search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess Olympiad"

    • பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார்.
    • 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி நிறைவு பெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடர் குறித்து தற்போது வரை பல நாட்டு வீரர்களும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

    இந்நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை ஏற்கனவே இருமுறை தோற்கடித்து செஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார். அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இன்று எனது 12-ம் வகுப்பு தேர்வில் ஆங்கில தேர்வுக்கான கேள்வி தாளை கொடுத்தனர். அதில் வந்த கேள்வியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கேள்வி என்னவென்றால், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எவ்வாறு நடைபெற்றது என்பதை விவரித்து வெளிநாட்டில் படிக்கும் உங்கள் நண்பருக்கு கடிதம் எழுதுங்கள் என கேள்வித்தாளில் இடம் பெற்றிருந்தது என குறிப்பிட்டிருந்தார்.

    பிரக்யானந்தாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்விக்கு நீங்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றீர்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். முடிவுகள் வெளிவந்தவுடன் பகிரவும் என பதிவிட்டிருந்

    • செஸ் ஒலிம்பியாட்டில் மேலும் ஒரு மணி மகுடமாய் அமைந்தது, யோகா பயிற்சி.
    • மன புத்துணர்ச்சி பெறவும், செஸ் வீரர்களை உற்சாகமாக வைக்கவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது.

    செஸ் ஒலிம்பியாட் மூலம் உலக அரங்கில் தமிழகத்தின் மீதான பிம்பம் அதிகரித்துள்ளது. பிரம்மாண்டமும், பாரம்பரியமும் இணைந்திருந்தது. நம் நாட்டவர் மட்டுமல்ல வெளிநாட்டினரும் வாய் பிளந்து, ரசித்து, ருசித்து செஸ் ஒலிம்பியாட்டை ஒரு திருவிழாவாக கொண்டாடி தீர்த்தோம். நேப்பியார் பாலம் முதல் தம்பி சிலை வரை ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் என்றால் அது மிகையாகாது. செஸ் ஒலிம்பியாட்டில் மேலும் ஒரு மணி மகுடமாய் அமைந்தது, யோகா பயிற்சி. மன புத்துணர்ச்சி பெறவும், செஸ் வீரர்களை உற்சாகமாக வைக்கவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுரியின் பேராசிரியர் இந்திரா தேவி மேற்பார்வையில் செஸ் வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    அது குறித்த ஒரு நேர்காணல்!

    யோகா மூலம் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம்?

    யோகா என்பது மருந்தில்லா மருத்துவம். சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு யோகா மூலமும், இயற்கை உணவின் மூலமுமே சரி செய்து விடுவோம். குறிப்பாக ஐடி துறையிலும், உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும் சீக்கிரம் சர்க்கரை, உடல் பருமனுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு நிச்சயம் இந்த யோகா வரப்பிரசாதம் தான்.

    செஸ் ஒலிம்பியாட்டில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

    ஆயுஷ் என்ற மத்திய அரசு நிறுவனத்தின் மூலம் தமிழக அரசு எங்களை அணுகியது. சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி தான் யோகாவில் தலைமையகம் என்பதால், வீரர்களுக்கு பயிற்சி அளிக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. 187 நாடுகளில் இருந்து வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்டிற்கு தமிழகம் வந்தனர். கிட்டத்தட்ட 2000 வீரர்கள். அவர்கள் யோகா பயிற்சியில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாங்கள் 21 குழுக்களாக பிரிந்து வீரர்களுக்கு பயிற்சி அளித்தோம். சுமார் 60 யோகா மருத்துவர்கள் இதில் பங்கேற்றோம்.

    வெளிநாட்டு வீரர்கள் யோகாவில் எப்படி தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்?

