உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு சிறுதானிய உணவுகள்

காய்கறி விற்பனை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று 2-ம் ஆண்டு ெதாடக்க நாளையொட்டி சிறுதானிய உணவு மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட வேளாண் வணிக இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு சிறுதானிய உணவுகள்
Published on

சேலம்:

சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் மாலை நேர காய்கறி விற்பனை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்று 2-ம் ஆண்டு ெதாடக்க நாளையொட்டி சிறுதானிய உணவு மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட வேளாண் வணிக இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கஞ்சமலை பயறு சிறுதானிய உழவர் உற்பத்தியாளர்கள் குழுவினர் சார்பில் சிறுதானிய உணவுகளான தினை சர்க்கரை பொங்கல், வரகு காய்கறி சாதம், குதிரைவாலி சாம்பார் சாதம், சாமை வெண் பொங்கல், தயிர் சாதம், சிறுதானிய இனிப்பு, கார வகை உணவு ஆகியவை 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி வேளாண் அலுவலர் தங்கராசு, விவசாயி மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com