search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 World Cup Cricket"

    சரியான கலவை கொண்டது இந்திய அணி. இருந்தாலும் மேலும் ஆறு அணிகள் பலத்துடன் உள்ளன என்று ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறும் உலகக்கோப்பை தொடர் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 15 வீரர்களும் சிறப்பானவர்கள். சரியான கலவை கொண்டது இந்திய அணி என்று தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜான்டி ரோட்ஸ் கூறுகையில் ‘‘இந்தியா மிகச்சிறப்பான 15 பேர்  கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது. ஆனால், மேலும் ஆறு அணிகள் அதேபோன்று உள்ளன. சில வலுவான அணிகளும் உலகக்கோப்பையில் உள்ளன. அவர்கள் அன்றைய தினம், கண்டிசன் ஆகியவற்றை கருத்தில் கொண்ட எப்படி 11 பேர் கொண்ட சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்கிறார்களோ? அதை பொறுத்துதான் சிறந்த அணி என்று கூற முடியும்.



    இந்திய அணியில் ஏராளமான அனுபவ வீரர்கள் உள்ளனர். இளம் வீரரான பும்ரா டெத் ஓவரில் அதிக அளவில் அனுபவம் பெற்றவர். இதை வைத்து பார்க்கும்போது இந்தியாவிக்கு வாய்ப்புள்ளது. ஆனால் மேலும் ஆறு அணிகள் இதேபோல் உள்ளன’’ என்றார்.
    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றதைபோல், உலகக்கோப்பையிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற விரும்புகிறேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் இடம்பிடித்துள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஹெலிகாப்டர் ஷாட் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன், 402 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 191 ஆகும்.

    ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதுபோல், உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘இந்த ஐபிஎல் சீசனில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால், தற்போது இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். ஐபிஎல் கோப்பையை வென்று முத்தமிட்டதுபோல், உலகக்கோப்பையையும் வென்று முத்தமிட விரும்புகிறேன்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரிஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். #WorldCup
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து நடக்கிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    இந்த நிலையில் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அணிகளை தேர்வு செய்ய ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விதித்துள்ள கடைசி தேதியான ஏப்ரல் 23-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டிய நிலைமை தேர்வு குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்திய அணியில் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது யார் என்பதுதான் இதுவரை முடிவு செய்யவில்லை. மற்ற அனைத்து இடத்திற்கான வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ரி‌ஷப் பந்த், விஜய் சங்கர், ரகானே ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர்.



    ரி‌ஷப் பந்தின் ஆட்டம் கடந்த ஒரு ஆண்டாகவே மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார். 3 நிலை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். விஜய் சங்கர் பேட்டிங் ஆல்ரவுன்டர் வரிசையில் இருக்கிறார்.

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக ஆடினார். ரகானே உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த 3 பேரும் உலககோப்பை அணியில் இடம்பிடிக்க கடும் போட்டியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும் கைப்பற்றியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் வென்றுள்ளன.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரைக்கும் விராட கோலிக்கு டோனி தேவை என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒட்டுமொத்த கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்து வருகிறார்.

    37 வயதாகும் டோனி, கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தார். அபாரனமான கிரிக்கெட் திறமை, சிறப்பாக பீல்டிங் அமைப்பு, துல்லியமான ஸ்டம்பிங் ஆகியவற்றில் டோனியிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சமீப காலமாக அவரது பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.



    டி20-யில் இருந்து நீக்கப்பட்ட டோனி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் திறமை பெற்றுள்ள டோனி உலகக்கோப்பை வரை விராட் கோலிக்கு வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி உலகக்கோப்பை வரை கட்டாயம் விளையாட வேண்டும். விராட் கோலிக்கு டோனி தேவை. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. டோனி பீல்டிங்கை சரியாக நிற்கும்படி அட்ஜஸ்ட் செய்வது உங்களுக்கே தெரியும். பந்து வீச்சாளர்களிடம் எப்படி பந்து வீச வேண்டும் இந்தியில் ஆலோசனை வழங்குவார். இது விராட் கோலிக்கு மிகப்பெரிய அளவில் பிளஸ்-யாக அமையும்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடம் லெவன் அணி குறித்து இந்திய அணிக்கு தெளிவு இல்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். #TeamIndia
    உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த தொடருக்கான சிறந்த அணியை கண்டறிவதில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான், விராட் கோலி ஆகியோருக்கு முதல் மூன்று இடங்கள் உறுதியாகிவிட்டது. அதேபோல் பந்து வீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோரது இடம் உறுதியாகியுள்ளது. விக்கெட் கீப்பரில் டோனி இருந்தாலும், சமீப காலமாக அவரது பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டதால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

    4-வது மற்றும் 6-வது இடத்திற்கு பேட்டிங்கில் இந்தியா இன்னும் தீர்வு காணாமல் இருக்கிறது. தற்போது அம்பதி ராயுடை 4-வது இடத்திற்கு இந்தியா தயார் செய்து வருகிறது. உலகக்கோப்பை வரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.



    சுழற்பந்து வீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் கடந்த ஓராண்டிற்கு மேலாக விளையாடி வருகிறார்கள். ஆனால் தற்போது சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் அடிக்கடி நீக்கப்படுகிறார்கள். நேற்றைய போட்டியில் ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஹர்திக் பாண்டியா வெளியில் இருக்கிறார். கலீல் அஹமது 3-வது வேகப்பந்து வீச்சாளரான இடம்பிடித்துள்ளார்.

    இதனால் ஆடும் லெவன் அணி எது என்பதை இந்தியா இன்னும் கண்டறியவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவன் அணி எது என்பதில் இந்தியா இன்னும் தெளிவாக இல்லை என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
    ×