவலறிந்த தனியார் அறக் கட்டளையினர் தங்களது சொந்த செலவில் மின்கம் பம் அமைத்து மின் இணைப்பு வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று மின் இணைப்பு வழங்கி மின் விளக்கு வசதி ஏற்ப–டுத்தி தரப்பட்டது.

    இந்த மின்இணைப்பு பெற்றுத்தந்த தலைமை நிர்வாக அலுவலர் பால–கிருஷ்ணன், அசோக்குமார், சமூக பொறுப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் மற்றும் அறக்கட்டளையினருக்கு சின்னையா, சுதா, ஜனனி, கபிலேஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஜீவானந்தம் மனோகரன், கருணாநிதி பொன்னுத்தாய், உமா மகேஸ்வரன் உறவினர்க–ளும், நண்பர்கள், பொது–மக்களும் நன்றி தெரிவித்த–னர்.

    • வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • 95 சதவீதம் பேர் வீட்டின் மின் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஈரோடு நகரியம் கோட்டம், தெற்கு கோட்டம், பெருந்துறை கோட்டங்களில் வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாம்கள் செயற்பொறியாளர்கள் நாச்சிமுத்து, சாந்தி, வாசுதேவன் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், அந்தந்த மின் பிரிவு அலுவலகங்களில் நடந்தது.

    இதில் பெயர் யமாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களில் ஈரோடு தெற்கு மின் கோட்டத்தில் 200 பேருக்கும், நகரியம் மின் கோட்டத்தில் 236 பேருக்கும், பெருந்துறை கோட்டத்தில் 150 பேர் என 586 பேருக்கு ஒரே நாளில் பெயர் மாற்றம் செய்து அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,

    மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் வீட்டின் மின் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இந்த மாதம் இறுதி வரை அந்தந்த பிரிவு அலுவலகங்களில் வீட்டு வரி ரசீது, கிரைய பத்திர நகல், பாக பிரிவினை பத்திர நகல், கணினி பட்டா,

    அரசால் வழங்கப்பட்ட உரிமை சான்று, வாரிசு சான்று, பிணையுறுதி பத்திரம், பெயர் மாற்ற கட்டணம் ரூ.726-உடன் விண்ணப்பிக்கலாம் என கூறினர்.

    • பொதுமக்கள் 10 ஆயிரம் மின்இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
    • அனைத்து அரசு அலுவலகம், போலீஸ் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த கீழக்கரையிருப்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு மின்சார வாரியம் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. இந்த துணை மின் நிலையம் மூலம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் 50 கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் 10 ஆயிரம் மின் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் உயர் அழுத்த மின்கம்பிகள் பழுதடைந்து அறுந்து விழுந்து விடுவதால் மின்வினியோகம் பெறும் கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு குறைந்த அளவு மின்சாரம் வருவதால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் மின்சாதனங்கள், உபயோக பொருட்கள் பழுதடைந்து வருகிறது.இதனால் திருமருகல் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது.அடிக்கடி ஏற்படும் மின்தடையால் திருமருகல் அரசு ஆஸ்பத்திரி, வேளாண்மை அலுவலகம்,ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம் மற்றும் அனைத்து அரசு அலுவலகம்,போலீஸ் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    எனவே திருமருகல் பகுதிகளில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை புதிதாக மாற்றியமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மனு கொடுத்தார்.
    • மனுவை பெற்றுக்கொண்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட மின்சார வாரியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம் திருப்பூர் குமார்நகரிலுள்ள கோட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் பொறுப்பு அதிகாரியான சுமதி தலைமையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மனு கொடுத்தார். அந்த மனுவில் மின்சார இணைப்புகளுக்கு மாதாந்திர நிரந்தர கட்டணம் அதிகபடியாகி உள்ளதால் மின் நுகர்வோர்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தங்களுடைய மின் இணைப்பில் லோடு குறைப்பு செய்யக்கோரி விண்ணப்பித்தால் பல மாதங்களாகியும் லோடு குறைக்காமல் அலைக்கழிக்கப்படுவது தொடர்பாக உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், மின்வாரிய இணையதள சர்வரில் சில மாற்றம் செய்ய வேண்டுமெனவும், இதுதொடர்பாக சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தி உரிய தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    • மின் கணக்கீடு செய்யப்பட்டடு தொகை தெரிவிக்கப்பட்டது.
    • முன்வைப்புத் தொகையை செலுத்துவது என்பது அனைத்துத் தரப்பினராலும் முடியாதது.

