search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cereals"

    • சாக்லேட் பார் மற்றும் ஓட்ஸ் வகை உணவு பொருட்களை குவேகர் விற்பனை செய்கிறது
    • அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஆய்வில் புகார் உறுதியாகவில்லை

    அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனம், பெப்சிகோ (PepsiCo).

    பல உலக நாடுகளில், பல வகையான குளிர்பானங்கள் மற்றும் உடனடியாக உண்ண கூடிய உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம், பெப்சிகோ.

    பெப்சிகோவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம், குவேகர் ஓட்ஸ் கம்பெனி (Quaker Oats Company).

    தானியங்களில் சக்தி நிறைந்த ஒன்றாக கருதப்படும் ஓட்ஸ் தானியத்தை விற்பதில் குவேகர் முன்னணி வகிக்கிறது.

    குவேகர், சக்தியூட்டும் சாக்லேட் பார் வகை உணவு மற்றும் ஓட்ஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறது.

    சுமார் 24 பேருக்கு இவற்றை உண்டதால் உடல்நல குறைவுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிற்கு (FDA) புகார்கள் வந்தன. சால்மொனெல்லா (Salmonella) எனும் பாக்டீரியா தொற்று குவேகர் தயாரிப்புகளில் இருப்பதாக புகார் எழுந்தது.

    இவ்வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றினால் காய்ச்சல், குமட்டல், வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்த கூடிய அபாயம் உள்ளது.

    ஆனால், FDA அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இதுவரை குவேகர் தயாரிப்புகளுக்கும் உடல்நிலை கோளாறுகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக உறுதியாகவில்லை.

    இருந்தும், தாங்கள் விற்பனை செய்த புகாருக்கு உள்ளான பொருட்களை அமெரிக்கா மற்றும் கனடா சந்தையிலிருந்து குவேகர் ஓட்ஸ் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.


    அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்நிறுவனம் விற்பனை செய்த குவேகர் கிரானோலா பார், கேப்'ன் கிரன்ச் பார், கமேசா மரியாஸ் சீரியல், கேடோரேட் பீநட் பட்டர் சாக்லேட் புரோட்டீன் பார், மன்சீஸ் மன்ச் மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு தயாரிப்புகள் இவற்றில் அடங்கும்.

    மேலும், இவற்றை முன்னர் வாங்கி வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் அவற்றை தூக்கி எறிந்து விட வேண்டும் எனவும் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • சியா விதை செரிமானத்தை மெதுவாக்குகிறது.
    • கடல் உணவுகளில் அதிகளவு புரதச்சத்து உள்ளது.

     உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சியா விதை சேர்க்கப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் இந்த சியா விதை செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் நாம் அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டே இருப்பது தவிர்க்கப்படுகிறது.

     பொதுவாகவே கடல் உணவுகளில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. மேலும் அவை பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடல் உணவுகளை தேர்வு செய்யலாம். ஏனென்றால் அதில் நம் உணவின் மூலம் மட்டுமே பெறக்கூடிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

    இவை இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன் சாலமீன், மத்தி மற்றும் டுனா போன்ற மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     சிலுவை காய்கறிகளான ப்ரோக்கோலி, காளிஃபிளவர், பிரஸ்ஸல்ஸ் முளைகள் மற்றும் முட்டைகோள், அருகுலா போன்ற கருமையான இலை காய்கறிகள் போன்றவை அடங்கும். இந்த காய்கறிகள் அனைத்தையும் வாரம் ஒருமுறை மட்டும் உங்கள் உணவுப்பட்டியலில் சேர்த்துவர உங்களது உடல் எடை எளிதில் குறைவதை நீங்களே பார்க்கலாம்.

     உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் யாராக இருந்தாலும் சரி உங்களது உணவு முறையில் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த முழு தானியத்தில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் நிறைந்துள்ளன.

    இதுதவிர முழு தானியங்களான முழுகோதுமை பாஸ்தா, பிரவுன் ரைஸ் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவிசெய்கிறது.

     டார்க் சாக்லேட் உங்களது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் டார்க் சாக்லேட் உடலெடை குறைக்க உதவி செய்கிறது. தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

    எப்படி என்றால் டார்க் சாக்லேட் உங்கள் நீண்டநேர பசியை குறைக்கிறது. இதனால் நீங்கள் அடிக்கடி ஏதாவது சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலம் உங்களது உடல் எடையை குறைக்கலாம்.

