search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காம்பவுண்டு சுவர்"

    • அபிராமத்தில் உள்ள மயானத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எல்லா சமூக மக்களும் வசித்து வந்தாலும் இந்து சமூகத்தினர் இறந்துவிட்டால் அடக்கம் செய்வதற்கு சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது.

    20 ஆண்டு களுக்கு முன்பு இந்த மயானத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். காலப்போக்கில் கம்பிவேலி காணாமல் போய்விட்டது.

    அன்றில் இருந்து இன்று வரை மயானம் திறந்த வெளியில் இருக்கிறது. இதனால் மயானத்தை சமூக விரோதிகள் இரவு-பகல் பாராமல் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் இதை பார்த்து முகம் சுழிக்கும் நிலை உள்ளது.

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வாசு மற்றும் பொதுமக்கள் கூறுகையில், மயானத்துக்கு சுற்றுசுவர் இல்லாததால் சிலர் சாததமாக பயன்படுத்தி க்கொண்டு வளாகத்தை மது அருந்தும் பார் ஆகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி உள்ளது. ஆங்காங்கே மதுபாட்டில் உடைந்து கிடக்கின்றன.

    இறுதி சடங்குக்கு வரும் பொதுமக்கள் இங்கு தண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஒருசில நேரங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்தபின்பும், இறந்த வர்களை எரிக்கும்போதும் கவனக்குறைவால் நாய் போன்ற விலங்குகள் இறந்தவர்களின் உடல்களை சிதைத்து பொதுமக்கள் நடமாட்டமுள்ள இடத்திற்கு கொண்டு வந்து விடுகிறது.இதனால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் பொது மக்களும் பயப்படுகின்றனர்.

    உடலை எரியூட்டும் தகன மேடை திறந்தவெளியாக இருப்பதால் இன்றுவரை நவீன மயமாக்கப்பட்ட மின்மயானம் இல்லை. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து மயானத்திற்கு சுற்றுசுவர் உட்பட அடிப்படை வசதி அமைக்க வேண்டும். இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×