என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தானியங்கள்"
- சாக்லேட் பார் மற்றும் ஓட்ஸ் வகை உணவு பொருட்களை குவேகர் விற்பனை செய்கிறது
- அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஆய்வில் புகார் உறுதியாகவில்லை
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனம், பெப்சிகோ (PepsiCo).
பல உலக நாடுகளில், பல வகையான குளிர்பானங்கள் மற்றும் உடனடியாக உண்ண கூடிய உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம், பெப்சிகோ.
பெப்சிகோவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம், குவேகர் ஓட்ஸ் கம்பெனி (Quaker Oats Company).
தானியங்களில் சக்தி நிறைந்த ஒன்றாக கருதப்படும் ஓட்ஸ் தானியத்தை விற்பதில் குவேகர் முன்னணி வகிக்கிறது.
குவேகர், சக்தியூட்டும் சாக்லேட் பார் வகை உணவு மற்றும் ஓட்ஸ் வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
சுமார் 24 பேருக்கு இவற்றை உண்டதால் உடல்நல குறைவுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிற்கு (FDA) புகார்கள் வந்தன. சால்மொனெல்லா (Salmonella) எனும் பாக்டீரியா தொற்று குவேகர் தயாரிப்புகளில் இருப்பதாக புகார் எழுந்தது.
இவ்வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றினால் காய்ச்சல், குமட்டல், வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்த கூடிய அபாயம் உள்ளது.
ஆனால், FDA அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இதுவரை குவேகர் தயாரிப்புகளுக்கும் உடல்நிலை கோளாறுகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக உறுதியாகவில்லை.
இருந்தும், தாங்கள் விற்பனை செய்த புகாருக்கு உள்ளான பொருட்களை அமெரிக்கா மற்றும் கனடா சந்தையிலிருந்து குவேகர் ஓட்ஸ் நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.
அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்நிறுவனம் விற்பனை செய்த குவேகர் கிரானோலா பார், கேப்'ன் கிரன்ச் பார், கமேசா மரியாஸ் சீரியல், கேடோரேட் பீநட் பட்டர் சாக்லேட் புரோட்டீன் பார், மன்சீஸ் மன்ச் மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு தயாரிப்புகள் இவற்றில் அடங்கும்.
மேலும், இவற்றை முன்னர் வாங்கி வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் அவற்றை தூக்கி எறிந்து விட வேண்டும் எனவும் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- சியா விதை செரிமானத்தை மெதுவாக்குகிறது.
- கடல் உணவுகளில் அதிகளவு புரதச்சத்து உள்ளது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சியா விதை சேர்க்கப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் இந்த சியா விதை செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் நாம் அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டே இருப்பது தவிர்க்கப்படுகிறது.
பொதுவாகவே கடல் உணவுகளில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. மேலும் அவை பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடல் உணவுகளை தேர்வு செய்யலாம். ஏனென்றால் அதில் நம் உணவின் மூலம் மட்டுமே பெறக்கூடிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இவை இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன் சாலமீன், மத்தி மற்றும் டுனா போன்ற மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலுவை காய்கறிகளான ப்ரோக்கோலி, காளிஃபிளவர், பிரஸ்ஸல்ஸ் முளைகள் மற்றும் முட்டைகோள், அருகுலா போன்ற கருமையான இலை காய்கறிகள் போன்றவை அடங்கும். இந்த காய்கறிகள் அனைத்தையும் வாரம் ஒருமுறை மட்டும் உங்கள் உணவுப்பட்டியலில் சேர்த்துவர உங்களது உடல் எடை எளிதில் குறைவதை நீங்களே பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் யாராக இருந்தாலும் சரி உங்களது உணவு முறையில் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த முழு தானியத்தில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் நிறைந்துள்ளன.
இதுதவிர முழு தானியங்களான முழுகோதுமை பாஸ்தா, பிரவுன் ரைஸ் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவிசெய்கிறது.
டார்க் சாக்லேட் உங்களது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் டார்க் சாக்லேட் உடலெடை குறைக்க உதவி செய்கிறது. தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
எப்படி என்றால் டார்க் சாக்லேட் உங்கள் நீண்டநேர பசியை குறைக்கிறது. இதனால் நீங்கள் அடிக்கடி ஏதாவது சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலம் உங்களது உடல் எடையை குறைக்கலாம்.
- வடலூர் அருகே வாலாஜா ஏரியில் விஷம் கலந்த தானியங்களை வைத்து பறவைகளை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பழனி என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் மயங்கி விழுந்து இறந்தன.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த மேலக்கொளக்குடி பகுதியில் உள்ள வயல் வெளிகளில், குறுவை நெல் அறுவடைக்கு பின் வாத்துக்களை மேய்த்து வந்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் மயங்கி விழுந்து இறந்தன. இதேபோல சம்பங் கோழிகளும், அபூர்வ பறவைகளும் அதே இடத்தில் இறந்து கிடந்தன. இது குறிந்து பன பறவை பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலாஜா ஏரி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.
விசாரணை நடத்தியபோது, அவர்கள் கையில் வைத்திருந்த பையில், கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களில் குருணை மருந்து கலந்து வைத்திருந்தனர். உடனடியாக 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் கருங்குழியை சேர்ந்த பிரபாகரன் (வயது 36), அருள்தாஸ் (56), மேலக்கொளக்குடி பொங்கல்மாறன் (57) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் வாலாஜா ஏரிகளுக்கு வரும் குருவி, கொக்கு, நாரை, நீர்க்கோழி போன்றவைகளை பிடிப்பதற்காக தானியங்களில் மருந்து கலந்து வைத்ததும், அதனை உண்ட 200-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்