இறந்தவர் உடலை வயல் வழியே தூக்கி செல்லும் அவலம்

சாலை வசதி இல்லாததால் நெல் பயிரிடப்பட்ட வயல் வழியாக உடலை எடுத்து சென்றனர்.மயானம் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை.
இறந்தவர் உடலை வயல் வழியே தூக்கி சென்றனர்.
இறந்தவர் உடலை வயல் வழியே தூக்கி சென்றனர்.
Published on

திருவோணம்:

ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு உடல் பாதிக்கப்பட்ட உயிர் இறந்தார்.

இந்நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இவரது சடலத்தை ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் நெல் பயிரிடப்பட்ட வயல் வழியாக எடுத்து சென்றனர்.

பல ஆண்டுகளாக இப்பகுதியில் இறப்பு நேரிட்டால் சுடுகாடு மயானம் இருக்கு இடத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை.

எனவே சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் சமூக ஆர்வலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com