search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரக்யானந்தா"

    • உலக அரங்கில் எனது நாடு சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.
    • பிரக்யானந்தாவின் திறமை மற்றும் முன்னேறிய வேகம் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று அதானி கூறியுள்ளார்.

    பிரக்யானந்தா டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியில் உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி இந்தியாவின் நம்பர் 1 ஆனார்.

    கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்யானந்தா முதன்முறையாக மூத்த சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி இந்தியாவின் முதல் தரவரிசையில் உள்ள ஆடவர் சதுரங்க வீரர் என்ற இடத்தை பிடித்தார். இதையடுத்து டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியின் நான்காவது சுற்றில் தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்த பிரக்யானந்தா இந்தியாவின் நம்பர் 1 என்ற இடத்தை பிடித்து சாதனையை படைத்துள்ளார்.

    அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, செஸ் வீரரான பிரக்யானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



    அதானி கூறியதாவது, "பிரக்யானந்தாவின் திறமை மற்றும் முன்னேறிய வேகம் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் நிச்சயமாக அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு உதாரணம். தேசத்தை பெருமைப்படுத்துவதிலும், உயர்ந்த இடங்களில் பாராட்டுகளை வெல்வதையும் விட உன்னதமானது எதுவுமில்லை. மேலும் விளையாட்டு வீரர்களின் பயணத்தில் துணையாய் நிற்பதில் அதானி குழுமம் அர்ப்பணிப்புடன் உள்ளது" என்றார்.

    இந்த பதிவுக்கு பிரக்யானந்தா, உலக அரங்கில் எனது நாடு சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். நான் விளையாடும் போதெல்லாம், நாட்டுக்காக அதிக பதக்கங்களை வெல்வதே எனது ஒரே குறிக்கோள். எனது திறமைகளை நம்பியதற்காக அதானி குழுமத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

    • பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார்.
    • 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந் தேதி நிறைவு பெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடர் குறித்து தற்போது வரை பல நாட்டு வீரர்களும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

    இந்நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை ஏற்கனவே இருமுறை தோற்கடித்து செஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்யானந்தா தற்போது பிளஸ்-2 கணினி அறிவியல் படித்து வருகிறார். அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இன்று எனது 12-ம் வகுப்பு தேர்வில் ஆங்கில தேர்வுக்கான கேள்வி தாளை கொடுத்தனர். அதில் வந்த கேள்வியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கேள்வி என்னவென்றால், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எவ்வாறு நடைபெற்றது என்பதை விவரித்து வெளிநாட்டில் படிக்கும் உங்கள் நண்பருக்கு கடிதம் எழுதுங்கள் என கேள்வித்தாளில் இடம் பெற்றிருந்தது என குறிப்பிட்டிருந்தார்.

    பிரக்யானந்தாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள், 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்விக்கு நீங்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றீர்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். முடிவுகள் வெளிவந்தவுடன் பகிரவும் என பதிவிட்டிருந்

    ×