    ஆரம்பத்தில் கொஞ்சம் பேர் தான் இதில் பங்கேற்றனர். யோகா பயிற்சியை பற்றி அறிந்ததும் நிறைய பேர் இதில் பங்கேற்க துவங்கினர். இது அவங்களுக்கு புதுவித அனுபவமா இருந்ததா சொன்னாங்க. ஸ்ட்ரெஸ் ரிலீபா இருந்ததாகவும், புத்துணர்ச்சியுடன் இருந்ததாகவும் சொன்னாங்க.

    எத்தனை நாட்கள் அவங்களுக்கு யோகா பயிற்சி அளித்தீர்கள்?

    செஸ் வீரர்கள் யோகா கத்துக்கிறதில ரொம்பவும் ஆர்வம் காட்டினாங்க. நம்ம தமிழக அரசு இலவசமாகவே யோகா பயிற்சி அளித்ததை வியந்து பார்த்தாங்க. எங்க நாட்ல யோகா மிகவும் காஸ்ட்லியானது. இங்கு இலவசமாக சொல்லிக் கொடுப்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறினர். செஸ் ஒலிம்பியாட் நடந்த 14 நாட்களுமே நாங்க யோகா வகுப்பு எடுத்தோம். காலை 8 மணி முதல் 12 மணி வரை நாங்க யோகா பயிற்சி சொல்லிக் கொடுத்தோம்.

    எந்த நாட்டினர் ஆர்வமுடன் யோகா கத்துக்கிட்டாங்க?

    நைஜீரியா, அமெரிக்கர், உகாண்டா இவங்க ரொம்ப ஆர்வமா கத்துக்கிட்டாங்க. ஜார்ஜியா, டான்சானியா, டொமினிகா, ஸ்பெயின், உக்ரைன் இந்த நாடுகளில் இருந்தும் யோகா கத்துக்கிட்டாங்க. அவங்க அனுபவங்களை வீடியோவா எங்க கிட்ட பகிர்ந்திக்கிட்டாங்க.

    செஸ் வீரர்களுக்கு யோகா எந்தளவுக்கு பயனுள்ளதா இருந்தது?

    முதல்ல செஸ் வீரர்களுக்கு ஏன் யோகா முக்கியம்னு சொல்றேன். மத்த விளையாட்டுக்கள் மாதிரி செஸ் கிடையாது. இது மைண்ட் கேம்ஸ். ஒரே இடத்தில் உக்கார்ந்து மூளைக்கும், கண்களுக்குமான ஒரு விளையாட்டு. இதனால், சீக்கிரமாவே அவங்க உடலும், மனமும் சோர்வடைந்துவிடும். புது இடம்ங்கிறதால தூங்குவதற்கும் சிரமம்பட்டிருப்பாங்க. யோகா பண்ணுவதால் நல்லா தூங்கினதா சொன்னாங்க. விளையாட்டுல நல்லா கவனம் செலுத்தினாங்க.

    என்னென்ன யோகா பயிற்சி அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தீங்க…

    யோகா ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம், தாரன பயிற்சி, யோக நித்திரை பயிற்சி அளித்தோம். பிராண முத்திரை, இருதய முத்திரை, கைகளை தட்டுவதையும், சிரிப்பு யோக சிகிச்சையும் கொடுத்தோம். திராட்டகா என்ற கண்களுக்கான பயிற்சியும் அளித்தோம்.

    யோகா பயிற்சி பெற்ற வீரர்கள் என்ன சொன்னாங்க…

    யோகா பண்ணிட்டு போனதால தான் எங்களால நல்லா விளையாட முடிந்ததுனு சொன்னாங்க. தூங்கி எழுந்து புத்துணர்ச்சியோட இருந்ததா சொன்னாங்க. தன்னம்பிக்கையும், உற்சாகமும் இருந்ததாகவும் சிந்திக்கும் திறமை அதிகப்படுத்தியதுனு சொன்னாங்க.

