என் மலர்
நீங்கள் தேடியது "SLvSA"
- 32 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.
- 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.
கெபேஹா:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் வெர்ரைன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 242 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை தரப்பில் மேத்யூஸ் 40 ரன்னுடனும், காமிந்து மெண்டிஸ் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
116 ரன்கள் பின்னிலையுடன் இலங்கை இன்று பேட்டிங்கை தொடங்கியது. இதில் மேத்யூஸ் 44 ரன்னிலும், காமிந்து மெண்டிஸ் 48 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய தனஞ்செயா டி சில்வா 14 ரன், குசல் மெண்டிஸ் 16 ரன், பிரபாத் ஜெயசூர்யா 24 ரன், விஷ்வா பெர்ணாண்டோ 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் இலங்கை தனது முதல் இன்னிங்சில் 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 89 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 32 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக டோனி டி ஜோர்ஜி - மார்க்ரம் களமிறங்கினர். டோனி டி ஜோர்ஜி 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் ரிக்கல்டன் 24 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இதனால் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் பிரதாப் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடர் இன்று நடைபெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களகாக டி காக், அம்லா ஆகியோர் களம் இறங்கினார்கள். அம்லா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் 19 ரன்களும், டி காக் 20 ரன்கள் அடித்தனர். டுமினி 3 ரன்னில் வெளியேற கிளாசன் 18 ரன்களும், டேவிட் மில்லர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்தவர்கள் தொடர்ந்து டக்அவுட்டில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 16.4 ஓவரில் 98 ரன்னில் சுருண்டது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான தனஞ்ஜெயா டி சில்வா (2), அகிலா தனஞ்ஜெயா (2), சண்டகன் (3) பந்து வீச்சில் அசத்தினார்கள்.
பின்னர் 99 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெரேரா ரன்னிலும், மெண்டிஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
அதன்பின் வந்த சண்டிமல் மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டி சில்வா 26 பந்தில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மேத்யூஸ் ரன்ஏதும் எடுக்காமலும், தசுன் ஷனகா 16 பந்தில் 16 ரன்னிலும், திசாரா பெரேரா ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இந்த இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டது.
என்றாலும் சண்டிமல் நிலைத்து நின்று அணியை வெற்றி பெறவைத்தார். இதனால் இலங்கை 16.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது. #SLvSA
பின்னர் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. டி காக்கை (54) விட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 24.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக் 121 ரன்னில் சுருண்டது.
சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 9 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் அள்ளினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் மூன்று போட்டிகளையும் தென்ஆப்பிரிக்கா வென்றதால் 3-2 எனத் தொடரை கைப்பற்றியது.
டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த குசால் பெரேரா 8 ரன்னில் வெளியேறினார்.
ஆனால் தொடக்க வீரர் டிக்வெல்லா சிறப்பாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார். குசால் மெண்டிஸ் 38 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். ஆனால் கேப்டன் மேத்யூஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடைசி வரை நின்று மேத்யூஸ் 97 பந்தில் 97 ரன்கள் அடிக்க இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது. பின்னர் 300 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்க இருக்கிறது.
இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி கொழும்பில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி நீக்கப்பட்டு ரபாடாவும், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு எய்டன் மார்கிராமும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி பேட்டிங் செய்தபோது, 10-வது ஓவரில் டு பிளிசிஸ் கேட்ச் பிடிக்க முயற்சி செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை.
இந்நிலையில் தோள்பட்டை காயத்திற்காக 6 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் எஞ்சிய இரண்டு ஒருநாள் மற்றம் ஒரெயொரு டி20 போட்டியில் இருந்து டு பிளிசிஸ் விலகியுள்ளார்.
ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. நாளை 4-வது போட்டி நடக்கிறது.
இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
டி காக் 2 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அறிமுக வீரரான ரீசா ஹென்ரிக்ஸ் களம் இறங்கினார். இவர் ஹசிம் அம்லா உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அம்லா 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ரீசா ஹென்ரிக்ஸ் 89 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதன்பின் வந்த டுமினி 90 பந்தில் 92 ரன்னும், மில்லர் 47 பந்தில் 51 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது.
