search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் இணைப்பில் லோடு குறைப்பு செய்யக்கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடி தீர்வு வேண்டும் - தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மனு
    X

    கோப்புபடம்

    மின் இணைப்பில் லோடு குறைப்பு செய்யக்கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடி தீர்வு வேண்டும் - தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மனு

    • தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மனு கொடுத்தார்.
    • மனுவை பெற்றுக்கொண்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட மின்சார வாரியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம் திருப்பூர் குமார்நகரிலுள்ள கோட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் பொறுப்பு அதிகாரியான சுமதி தலைமையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மனு கொடுத்தார். அந்த மனுவில் மின்சார இணைப்புகளுக்கு மாதாந்திர நிரந்தர கட்டணம் அதிகபடியாகி உள்ளதால் மின் நுகர்வோர்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தங்களுடைய மின் இணைப்பில் லோடு குறைப்பு செய்யக்கோரி விண்ணப்பித்தால் பல மாதங்களாகியும் லோடு குறைக்காமல் அலைக்கழிக்கப்படுவது தொடர்பாக உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், மின்வாரிய இணையதள சர்வரில் சில மாற்றம் செய்ய வேண்டுமெனவும், இதுதொடர்பாக சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தி உரிய தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    Next Story
    ×