search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cemetery"

    • மயானத்திற்கு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
    • விளைநிலங்கள் வழியாக இறுதி ஊர்வலம் நடக்கிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊருக்கு வெளியே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மயான கட்டிடம் அமைக்கப்பட்டது. ஆனால் பாதை வசதி ஏற்படுத்தப்பட வில்லை.

    இதனால் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயா னத்திற்கு தனியார் நிலங்கள் மற்றும் சிறு குறு, நீரோடை வழியாக இறந்தவர்களின் சடலங்களை கொண்டு சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது விவசாய நிலங்களில் சோளம் பயிரிட்டப்பட்டு உள்ளது.

    மேலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது உள்ளதால் சிறு குறு ஓடை களில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. சம்பவத்தன்று அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல்நல குறைவால் உயிரி ழந்த நிலையில் அவரது உடலை விவசாய நிலங்க ளில் சாகுபடி செய்யப் பட்டுள்ள பயிர்களை கடந்தும் சிறு குறு நீரோடை களை கடந்தும் ஆபத்தான முறையில் மூதாட்டியின் உடலை கொண்டு சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயா னத்திற்கு செல்வதற்கு பாதை இல்லாததால் இறந்த வர்களின் உடலை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் நிலவுகிறது.

    அதுவும் மழை காலங்க ளில் ஆபத்தான முறையில் செல்ல வேண்டி உள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மயானம் என்பதனால் மயான கட்டிடத்தின் மேற்கூரையும் சேதமடைந்து உதிர்ந்து வருவதனால் கட்டிடத்தை சீரமைத்து, மயானத்திற்கு பாதுகாப்பான முறையில் சென்று வர சாலை வசதியும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும் உரிய அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அந்த இடத்தில் 5 ஏக்கர் 12 செண்ட் நிலத்தை விசுவாசம் கிரையம் பெற்றதாக கூறி வந்துள்ளார்.
    • விசுவாசம் உள்ளிட்ட 4 பேர் 20-க்கும் மேற்பட்ட அடக்க தலங்களை அழித்ததாக தெரிகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், வேதநாயகபுரத்தை சேர்ந்த கிராம மக்களுக்கான இடுகாடு பெருமாள்குளம் கழுத்தறுத்தான் பொத்தை அருகே உள்ளது.

    இதில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெற்கு பெருமாள்குளத்தை சேர்ந்த விசுவாசம் (வயது 70) அந்த இடத்தில் 5 ஏக்கர் 12 செண்ட் நிலத்தை கிரையம் பெற்றதாக கூறி வந்துள்ளார். இதனால் அங்கு இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யும் போது அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே விசுவாசம், அவரது மகன் யோவான் (40), அதே ஊரை சேர்ந்த ராஜாமணி மகன்கள் சதிஷ் (26), ஆல்பர்ட் (29) ஆகியோர் சேர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட அடக்க தலங்களை அழித்ததாக தெரிகிறது. இதுபற்றி வேதநாயகபுரம் ஊர் நாட்டாமை நாராயணன் (31) களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இதுதொடர்பாக விசுவாசம், அவரது மகன் யோவான், சதிஷ், ஆல்பர்ட் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி யோவானை கைது செய்தனர்.

    • 4 கிராம மக்கள் மகிழ்ச்சி
    • புதுச்சேரி – தமிழக கிராமத்தினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வந்தது.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதிக் குட்பட்ட கொரவள்ளி மேடு, பள்ளக் கொரவள்ளிமேடு, சுள்ளியாங் குப்பம், மதிகிருஷ்ணாபுரம் கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

     இந்த கிராமங்களுக்கு மயான வசதி இல்லாததால், அங்கு இறப்பவர்களின் உடல்களை சுமார் 5 கி.மீ தூரம் உள்ள தென்பெண்ணையாற்று கரையில் அடக்கம் செய்து வருகின்றனர்.

    தூரம் ஒரு பக்கம் இருந்தாலும், பல நேரங்களில் இறுதி ஊர்வலத்தின் போது, புதுச்சேரி – தமிழக கிராமத்தினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால், கொரவள்ளிமேடு, பள்ளக்கொரவள்ளிமேடு, சுள்ளியாங்குப்பம், மதிக்கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் மயான வசதி வேண்டி பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து போராடி வந்தனர். கடந்த காங்., ஆட்சிகளில், பாகூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர்.

