search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பியாட் போட்டி"

    மாமல்லபுரம் வரும் செஸ் வீரர்களை தங்க வைக்க நட்சத்திர அந்தஸ்து உள்ள 38 ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    மாமல்லபுரம்:

    சர்வதேச 44-வது “செஸ் ஒலிம்பியாட்” போட்டி ஜூலை 28-ந்தேதி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    இந்த போட்டி ஏற்பாடுகளுக்காக தமிழக அரசு ரூ.92 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியின் முதல் மாடியில் செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தனியாக அதிநவீன அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் தற்காலிகமாக 25 ஊழியர்கள் “ஷப்டு” முறையில் இரவு, பகலாக பணியாற்றி வருகிறார்கள்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க தேர்வாகும் வெளிநாட்டு வீரர்களின் விபரங்கள், அவர்கள் நாட்டில் பகல் நேரத்தில் அவர்களிடம் கேட்டு தகவல்களை சேகரித்தல், அவர்களது நாட்டு தூதரங்களுடன் அலுவலக நேரத்தில் பேசுதல், விசா ஏற்பாடு செய்தல், விமான டிக்கெட் பதிவு செய்தல் போன்ற வெளிநாட்டு தூதரகம் தொடர்பான பணிகளுக்காக வேறு நாட்டு மொழிகள் தெரிந்தவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், செஸ் வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அங்கு அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    மாமல்லபுரம் வரும் செஸ் வீரர்களை தங்க வைக்க நட்சத்திர அந்தஸ்து உள்ள 38 ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஓட்டல்களில் உள்ள வசதிகள், வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் அறைக்கு வருவது, ஓட்டலில் இருந்து விளையாட்டு அரங்கம் செல்வது, போட்டி முடிந்து செல்லும் இடங்கள் எங்கு என அனைத்தையும் “கேர்டு அனிமேசன்” ஒலி-ஒளி வரைபடமாக உருவாக்கி அதை பல்வேறு நாட்டு தூதரகங்களுக்கு அனுப்பும் பணிகளும் நடந்து வருகிறது.
    செஸ் ஒலிம்பியாட் தொடர் வரலாற்றிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் தொடராக மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் அமைந்துள்ளது.
    சென்னை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    உலகளவில் செஸ் போட்டியில் சிறந்து விளங்கக்கூடிய முன்னணி வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியை மிக பிரமாண்டமான முறையில் நடத்திட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இந்த செஸ், ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அது மட்டுமின்றி மாமல்லபுரம் வரும் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கும் அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க உள்ளது.

    இதற்காக தமிழக அரசு ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து பணிகளை துவங்கி உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடியை தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கி இருந்தது.

    இப்போது போட்டிக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மேலும் ரூ.10 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் தொடர் வரலாற்றிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் தொடராக மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் அமைந்துள்ளது.


    மாமல்லபுரத்தில் அனைத்து நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள், மேலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் வீரர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

    மாமல்லபுரம்:

    சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் தொடங்க உள்ளது. 186 நாடுகளில் இருந்து இங்கு வரும் செஸ் வீரர்களை 38 நட்சத்திர அந்தஸ்து விடுதிகளில் தங்க வைக்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    வீரர்கள் தங்கும் 38 விடுதிகளில் உணவு வழங்குதல், உபசரித்தல், விருந்தோம்பல் செய்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல், ரூம்களில் அதிவேக இணையதள வசதி இருத்தல் போன்ற ஏற்பாடுகளை கவனிக்க தமிழக அரசு வருவாய்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது.

    அந்த குழு நேற்று மாலை மாமல்லபுரத்தில் அனைத்து நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள், மேலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் வீரர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.

    ஓட்டல் நிர்வாகிகள் கூறும் போது, ஜி.எஸ்.டி வரிவிலக்கு தேவை, வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக வீடியோகால் பயன் படுத்துவார்கள். அதற்கு தற்போது இருக்கும் இணைய சேவை ஒத்துழைக்காது. தடையில்லா குடிநீர் தரவேண்டும், கூடுதல் மின்சாரம் தரவேண்டும், வீரர்கள் பாதுகாப்பு காவலர்கள் உணவுக்கான கட்டணமும் தரவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை செயலர் வினய், சிறப்பு அலுவலர்கள் வீரப்பன், திவாகர், கலெக்டர் ராகுல் நாத், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந் தகன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×