    கொரோனா சமயத்தில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

    கொரோனா சமயத்தில், எங்கள் மருத்துவக் குழு மருத்துவமனைக்கே சென்று நோயாளிகளுக்கு மூச்சுப் பயிற்சி, தியானம் சொல்லிக் கொடுத்தோம். ஆக்சிஜன் அளவு உடலில் குறையும் நோயாளிகளுக்கு நாங்கள் அளித்த மூச்சுப் பயிற்சியின் மூலம் அவர்களின் உடலில் இயற்கையான முறையில் ஆக்சிஜன் அளவு அதிகரித்தது.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி.
    • சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழ்நாட்டிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று உங்கள் ஆதரவை கோருகிறேன்.

    சென்னை:

    "44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும், அரசும் மிகச் சிறப்பாக நடத்தி உள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்" என பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளப்பதிவு மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்

    இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தங்களது கனிவுமிகு பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

    விருந்தோம்பலும் தன்மானமும் தமிழர்களின் இணைபிரியா இருபெரும் பண்புகள் ஆகும்!

    தொடர்ச்சியான உங்களது ஆதரவையும், இதுபோல இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளையும் தமிழ்நாட்டுக்கு வழங்குமாறு தங்களைக் கோருகிறேன்.

    யாதும் ஊரே யாவரும் கேளிர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இதுவரை 9 செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி விட்டேன்.
    • நான் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சூழலில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் உணர்வுபூர்வமானது.

    சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியா 1-வது பெண்கள் அணியில் இடம் பிடித்தவர்களில் ஹரிகா துரோணவல்லியும் ஒருவர். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஹரிகா நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். ஆனாலும் சொந்த மண்ணில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக உடல்நிலையை பொருட்படுத்தாமல் களம் இறங்கினார். 7 சுற்றுகளில் ஆடிய அவர் அனைத்து ஆட்டங்களிலும் 'டிரா' செய்திருந்தார்.

    வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் சூடிய பிறகு 31 வயதான ஹரிகா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்திய செஸ் அணிக்காக எனது பயணம் 18 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது எனது 13-வது வயதில் தொடங்கியது. இதுவரை 9 செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி விட்டேன். இந்திய பெண்கள் அணிக்காக பதக்கமேடையில் ஏற வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அந்த கனவு ஒரு வழியாக இப்போது நனவாகி இருக்கிறது. நான் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சூழலில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் உணர்வுபூர்வமானது.

    இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடத்தப்படுவது குறித்து கேள்விப்பட்ட போது, எனது டாக்டர் எந்த சிக்கலும் இன்றி தொடர்ந்து உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் இந்த போட்டியில் விளையாடுவது சாத்தியம் என்று என்னிடம் கூறினார். அதன் பிறகு எனது சிந்தனை, செயல் எல்லாமே ஒலிம்பியாட்டில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் ஐக்கியமானது. அதற்காக ஒவ்வொரு அடியையும் முழு அர்ப்பணிப்புடன் எடுத்து வைத்தேன். வளைகாப்பு, விருந்து, கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம். எல்லாமே ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற பிறகு தான் என்று தீர்க்கமாக முடிவு எடுத்தேன். களத்தில் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்தேன். கடந்த சில மாதங்களாக இந்த தருணத்துக்காகத் தான் காத்திருந்தேன். இப்போது அதை அடைந்து விட்டேன். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய பெண்கள் அணி பதக்கத்தை உச்சிமுகர்ந்து விட்டது.

    இவ்வாறு ஹரிகா கூறியுள்ளார்.

