search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jonty Rhodes"

    • லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார்.
    • இப்போதும் அனைத்து அணிகளிலும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை.

    இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் நாளை முதல் துவங்குகிறது. இந்த தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருக்கும் அவரிடம் தற்சமயத்தில் உலக அரங்கில் அசத்தும் டாப் 3 ஃபீல்டர்களை பெயரிடுமாறு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் தான் தற்போதைய நிலையில் ஒரே சிறந்த ஃபீல்டராக இருப்பதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    தற்போதைய நிலைமையில் ரவீந்திர ஜடேஜா மட்டும்தான் இருக்கிறார். பொதுவாக ஐபிஎல் துவங்கும் போது தான் அனைவரும் பீல்டிங் துறையில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். இப்போதும் அனைத்து அணிகளிலும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை.


    மேலும் 50 ஓவர் கிரிக்கெட்டில் உங்களுக்கு போதுமான நேரம் இருக்கும். அதில் 6 -7 வீரர்கள் சுமாராக இருந்தாலும் பீல்டிங் துறையில் அசத்தும் 3 -4 வீரர்களை வைத்து வெற்றி காணலாம். ஆனால் ஐபிஎல் துவங்கிய 2008 முதல் பீல்டிங் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த 12 - 13 வருடங்களில் அதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் ஒரு அணியில் இருக்கும் 2 - 3 ஃபீல்டர்களை பற்றி மட்டுமே பேசுவோம்.

    ஆனால் இப்போது அணியில் அனைவரும் மிகச் சிறந்த ஃபீல்டர்களாக இருக்க வேண்டும் என்ற வளர்ச்சியை நோக்கி வந்துள்ளோம். மேலும் பீல்டிங் துறையில் கவனம் செலுத்துவது அவ்வளவு கடினமானதல்ல. ஏனெனில் அது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய துறையாகும். தற்போது பேட்டிங், பவுலிங் போலவே பீல்டிங் பயிற்சியாளர்களும் தினம்தோறும் அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றி தங்களது வேலையை முடிக்கிறார்கள். இப்போது பீல்டிங் என்பது கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது என்று கூறினார்.

    சரியான கலவை கொண்டது இந்திய அணி. இருந்தாலும் மேலும் ஆறு அணிகள் பலத்துடன் உள்ளன என்று ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறும் உலகக்கோப்பை தொடர் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 15 வீரர்களும் சிறப்பானவர்கள். சரியான கலவை கொண்டது இந்திய அணி என்று தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜான்டி ரோட்ஸ் கூறுகையில் ‘‘இந்தியா மிகச்சிறப்பான 15 பேர்  கொண்ட அணியை தேர்வு செய்துள்ளது. ஆனால், மேலும் ஆறு அணிகள் அதேபோன்று உள்ளன. சில வலுவான அணிகளும் உலகக்கோப்பையில் உள்ளன. அவர்கள் அன்றைய தினம், கண்டிசன் ஆகியவற்றை கருத்தில் கொண்ட எப்படி 11 பேர் கொண்ட சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்கிறார்களோ? அதை பொறுத்துதான் சிறந்த அணி என்று கூற முடியும்.



    இந்திய அணியில் ஏராளமான அனுபவ வீரர்கள் உள்ளனர். இளம் வீரரான பும்ரா டெத் ஓவரில் அதிக அளவில் அனுபவம் பெற்றவர். இதை வைத்து பார்க்கும்போது இந்தியாவிக்கு வாய்ப்புள்ளது. ஆனால் மேலும் ஆறு அணிகள் இதேபோல் உள்ளன’’ என்றார்.
    கொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்து 25 வருட சாதனையை சமன் செய்துள்ளார் டி ப்ரூயின். #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் களம் இறங்கிய இலங்கை 338 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் இலங்கை 275 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 490 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை. கடினமாக இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா விரைவாக 5 விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு டி ப்ரூயின் உடன் பவுமா ஜோடி சேர்ந்தார்.



    இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பவுமா 63 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் டி ப்ரூயின் சிறப்பாக விளையாடி 101 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஆசியக் கண்டத்தில் 4-வது இன்னிங்சில் சதம் அடித்த 2-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் ஒரு டெஸ்டின் கடைசி இன்னிங்சில், அதாவது நான்காவது இன்னிங்சில் 1993-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன்பின் தற்போது 28 வருடத்திற்குப் பிறகு ப்ரூயின் சதம் அடித்துள்ளார். 2004-ல் ஸ்மித் 74 ரன்களும், தற்போது பவுமா 63 ரன்களும் அடித்துள்ளனர்.
    ×