search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் பகுதிகளில் 8 இடங்களில் மயானக்கொள்ளை
    X

    குடியாத்தம் தாழையாத்தம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்த பூங்கரகம் முன்பு பெண்கள் தரையில் படுத்திருந்த காட்சி.

    குடியாத்தம் பகுதிகளில் 8 இடங்களில் மயானக்கொள்ளை

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 8 இடங்களில் மயான கொள்ளை நடைபெற்றது.

    குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் இரண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்கள் உள்ளது, அதனால் இரண்டு கோயில்களிலும் தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை கவுண்டன்ய மகாநதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 2 மயான கொள்ளை தனித்தனியாக நடைபெற்றது.

    அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பூங்கரகம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேண்டுதல் நிறைவேற்ற தரையில் ஏராளமான பெண்கள் படுத்து இருந்தனர். அவர்களை மிதித்தபடி பூங்கரகம் கொண்டு செல்லப்பட்டது.

    இந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சிகளை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். மயான கொள்ளையில் முட்டை எடுக்க குவிந்த இளைஞர்கள் மயான கொள்ளை முன்னிட்டு இரண்டு மயான கொள்ளை களிலும் முட்டைகளை எடுக்க ஏராளமான இளைஞர்கள் முயன்றனர். அவர்களை தடுக்க சுற்றிலும் காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

    இருப்பினும் சில இளைஞர்கள் முட்டையை எடுக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தடுத்தனர். ஊர்வலமாக வந்த அம்மன் மயானத்திற்கு வந்தவுடன் நூற்றுக்கணக்கானோர் மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமி மீது திரண்டு சென்று முட்டைகளை எடுத்தனர்.

    இந்த மயான கொள்ளைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், அப்பகுதி இளைஞரணியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.இதேபோல் கவுண்டன்யா மகாநதி புவனேஸ்வரி பேட்டை பகுதியில் மயான கொள்ளை குடியாத்தம் அடுத்த வடக்கு பற்றை கிராமத்தில் மயான கொள்ளை நடைபெற்றது. அதேபோல் பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி மோட்டூர் கொத்தூர் கதிரிகுளம் தட்டிமாணப்பள்ளி ஆகிய ஊர்களிலும் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

    குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மயான கொள்ளை பாதுகாப்பு ஏற்பாடுகளை குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் தலைமையில் வருவாய் துறையினர் கண்காணித்து வந்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் இந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு சுண்ணாம்பு பேட்டையில் உள்ள சுடுகாட்டில் இறந்த முன்னோர்களுக்கு அவர்கள் குடும்பத்தினர் படையல் வைத்து வழிபட்டனர். குடியாத்தம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் உள்ள சுடுகாட்டிலும் இறந்த முன்னோர்களுக்கு குடும்பத்தினர் படையல் வைத்து வழிபட்டனர்.

    Next Story
    ×