    ஆனாலும், மயான வசதி தொடர்பான பணிகள் இடியாப்ப சிக்கலில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது செந்தில்குமார் எம்.எல்.ஏ. முயற்சியால், முள்ளோடை துணை மின் நிலையம் அருகே உள்ள இடத்தில் மேற்கண்ட கிராமங்க ளுக்கு மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக மகத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.34.95 லட்சத்திற்கு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் கலந்து கொண்டு, மயானம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்,

    புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவிப் பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 100 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியில் 4 கிராமங்களை சேர்ந்தபொது மக்கள் திரளாக கலந்து கொண்டு எம்.எல்.ஏவிற்கு நன்றி தெரிவித்தனர்.

    • சாலை வசதி இல்லாததால் நெல் பயிரிடப்பட்ட வயல் வழியாக உடலை எடுத்து சென்றனர்.
    • மயானம் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை.

    திருவோணம்:

    ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு உடல் பாதிக்கப்பட்ட உயிர் இறந்தார்.

    இந்நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இவரது சடலத்தை ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் நெல் பயிரிடப்பட்ட வயல் வழியாக எடுத்து சென்றனர்.

    பல ஆண்டுகளாக இப்பகுதியில் இறப்பு நேரிட்டால் சுடுகாடு மயானம் இருக்கு இடத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை.

    எனவே சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் சமூக ஆர்வலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சமீப காலமாக பலர் நூதன முறையில் திருமண விழாக்களை வடிவமைக்க விரும்புகிறார்கள்.
    • சிலர் கடலில் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    மும்பை :

    கோவில்களில் நடந்த திருமணங்கள் மண்டபங்களுக்கு மாறிய நிலையில், சமீப காலமாக பலர் நூதன முறையில் திருமண விழாக்களை வடிவமைக்க விரும்புகிறார்கள். சிலர் கடலில் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுடுகாட்டில் வினோத திருமணம் அரங்கேறி உள்ளது.

    அகமதுநகர் மாவட்டம் ரகாதா பகுதியை சேர்ந்தவர் கங்காதர் கெய்க்வாட். இவர் 20 ஆண்டுகளாக ரகாதாவில் உள்ள சுடுகாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் மயூரி திருமணம் தான் அவர் வேலை செய்து வரும் சுடுகாட்டிலேயே நடந்து உள்ளது. திருமணத்தில் குடும்பத்தினர், ஊர் மக்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர்.

    மகளின் திருமணத்தை சுடுகாட்டில் நடத்தியது குறித்து கங்காதர் கெய்க்வாட் கூறுகையில், "நான் 20 ஆண்டுகளாக இங்கு தான் உள்ளேன். எனது மகள் இங்கு தான் வளர்ந்தாள். இங்கு இருந்து தான் படித்தாள். எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்தது இந்த சுடுகாடு தான். எனவே தான் இங்கேயே திருமணத்தை நடத்தினோம்" என்றார்.

    இதற்கிடையே அகமதுநகரில் சுடுகாட்டில் நடந்த திருமணம் மூடப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    மனிதர்கள் தங்கள் பயணத்தை முடித்து கொள்ளும் சுடுகாட்டில் இருந்து இந்த தம்பதி இல்லற வாழ்க்கையை தொடங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 8 இடங்களில் மயான கொள்ளை நடைபெற்றது.

    குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் இரண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்கள் உள்ளது, அதனால் இரண்டு கோயில்களிலும் தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 2 மயான கொள்ளை தனித்தனியாக நடைபெற்றது.

    அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பூங்கரகம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேண்டுதல் நிறைவேற்ற தரையில் ஏராளமான பெண்கள் படுத்து இருந்தனர். அவர்களை மிதித்தபடி பூங்கரகம் கொண்டு செல்லப்பட்டது.

    இந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சிகளை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். மயான கொள்ளையில் முட்டை எடுக்க குவிந்த இளைஞர்கள் மயான கொள்ளை முன்னிட்டு இரண்டு மயான கொள்ளை களிலும் முட்டைகளை எடுக்க ஏராளமான இளைஞர்கள் முயன்றனர். அவர்களை தடுக்க சுற்றிலும் காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

    இருப்பினும் சில இளைஞர்கள் முட்டையை எடுக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தடுத்தனர். ஊர்வலமாக வந்த அம்மன் மயானத்திற்கு வந்தவுடன் நூற்றுக்கணக்கானோர் மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமி மீது திரண்டு சென்று முட்டைகளை எடுத்தனர்.