    அவினாசி :

    அவிநாசி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணைப் பொதுச்செயலாளா் ஈ.பி. அ.சரவணன், மேற்பாா்வை பொறியாளா் சுமதி, கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

    திருப்பூா் மின்பகிா்மான வட்டப் பகுதிகளில் உள்ள மின்நுகா்வோருக்கு இந்த மாதம் மின் கணக்கீடு செய்யப்பட்டடு தொகை தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொகையை செலுத்த சென்றபோதுதான் கூடுதலாக முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்பது தெரியவருகிறது. அதிலும் மின் கட்டணத்துடன் முன்வைப்புத் தொகையை செலுத்துவது என்பது கூலித் தொழிலாளா்கள் உள்பட அனைத்துத் தரப்பினராலும் முடியாதது. ஆகவே, இணையத்தில் உள்ள இரு தொகையை செலுத்தும் குறியீட்டை மாற்றி, தனித்தனியாக செலுத்தவும், முன்வைப்புத் தொகையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

    இக்கோரிக்கையை பரிசீலித்த மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சுமதி, பொதுமக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு, முன்வைப்புத் தொகையை ஜூன் 14 முதல் 30 நாள்களுக்கு தனியாக செலுத்தலாம் எனவும், வழக்கம்போல மின் கட்டணத்தை தனியாக செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.

    • லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் 10 நாட்களுக்குள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • எழுத்துப்பூர்வ புகார்கள் கிடைக்கப்பெற்றால் அதை அதிகாரிகளிடம் உடனே சமர்பிக்க வேண்டும்.

    சென்னை:

    மின் இணைப்பு பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. இணைப்பு கொடுப்பதற்கு எத்தனை ஊழியர்கள் வருகிறார்களோ அவர்களுக்கும் சேர்த்து பணம் கொடுக்க வேண்டும்.

    இந்த நிலையை மாற்ற அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதையொட்டி லஞ்ச ஒழிப்பு இயக்குனர் வன்னிய பெருமாள் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    மின்சார வாரிய சேவை இணைப்புகளை வழங்குவதற்கு ஒரு சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதும் வாங்குவதும் வழக்கத்தில் உள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது.

    இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் 10 நாட்களுக்குள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வ புகார்கள் கிடைக்கப்பெற்றால் அதை அதிகாரிகளிடம் உடனே சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • போலி ஆவணங்கள் மூலம் மின் இணைப்பு செய்த மின்வாரிய அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
    • மைதீன் மதார், தேனி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை கே.புதூர் கற்பக விநாயகர் காலனியை சேர்ந்தவர் மைதீன் மதார். இவருக்கு சுந்தர்ராஜன்பட்டியில் ஒரு வீடு உள்ளது.

    அதே பகுதியைச் சேர்ந்த முகமது யாகூப், முகமது அனிபா ஆகியோர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மூலம் மைதீன் மதார் வீட்டுக்கான மின் இணைப்பு பெற்றதாக தெரிகிறது.

    இது தொடர்பாக மைதீன் மதார், தேனி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும், அவருக்கு நிவாரணமாக மின்வாரிய அதிகாரிகள் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    • மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது.
    • மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    தாராபுரம் :

    தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் கோட்டம், தாராபுரம் நகர் மற்றும் கிராமியம் தாராபுரம் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட, பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது. அவினாசி பகுதியில் மின்வாரியம் அல்லாத தனிநபர் ஒருவர், புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரரிடம் திருடப்பட்ட மின் அளவியை மின்வாரியத்திலிருந்து மின் அளவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    அவினாசி மின்வாரிய பொறியாளர் தகவல் தெரிவி்த்ததால் இது தொடர்பாக அவினாசி, தாராபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பல்லடம் மின்பகிர்மான பகுதியில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரரிடம் மின்அளவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி உடுமலை வட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் அளவியை திருடி அதை தனிநபர் ஒருவர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.6 ஆயிரம் பெற்று சென்றுள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளில் பொருத்தப்பட்ட மின் அளவிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் மின்வாரியம் அல்லாத தனிநபர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மின் அளவி ஒதுக்கப்பட்டதாக கூறி பணம் கேட்டால் உடனடியாக உதவி மின்பொறியாளர் (விண்ணப்பித்த பிரிவு அலுவலகம்) அல்லது தாராபுரம் செயற்பொறியாளர் செல்போன் எண்: 94458 51562-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுபோல் சந்தேகப்படும் படி மோசடி நபர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டறியப்பட்டால் உடனடியாக தங்கள் பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திலும் மற்றும் மின்வாரிய அலுவலர்களிடமும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • 1,000 எண்ணிக்கையில் மின் இணைப்பு வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகள் துரித மின் இணைப்புக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டப்பேரவை யில் 2022-23 ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது தாட்கோ திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடா், பழங்குடி யின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இத்திட்டத்தில் குதிரை மோட்டார் மின் திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் 900 ஆதிதிராவிடா், 100 பழங்குடியினா் என மொத்தம் 1,000 எண்ணிக்கையில் மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்பை சோ்ந்த விவசாயிகள், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவா்களது பெயரில் இருப்பவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com இணையதளத்தில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட தற்கான நிலத்தின் வரைபடம், சா்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்தற்கான ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகி விவரங்களைப் பெற்று உரிய ஆவணங்க ளுடன் விண்ணப்பதைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×