    • உலக புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியதன் மூலம் செஸ் விளையாட்டு ஆர்வலர்களின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியிருக்கிறது.
    • மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளின் போது உணவு ஒவ்வாமை பிரச்சினை பெரிய அளவில் இருக்குமாம்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 12 நாட்கள் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வெளிநாட்டு வீரர்கள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரத்தில் இரண்டு மெகா அரங்குகள் உருவாக்கப்பட்டு அதில் 707 டிஜிட்டல் செஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. 'சென்சார்' உதவியுடன் இயங்கும் இந்த செஸ் போர்டுகள் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. இவை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றில் ஏறக்குறைய 360 போர்டுகள் வாடகை அடிப்படையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) வழங்கி இருந்தது. போட்டி முடிந்ததும் அவற்றை 46 நாடுகளுக்கு 2, 3, 4 வீதம் இலவசமாக 'பிடே' வழங்கி இருக்கிறது. மீதமுள்ள செஸ் போர்டுகள் இந்திய செஸ் சம்மேளனம் வசம் இருக்கிறது. அவற்றை இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    11-வது மற்றும் கடைசி சுற்று போட்டி முடிந்ததும் வீரர், வீராங்கனைகள் இருக்கையின் பக்கவாட்டு ஸ்டேண்டில் வைக்கப்பட்டிருந்த தங்களது பெயர் பொறிக்கப்பட்ட பலகை, கடைசியாக எழுதிய ஸ்கோர் சீட்டு, பேனா உள்ளிட்டவற்றை ஒலிம்பியாட்டில் விளையாடியதற்கான நினைவு பொருளாக எடுத்து சென்றதை பார்க்க முடிந்தது.

    மாமல்லபுரம் பகுதியில் உள்ள 21 நட்சத்திர ஓட்டல்களில் வீரர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அவர்கள் நாட்டு உணவுடன், விதவிதமான இந்திய உணவுகளும் பரிமாறப்பட்டன. மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளின் போது உணவு ஒவ்வாமை பிரச்சினை பெரிய அளவில் இருக்குமாம். ஆனால் தமிழகத்தில் அது போன்ற புகார்கள் ஏதும் வீரர்கள் தரப்பில் இருந்து வரவில்லை. தமிழகத்தில் கிடைத்த வரவேற்பும், விருந்தோம்பலும் மறக்க முடியாத ஒன்றாக இருந்ததாக போலந்து, மால்டோவா, மான்டினெக்ரோ உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் கூறி நெகிழ்ந்தனர்.

    இந்த போட்டியில் இந்தியா தரப்பில் 95 நடுவர்கள் பணியாற்றினார்கள். இந்திய நடுவர்களின் தொழில்நுட்பமும், தரமும், செயல்பட்ட விதமும் மிக அருமையாக இருந்தது என்று போலந்து முன்னணி நடுவர் டோமெக் பாராட்டியுள்ளார்.

    சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு பைபரால் செய்யப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிற்பம், ஒலிம்பியாட் சின்னம் பொறிக்கப்பட்ட குடை, தொப்பி மற்றும் தமிழகத்தில் உள்ள சுற்றுலாதலங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய கையேடு ஆகியவை பேக்கில் போட்டு வழங்கப்பட்டது.

    உலக புகழ்பெற்ற செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியதன் மூலம் செஸ் விளையாட்டு ஆர்வலர்களின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியிருக்கிறது. அத்துடன் இந்த போட்டியை முன்பு எப்போதும் இல்லாததை விட அதிக பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தற்போது சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளை தங்கள் மண்ணில் நடத்த மராட்டியம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வம் காட்டுவதாக செஸ் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் ஆக மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.
    • செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28-ந்தேதி நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார்.

    29-ந்தேதி முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. 11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்றது. ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் ஆக மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடந்தது. இந்தப் போட்டியின் முடிவில் இந்தியாவின் 2 அணிகள் வெண்கல பதக்கம் பெற்றன.

    ஓபன் பிரிவில் குகேஷ், நிஹல் சரின், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி ஆகி யோரை கொண்ட இந்திய 'பி' அணி வெண்கல பதக்கம் பெற்றது. பெண்கள் பிரிவில் ஹம்பி, ஹரிகா, வைசாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் அடங்கிய இந்திய 'ஏ' அணி வெண்கல பதக்கம் பெற்றது. இது தவிர தனி நபர் பிரிவில் 7 இந்தியர்கள் பதக்கம் பெற்றனர்.

    நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் 2 அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.

    இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப்பிரிவில் 'இந்திய பி அணியும்' பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணியும்' என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற 'இந்திய பி அணிக்கும்', பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 'இந்திய ஏ அணி (பெண்கள்)' ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி‌‌ ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், அர்மெனியா வெள்ளியும், பெண்கள் பிரிவில் உக்ரைன் தங்கமும், ஜார்ஜியா வெள்ளி பதக்கமும் பெற்றன.

    • அர்மேனியா அணி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம், நினைவு பரிசை வழங்கினார்.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது. அந்த அணியின் நோடிர்பெக் யாகுபோவ், ஜாவோகிர் சிந்தாரோவ், ஷம்சிடின் வோகிடோவ் மற்றும் ஜஹோங்கிர் வாகிடோவ் ஆகியோர் தங்கம் வென்றனர்.

    2வது இடம் பிடித்த அர்மேனியா அணி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றது. அந்த அணியின் சர்கிசியன் கேப்ரியல், மெல்குமியன் ஹ்ரான்ட், பெட்ரோசியன் மானுவல் மற்றும் ஹோவன்னிசியன் ராபர்ட் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

    இந்திய பி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த அணியின் குகேஷ், சரின் நிகல், பிரக்ஞானந்தா மற்றும் சத்வானி ரவுனக் ஆகியோர் வெண்கலம் வென்றனர். 


    மகளிர் பிரிவு உக்ரைன் அணியின் முசிச்சுக் மரியா, முசிச்சுக் அன்னா, உஷெனினா அன்னா மற்றும் புக்ஸா நடாலியா ஆகியோர் தங்கம் வென்றனர். ஜார்ஜியாவின் டிசக்னிட்ஸ் நானா, பாட்சியாஷ்விலி நினோ, ஜவகிஷ்விலி லேலா, அரபிட்ஸே மேரி ஆகியோர் வெள்ளி வென்றனர்.

    இந்திய மகளிர் 'ஏ' அணியின் கோனேரு ஹம்பி, வைஷாலி, தானியா சச்தேவ் மற்றும் குல்கர்னி பக்தி ஆகியோர் வெண்கலம் வென்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனிநபர் போர்டு பிரிவில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. 

    ஓபன் பிரிவி தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கப்பதக்கம் வழங்கினார். குதிரை வடிவம் கொண்ட தம்பி நினைவு பரிசையும் அவர் வழங்கி கௌரவித்தார். உஸ்பெகிஸ்தான் அணிக்கு செஸ் ஒலிம்பியாட் கோப்பை வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சியில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அகார்டி டிவோர்கோவிச், அந்த அமைப்பின் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ மற்றும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
    • இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.



    இந்நிலையில், நிறைவு விழாவின் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதானாவும் பங்கேற்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடினார்.

    தொடர்ந்து நிறைவு விழாவில் கண்கவர் இசை நிகழ்ச்சி, விருது வழங்கும் விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.

    • செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

    சென்னை:

    செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியதாவது:

    அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது.

    செஸ் ஒலிம்பியாட்டிற்கு பின் விளையாட்டுத்துறை முன்பை விட அதிக பாய்ச்சலுடன் செல்லும்.

    சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    வெளிநாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர்.

    சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் என வெளிநாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

    குடியுரிமை, சுங்கச்சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
    சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,500 க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வெளி நாட்டு வீரா், வீராங்கனைகள் அனைவரும் தங்கள் நாடுகளிலிருந்து விமானங்களில் சென்னை விமானநிலையம் வந்து அவா்கள் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கின்றனா்.