    இந்த மயான கொள்ளைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், அப்பகுதி இளைஞரணியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.இதேபோல் கவுண்டன்யா மகாநதி புவனேஸ்வரி பேட்டை பகுதியில் மயான கொள்ளை குடியாத்தம் அடுத்த வடக்கு பற்றை கிராமத்தில் மயான கொள்ளை நடைபெற்றது. அதேபோல் பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி மோட்டூர் கொத்தூர் கதிரிகுளம் தட்டிமாணப்பள்ளி ஆகிய ஊர்களிலும் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

    குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மயான கொள்ளை பாதுகாப்பு ஏற்பாடுகளை குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் தலைமையில் வருவாய் துறையினர் கண்காணித்து வந்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் இந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு சுண்ணாம்பு பேட்டையில் உள்ள சுடுகாட்டில் இறந்த முன்னோர்களுக்கு அவர்கள் குடும்பத்தினர் படையல் வைத்து வழிபட்டனர். குடியாத்தம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள சுடுகாட்டிலும் இறந்த முன்னோர்களுக்கு குடும்பத்தினர் படையல் வைத்து வழிபட்டனர்.

    • உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கைபம்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • வேறு இடத்தில் தங்களுக்கு மயானம் அமைத்து தர வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே கோவில்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கைசமுத்திரம் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மயானம் வயல்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.

    புல்பூண்டுகள் சூழ்ந்துள்ள இந்த இடத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் கைபம்பு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மயானத்தில் அடக்கம் செய்ய மூன்று சிறு வாய்க்கால்கள், பயிர் செய்யப்பட்டு உள்ள பயிர்களின் ஊடாக இறந்தவர்களின் உடல் வைக்கப்பட்ட பாடையை சுமந்து வரவேண்டிய நிலை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்த ஒரு பெண்ணின் உடலை பாடையில் வைத்து உறவினர்கள் வளர்ந்த நெல் பயிரின் ஊடாக தடுமாறி சுமந்து வந்தனர்.

    மற்றவர்கள் வரப்புகளில் நடந்து வந்தனர்.

    மயானம் உள்ளதாககூறப்படும் இடத்திற்கு வந்ததும் பாடையை இறக்கி வைத்து அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    வயல்களுக்கு நடுவில் உள்ள மயானத்துக்கு பதில் வேறு இடத்தில் தங்களுக்கு மயானம் அமைத்து தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    எனவே இனியாவது மயானத்துக்கு வேறு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.

    • அபிராமத்தில் உள்ள மயானத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எல்லா சமூக மக்களும் வசித்து வந்தாலும் இந்து சமூகத்தினர் இறந்துவிட்டால் அடக்கம் செய்வதற்கு சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது.

    20 ஆண்டு களுக்கு முன்பு இந்த மயானத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். காலப்போக்கில் கம்பிவேலி காணாமல் போய்விட்டது.

    அன்றில் இருந்து இன்று வரை மயானம் திறந்த வெளியில் இருக்கிறது. இதனால் மயானத்தை சமூக விரோதிகள் இரவு-பகல் பாராமல் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் இதை பார்த்து முகம் சுழிக்கும் நிலை உள்ளது.

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வாசு மற்றும் பொதுமக்கள் கூறுகையில், மயானத்துக்கு சுற்றுசுவர் இல்லாததால் சிலர் சாததமாக பயன்படுத்தி க்கொண்டு வளாகத்தை மது அருந்தும் பார் ஆகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி உள்ளது. ஆங்காங்கே மதுபாட்டில் உடைந்து கிடக்கின்றன.

    இறுதி சடங்குக்கு வரும் பொதுமக்கள் இங்கு தண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஒருசில நேரங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்தபின்பும், இறந்த வர்களை எரிக்கும்போதும் கவனக்குறைவால் நாய் போன்ற விலங்குகள் இறந்தவர்களின் உடல்களை சிதைத்து பொதுமக்கள் நடமாட்டமுள்ள இடத்திற்கு கொண்டு வந்து விடுகிறது.இதனால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் பொது மக்களும் பயப்படுகின்றனர்.

    உடலை எரியூட்டும் தகன மேடை திறந்தவெளியாக இருப்பதால் இன்றுவரை நவீன மயமாக்கப்பட்ட மின்மயானம் இல்லை. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து மயானத்திற்கு சுற்றுசுவர் உட்பட அடிப்படை வசதி அமைக்க வேண்டும். இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • முடுவார்பட்டி ஊராட்சியில் மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.
    • மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    2010-11-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதன் பிறகு பராமரிப்பின்றி மயானத்தில் செடிகள் அடர்ந்து வளர்நது காடு போல காட்சியளிக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மயானத்திற்கு உடலை அடக்கம் செய்வதில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மயானத்தில் நடப்பதற்கு கூட வழியில்லாமல் புதர் போல காட்சி அளிப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடுவார்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மயானத்துக்கு செல்ல பல ஆண்டுகளாக சாலை வசதி கிடையாது.
    • பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா இரும்புதலை கீழ ஆதிதிராவிடர்தெரு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் உள்ள மயானத்துக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி கிடையாது.