    • வடலூர் அருகே வாலாஜா ஏரியில் விஷம் கலந்த தானியங்களை வைத்து பறவைகளை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பழனி என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் மயங்கி விழுந்து இறந்தன.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த மேலக்கொளக்குடி பகுதியில் உள்ள வயல் வெளிகளில், குறுவை நெல் அறுவடைக்கு பின் வாத்துக்களை மேய்த்து வந்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் மயங்கி விழுந்து இறந்தன. இதேபோல சம்பங் கோழிகளும், அபூர்வ பறவைகளும் அதே இடத்தில் இறந்து கிடந்தன. இது குறிந்து பன பறவை பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலாஜா ஏரி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    விசாரணை நடத்தியபோது, அவர்கள் கையில் வைத்திருந்த பையில், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களில் குருணை மருந்து கலந்து வைத்திருந்தனர். உடனடியாக 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் கருங்குழியை சேர்ந்த பிரபாகரன் (வயது 36), அருள்தாஸ் (56), மேலக்கொளக்குடி பொங்கல்மாறன் (57) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் வாலாஜா ஏரிகளுக்கு வரும் குருவி, கொக்கு, நாரை, நீர்க்கோழி போன்றவைகளை பிடிப்பதற்காக தானியங்களில் மருந்து கலந்து வைத்ததும், அதனை உண்ட 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

    • சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளனர்.
    • சிறு தானிய உணவுகளை தேடி சென்று உண்ணும் நிலைமை தற்போது உள்ளது.

    சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளதால் சிறு தானிய உணவகங்களை தேடி சென்று உண்ணும் நிலைமை தற்போது உள்ளது. இந்த சூழலை இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி சிறுதானிய உணவு பொருட்களை தயாரித்து சிறுதானிய உணவு கூடங்களை அமைத்து சுய தொழில் செய்து வருகிறார்கள். கேழ்வரகு கேக் செய்வது போல கேழ்வரகு பிஸ்கட் செய்வதும் மிக மிக எளிமையான ஒன்றாகும்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு- ஒரு கிலோ,

    சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை- அரை கிலோ,

    டால்டா அல்லது நெய் அல்லது வெண்ணெய்- அரை கிலோ

    கான்பிளவர் மாவு- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை, டால்டா அல்லது நெய் அல்லது வெண்ணெய் ஆகியவற்றுடன் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு மற்றும் கால் ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். அதனுடன் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும்.

    அந்த மாவினை தேவையான வடிவத்தில் அதாவது பிஸ்வடிவத்திற்கு வெட்டி அதன் நடுவே ஃபோர்க் கரண்டியால் கோடுகளாக இட்டு ஒரு பிளேட்டில் வெண்ணெய் தடவி அதில் அந்த பிஸ்கட்களை அடுக்கி மைக்ரோவேவ் ஓவனில் 150 டிகிரி செல்சியசில் சுமார் 30 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்து குளிர வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

    இந்த கேழ்வரகு பிஸ்கட் செய்யும் போது கேழ்வரகு மாவுடன் சுமார் 30 முதல் 70 சதவீதம் வரை வாழை மாவு அல்லது மரவள்ளி மாவு சேர்த்தும் பிஸ்கட் செய்ய முடியும். வாசனைக்கு ஏலக்காய் பொடி செய்தும், தூளாகவும் சேர்த்துக் கொள்ளலாம். மாவு பிசையும் போது உலர்ந்த முந்திரி அல்லது வேர்கடலை பருப்பினை வருத்தும் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது அலங்காரத்திற்காகவும் சுவை மற்றும் சத்துக்களை கூட்டுவதற்காகவும், பிஸ்கட் மேலே தூவுவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    • மாற்றுப்பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பாக மானியத்துடன் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தவும், நடப்பு தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும், பல்வகை பயிர் சாகுபடியை ஊக்குவித்திடவும், பரிந்துரைக்கப்பட்ட உயர் விளைச்சல் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு நெல் உற்பத்தி திறனை அதிகப்படுத்திடவும், டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.16 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நெல் சாகுபடியை ஊக்குவித்திட 50 சதவீதம் மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் மானியத்தில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு பயனாளிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. மற்றும் ½ மூட்டை பொட்டாஷ் ஆகிய உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் குறுவை பருவத்தில் மாற்றுப்பயிர்களான சிறுதானியங்கள், பயறுவகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பாக பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதம் மானியம், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. உழவன் செயலி மூலம் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதற்காக அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் குறுவை தொகுப்பு திட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×