search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுதானிய உணவுகள்"

    • உடல் எடையை குறைக்க உதவும் குதிரைவாலி ராகி களி.
    • உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்தை கொண்டுள்ளது.

    அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி- ஒரு கப்

    கேழ்வரகு மாவு- ஒன்றரை கப்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குதிரைவாலி அரிசியை 3 முறை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை அரைமணிநேரம் மூடி போட்டு ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பங்கிற்கு 3 மக்டங்கு தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ள வேண்டும். அரைப் பதத்திற்கு அரிசி வெந்தவுடன் கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டி இல்லாமல் மிதமான தீயில் வைத்து  கிளற வேண்டும். பருப்பு மத்து கொண்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    அவ்வாறு கிளறும்போது ஒட்டாமல் நன்றாக வெந்துவரும் அப்போது தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, களியை தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும். குதிரைவாலி ராகி களி தயார்.

    இந்த களியை கீரைக்குழம்பு, மீன்குழம்பு, கறிக்குழம்பு, கருவாட்டுக்குழம்பு ஆகியவை வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். ஆனால் உடல் எடை குறைக்கும் முயற்சியை மேற்கொள்பவர்கள் இதனை மோரில் சின்னவெங்காயம் சேர்த்து இந்த களியையும் கரைத்து காலை வேளைகளில் குடிக்கலாம். கீரை வகைகளை சைட் டிஷ்சாக வைத்து மதிய சாப்பாடாகவும் சாப்பிடலாம்.

     பலன்கள்

    கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.

    • நாட்டு சர்க்கரை சேர்த்து லட்டு வடிவில் சுவைக்கலாம்.
    • சிறுதானிய பவுடர் மிக்ஸ்களை பார்க்க முடிகிறது.

    சிறுதானியங்களை அவித்தும், வேகவைத்தும் சாப்பிடலாம். அரைத்து மாவு வடிவில் மாற்றி, திரவ வடிவிலும் குடிக்கலாம். அல்லது மாவில் நாட்டு சர்க்கரை சேர்த்து லட்டு வடிவில் சுவைக்கலாம். சிலர், பல சிறுதானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்து, வெறும் மாவு வடிவிலும் சாப்பிடுகிறார்கள். உங்களுடைய விருப்பம்தான்... விருப்பமான உணவு வகைகளாக சாப்பிடலாம்.

    இன்று பலரது வீடுகளில், சிறுதானிய பவுடர் மிக்ஸ்களை பார்க்க முடிகிறது. தங்களது குழந்தைகளுக்கு பாலில் கலந்து குடிக்க கொடுக்கிறார்கள். அதேபோல, பலரது வீடுகளில் சிறுதானிய தின்பண்டங்களை பார்க்க முடிகிறது. லட்டு, பர்பி வகை இனிப்புகள்... என பல பதார்த்தங்களை, தயாரிக்கிறார்கள். இல்லையேல், என்னை போல, சிறுதானிய பதார்த்தம் தயாரித்து கொடுப்பவர்களிடம் வாங்கி உண்ண கொடுக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான்.

    இன்று நிறைய வீடுகளில் அரிசியில் வெண் பொங்கல் சமைப்பதற்கு பதிலாக தினை பொங்கல், குதிரைவாலி பொங்கல் போன்றவையே தயாராகின்றன. மேலும் அரிசி சோறுக்கு மாற்றாக கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பாவில் தயாராகும் உணவுகளையும் சாப்பிட பழகிக்கொண்டிருக்கிறார்கள். இவை மட்டுமின்றி, குதிரைவாலி, கம்பு, பாரம்பரிய அரிசி ஆகியவற்றில் கஞ்சி தயாரித்து சாப்பிடுகிறார்கள்.

    இட்லி, அடை, நூடுல்ஸ் போன்ற உணவுகளும் சிறுதானியங்களில் தயாரிக்கப்படுகிறது.