    இதனால் கிராமத்தில் ஒருவர் இறந்தால் வயல்வெளி வழியே உள்ள வயல்வரப்பு பாதையில் சேறும் சகதியுமாக உள்ள மண் சாலை வழியாக தான் கொண்டு செல்ல வேண்டும்.

    சாலை வசதி கேட்டு பல முறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே அவதியடைந்து வருகின்றனர்.

    பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. எனவே உடனடியாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • கிராம மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர்.
    • பெரியபட்டினம் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    கீழக்கரை

    பெரியபட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 77 ஏக்கரில் அமைந்துள்ள கப்பல்லாற்று நீர்பிடிப்பு பகுதி, 2,200 மீட்டர் நீளம் உள்ள மொரவாய்கால் ஓடை பகுதியை அப்பகுதி தென்னை விவசாய மக்களுக்காகவும், நிலத்தடி நீரை உயர்த்தவும், அப்பகுதியை பராமரிப்பு செய்வதற்கும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பெரியபட்டினம் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள் ஆதலால் பெரியபட்டினம் கடற்கரையில் மீன்பிடி தளம் கட்டுவதற்கு ராமநாதபுரம் உதவி இயக்குநர் (மீன்வளத்துறை தெற்கு) பரிந்துரை செய்ய வேண்டும்.

    தெற்கு புதுகுடியிருப்பு மற்றும் குருத்தமண்குண்டு ஆகிய கிராமங்களில் உள்ள பொது மயானத்திற்கு பாதை வசதி செய்ய இடம் தேர்வு செய்து தர கீழக்கரை வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    தங்கையா நகர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும். காயிதேமில்லத் நகர் கிழக்கு பகுதியில் உயர்மின் அழுத்த கம்பியை அகற்றி புதிய மின் கம்பி இணைப்பு அமைக்க வேண்டும். தெற்கு புதுகுடியிருப்பு கிராமம் செல்லும் வழியிலும், குறுத்த மண்குண்டு பகுதிக்கு தெற்கு புதுகுடியிருப்பு சாலையிலிருந்து தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும்.

    பெரியபட்டினம் ஊராட்சி காயிதேமில்லத் நகர் மற்றும் மிலால் நகர் பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கவுன்சிலர் பைரோஸ்கான் கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    ஊத்துக்கோட்டை அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் வயல் வழியாக உடலை கொண்டு செல்லும் அவலம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் வடதில்லை. இங்கு 140 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் யாராவது இறந்து விட்டால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆரணி ஆற்று கரையில் அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டி உள்ளது. ஆனால் கிராமத்திலிருந்து சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை இல்லை.

    இந்த நிலையில் யாராவது இயற்கை எய்தினால் பிரேதத்தை வயல் வெளி வழியாக சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டி உள்ளது. இப்படி வயல் வெளி வழியாக பிணம் எடுத்து செல்லும் போது விவசாயிகள் ஆட்சேபனை தெரிவிப்பதால் அடிக்கடி தகராறு நடந்து வருகிறது.

    எனவே சுடுகாட்டுக்கு தனி பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றி நகல்களை பூண்டி வட்டாரவளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து வக்கீல்குமார் தலைமையில் கிராம மக்கள் சிலநாட்களுக்கு முன் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி ஆகியோரிடம் சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை அமைத்து தர மனு அளித்தனர்.

    இந்த நிலையில் வடதில்லை கிராம தி.மு.க. கிளை தலைவர் ராஜா நேற்று காலை மரணமடைந்தார். உடலை வயல் வெளியாக கொண்டு சென்ற போது விவசாயிகள் சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    இதே போன்று அருகே உள்ள உப்பரபாளையம் கிராமத்திலும் சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை இல்லை. இந்த கிராமத்திலும் யாராவது இறந்து போனால் வயல் வெளியாகத்தான சுடுகாட்டுக்கு பிணத்தை எடுத்து செல்ல வேண்டி உள்ளது.

    எனவே இந்த கிராமத்திலும் சுடுகாட்டுக்கு செல்ல தனிபாதை அமைத்து தர அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    ×