    அதைப்போல் போட்டிகள் முடிந்து, தங்கள் நாடுகளுக்கு திரும்பும் போதும் சென்னை விமான நிலையம் வழியாகவே செல்கின்றனா். அதைப்போல் போட்டிகளை காண ஏராளமான வெளிநாட்டு பாா்வையாளா்களும் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

    அதனால் சென்னை விமானநிலையத்தில் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாட்டவா், குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வருபவா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே அவா்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை சென்னை விமானநிலையம் உள்நாடு, சா்வதேச முணையங்களில் செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள், பார்வையாளர்கள், சிரமம் இல்லாமல் சோதனைகளை விரைந்து முடித்து வெளியேற, உரிய வசதிகள் செய்துத்தர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

    அதற்காக குடியுரிமை, சுங்கச்சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் விமான நிலைய உயா் அதி காரிகள், விமானநிறுவன அதிகாரிகள், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், தமிழக போலீஸ் அதிகாரிகள், உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முதல் கட்ட கூட்டத்தில், பல்வேறு அதிகாரிகள் பல விதமான ஆலோசனைகளை தெரிவித்தனர். அப்போது எந்தெந்த பகுதிகளில் எத்தனை சிறப்பு கவுண்டா்கள் அமைப்பது என்று ஆலோசனை நடந்தது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, விமான நிலையத்திற்கு வரும் பயணியர், சிக்கல்கள் எதிர்கொள்வதை தவிர்க்கவும், விரைவாக வெளி யேறவும் உரிய நட வடிக்கைகள் எடுக்க திட்ட மிடப்பட்டுள்ளது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையும் படியுங்கள்.. சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    மாமல்லபுரம் வரும் செஸ் வீரர்களை தங்க வைக்க நட்சத்திர அந்தஸ்து உள்ள 38 ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    மாமல்லபுரம்:

    சர்வதேச 44-வது “செஸ் ஒலிம்பியாட்” போட்டி ஜூலை 28-ந்தேதி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த போட்டி ஏற்பாடுகளுக்காக தமிழக அரசு ரூ.92 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியின் முதல் மாடியில் செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தனியாக அதிநவீன அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் தற்காலிகமாக 25 ஊழியர்கள் “ஷப்டு” முறையில் இரவு, பகலாக பணியாற்றி வருகிறார்கள்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க தேர்வாகும் வெளிநாட்டு வீரர்களின் விபரங்கள், அவர்கள் நாட்டில் பகல் நேரத்தில் அவர்களிடம் கேட்டு தகவல்களை சேகரித்தல், அவர்களது நாட்டு தூதரங்களுடன் அலுவலக நேரத்தில் பேசுதல், விசா ஏற்பாடு செய்தல், விமான டிக்கெட் பதிவு செய்தல் போன்ற வெளிநாட்டு தூதரகம் தொடர்பான பணிகளுக்காக வேறு நாட்டு மொழிகள் தெரிந்தவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், செஸ் வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அங்கு அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    மாமல்லபுரம் வரும் செஸ் வீரர்களை தங்க வைக்க நட்சத்திர அந்தஸ்து உள்ள 38 ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஓட்டல்களில் உள்ள வசதிகள், வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் அறைக்கு வருவது, ஓட்டலில் இருந்து விளையாட்டு அரங்கம் செல்வது, போட்டி முடிந்து செல்லும் இடங்கள் எங்கு என அனைத்தையும் “கேர்டு அனிமேசன்” ஒலி-ஒளி வரைபடமாக உருவாக்கி அதை பல்வேறு நாட்டு தூதரகங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடந்து வருகிறது.
    செஸ் ஒலிம்பியாட் தொடர் வரலாற்றிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் தொடராக மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் அமைந்துள்ளது.
    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    உலகளவில் செஸ் போட்டியில் சிறந்து விளங்கக்கூடிய முன்னணி வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியை மிக பிரமாண்டமான முறையில் நடத்திட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இந்த செஸ், ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அது மட்டுமின்றி மாமல்லபுரம் வரும் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கும் அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க உள்ளது.

    இதற்காக தமிழக அரசு ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து பணிகளை துவங்கி உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடியை தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கி இருந்தது.

    இப்போது போட்டிக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மேலும் ரூ.10 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் தொடர் வரலாற்றிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் தொடராக மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் அமைந்துள்ளது.


    ×