பின்னர் 364 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க 45.2 ஓவரில் 285 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தனஞ்ஜெயா டி சில்வா அதிகபட்சமாக 84 ரன்கள் சேர்த்தார்.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 4 விக்கெட்டும், பெலுக்வாயோ 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா மூன்றிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன.
அதன்படி இலங்கை அணியின் உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 9 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், குசால் பெரேரா 12 ரன்னிலும் வெளியேறினார்கள்.
அதன்பின் டிக்வெல்லா உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதம் அடித்த டிக்வெல்லா 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் மீண்டும் இலங்கை விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ஷெஹன் ஜெயசூர்யா 18 ரன்னிலும், திசாரா பேரேரா 19 ரன்னிலும், அகிலா தனஞ்ஜெயா 9 ரன்னிலும், சுரங்கா லக்மல் 7 ரன்னிலும் வெளியேறினார்கள்.
கேப்டன் மேத்யூஸ் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி 79 ரன்கள் சேர்க்க இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலுக்வாயோ தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் தம்புல்லாவில் 2-வது ஒருநாள் போட்டி இன்று மதியம் இரண்டரை மணிக்கு தொடங்குகிறது. இதில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணியில் பிரபாத் ஜெயசூர்யா, கசுன் ரஜிதா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணி விவரம்:-
1. ஹசிம் அம்லா, 2. டி காக், 3. மார்கிராம், 4. டு பிளிசிஸ், 5. டுமினி, 6. டேவிட் மில்லர், 7. முல்டர், 8. பெலுக்வாயோ, 9. ரபாடா, 10. ஷம்சி, 11. நிகிடி
பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அம்லா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மார்கிராம் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.
அடுத்து டி காக் உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 117 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டி காக் 59 பந்தில் பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டு பிளிசிஸ் 56 பந்தில் 10 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டுமினி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க 31 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நடக்கிறது.
அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, உபுல் தரங்காக ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினார்கள். டிக்வெல்லா 2 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். தரங்கா 10 ரன்னில் ரன்அவுட் ஆனார்.
குசால் பேரேரா
அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 3 ரன்னில் ரபாடா பந்தில் வெளியேறினார். 4-வது வீரராக களம் இறங்கிய குசால் பேரேரா தாக்குப்பிடித்து விளையாட, கேப்டன் மேத்யூஸ் 5 ரன்னிலும், ஜெயசூர்யா ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 36 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.
6-வது விக்கெட்டுக்கு குசால் பெரேராவுடன், ஆல்ரவுண்டர் திசார பெரேரா ஜோடி ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. குசால் பெரேரா 81 ரன்களும், திசாரா பெரேரா 49 ரன்களும் எடுக்க இலங்கை அணி 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 193 ரன்னில் சுருண்டது.
ரபாடா 8 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், ஷம்சி 8.3 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. இந்த அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
490 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 113 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 6-வது விக்கெட்டுக்கு டி ப்ரூயின் உடன் பவுமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சாளர்களை விரக்தியடையச் செய்தது. 4-வது நாள் காலை முழுவதும் நிலைத்து நின்று விளையாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் ஹெராத் இந்த ஜோடியை பிரித்தார். பவுமா 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 123 ரன்கள் குவித்தது.
பவுமா விக்கெட் வீழந்ததும் டி காக் 8, ஸ்டெயின் 6, ப்ரூயின் (101) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார். அத்துடன் 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இவரது சிறப்பான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா 290 ரன்னில் சுருண்டது.
இந்த போட்டியின் கடைசி இன்னிங்ஸ்-ஆன 4-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹெராத் 34 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 12 முறை நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி எந்த பந்து வீச்சாளரும் எட்ட முடியாத உச்சத்தில் உள்ளார்.
சுழற்பந்து ஜாம்பவான்களான முரளீதரன் மற்றும் வார்னே ஆகியோர் தலா 7 முறைதான் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 6 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.