    சிறுதானியங்களின் சிறப்பு

    கம்பு, கேழ்வரகு, சாமை, தினை... இப்படி வரிசைக்கட்டி நிற்கும் எல்லா சிறுதானியங்களிலும் பிரத்தியேக மருத்துவகுணம் நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து உடலில் தங்கியிருக்கும் கெட்டக்கொழுப்புகளை அகற்றும் பணிகளை இவை செய்கின்றன. உடல் ஆரோக்கியம், உடல் எடை பராமரிப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

    ஒருசில சிறுதானியங்கள், உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன. சிறுதானியங்களின் அவசியத்தை உலகறிய செய்யவே, 2023-ம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளனர்.

    சிறுதானிய உணவுகள், சுவையில் சிறப்பானதாக இருக்கும். தினை, கருப்பு கவுனி போன்றவை எல்லாம், சுவைகளில் சிறந்தவை. அதன் சுவையை, வேறு உணவுகளில் உணர முடியாது. அதேசமயம், குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா, வரகு போன்ற சிறுதானியங்கள் எல்லாம், மருத்துவ குணம் கொண்டவை. இவற்றிலும், சுவையும் உண்டு. ஆரோக்கியமும் உண்டு.

    இந்த வருட தீபாவளி கொண்டாட்டங்களுக்கே, பல இடங்களில் சிறுதானிய உணவுகளை பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் ஆரோக்கியமானதுதான். அடுத்த வருட பண்டிகை கொண்டாட்டங்களில், நிச்சயம் சிறுதானிய இனிப்புகளை அதிகமாக சுவைக்க முடியும். குறிப்பாக, அல்வா, பால்கோவா, ஜாமூன் ஆகிய வடிவங்களில் சுவைத்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    • காய்கறி விற்பனை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று 2-ம் ஆண்டு ெதாடக்க நாளையொட்டி சிறுதானிய உணவு மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட வேளாண் வணிக இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் மாலை நேர காய்கறி விற்பனை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று 2-ம் ஆண்டு ெதாடக்க நாளையொட்டி சிறுதானிய உணவு மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட வேளாண் வணிக இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கஞ்சமலை பயறு சிறுதானிய உழவர் உற்பத்தியாளர்கள் குழுவினர் சார்பில் சிறுதானிய உணவுகளான தினை சர்க்கரை பொங்கல், வரகு காய்கறி சாதம், குதிரைவாலி சாம்பார் சாதம், சாமை வெண் பொங்கல், தயிர் சாதம், சிறுதானிய இனிப்பு, கார வகை உணவு ஆகியவை 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி வேளாண் அலுவலர் தங்கராசு, விவசாயி மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி, பள்ளிகளில் சிறுதானியம், பாரம்பரிய உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    இந்தியாவில் இந்த ஆண்டு சிறுதானிய உணவுப்பொருள் ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் சிறுதானிய உணவு பொரு ட்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கல்லூரி, பள்ளிகளில் சிறுதானியம், பாரம்பரிய உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    சிறுதானியங்களால் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் மாணவ-மாணவிகள் உடல் வலிமை யுடனும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாகவும் மாறுவார்கள் என எடுத்து ரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்க ப்பள்ளியில் இன்று சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் கம்பு, சோளம், கேழ்வரகு, ராகி உள்ளிட்ட தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இந்த உணவுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாண வர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். சிறுதானியங்கள் என்றாலே கூழ், கஞ்சி என்ற எண்ணத்தை மாற்றி இந்த தானியங்களிலும் பல்வேறு நவீன உணவுகளை தயாரி க்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் ஏற்படும் பயன்கள் குறித்து தங்கள் பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி இதனை பயன்படுத்துமாறு தெரி வித்தனர். இதுமட்டுமின்றி செம்பருத்தியால் செய்த உணவு உள்பட பாரம்பரிய உணவுகள் குறித்தும் காட்சிப்படுத்த ப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியை ஜெயந்தி புளோரன்ஸ் மற்றும் ஆசிரி யர்கள் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    • சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளனர்.
    • சிறு தானிய உணவுகளை தேடி சென்று உண்ணும் நிலைமை தற்போது உள்ளது.

    சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துள்ளதால் சிறு தானிய உணவகங்களை தேடி சென்று உண்ணும் நிலைமை தற்போது உள்ளது. இந்த சூழலை இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி சிறுதானிய உணவு பொருட்களை தயாரித்து சிறுதானிய உணவு கூடங்களை அமைத்து சுய தொழில் செய்து வருகிறார்கள். கேழ்வரகு கேக் செய்வது போல கேழ்வரகு பிஸ்கட் செய்வதும் மிக மிக எளிமையான ஒன்றாகும்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு- ஒரு கிலோ,

    சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை- அரை கிலோ,

    டால்டா அல்லது நெய் அல்லது வெண்ணெய்- அரை கிலோ

    கான்பிளவர் மாவு- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை, டால்டா அல்லது நெய் அல்லது வெண்ணெய் ஆகியவற்றுடன் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு மற்றும் கால் ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். அதனுடன் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும்.

    அந்த மாவினை தேவையான வடிவத்தில் அதாவது பிஸ்வடிவத்திற்கு வெட்டி அதன் நடுவே ஃபோர்க் கரண்டியால் கோடுகளாக இட்டு ஒரு பிளேட்டில் வெண்ணெய் தடவி அதில் அந்த பிஸ்கட்களை அடுக்கி மைக்ரோவேவ் ஓவனில் 150 டிகிரி செல்சியசில் சுமார் 30 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்து குளிர வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

    இந்த கேழ்வரகு பிஸ்கட் செய்யும் போது கேழ்வரகு மாவுடன் சுமார் 30 முதல் 70 சதவீதம் வரை வாழை மாவு அல்லது மரவள்ளி மாவு சேர்த்தும் பிஸ்கட் செய்ய முடியும். வாசனைக்கு ஏலக்காய் பொடி செய்தும், தூளாகவும் சேர்த்துக் கொள்ளலாம். மாவு பிசையும் போது உலர்ந்த முந்திரி அல்லது வேர்கடலை பருப்பினை வருத்தும் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது அலங்காரத்திற்காகவும் சுவை மற்றும் சத்துக்களை கூட்டுவதற்காகவும், பிஸ்கட் மேலே தூவுவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • கேழ்வரகு கேக் செய்வது மிக எளிதான ஒரு முறையாகும்.
    • பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம்.

    சிறுதானியங்களைக் கொண்டு கிரீம் கேக்குகள் மட்டுமில்லாமல், பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள், கலோரிகள் குறைவாக உள்ள சிறுதானிய கேக்குகளை சாப்பிடலாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை சிறுதானிய கேக்குகள். கேழ்வரகு கேக் செய்வது மிக எளிதான ஒரு முறையாகும்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு- 100 கிராம்

    கிரீம்- 100 கிராம்

    பேக்கிங் பவுடர்- 1/4 டீஸ்பூன்

    கொக்கோ பவுடர்- ஒரு ஸ்பூன்

    சர்க்கரை- 100 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    முட்டை- 2

    பால்- 20 மில்லி லிட்டர்

    வனிலா எசன்ஸ்- 2 சொட்டு

    செய்முறை:

    வெள்ளை கருவுடன் சர்க்கரை தூள் சேர்த்து நன்கு அடித்து, கலக்கி அதனுடன் பால், முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் ராகி மாவு, உப்பு, கோகோ பவுடர் சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை நமக்கு தேவையான வடிவங்களில் அல்லது கேக் மோல்டின் உள்ளே பட்டர் அல்லது நெய் தடவ வேண்டும்.

    அதில் கேக் கலவையை ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்து 10 நிமிடங்கள் வரை குளிர வைத்து பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டியோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.

    ×