search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக எஞ்சிய போட்டியில் இருந்து டு பிளிசிஸ் விலகல்
    X

    காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக எஞ்சிய போட்டியில் இருந்து டு பிளிசிஸ் விலகல்

    தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். #SAvIND
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இலங்கை அணி பேட்டிங் செய்தபோது, 10-வது ஓவரில் டு பிளிசிஸ் கேட்ச் பிடிக்க முயற்சி செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை.

    இந்நிலையில் தோள்பட்டை காயத்திற்காக 6 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் எஞ்சிய இரண்டு ஒருநாள் மற்றம் ஒரெயொரு டி20 போட்டியில் இருந்து டு பிளிசிஸ் விலகியுள்ளார்.

    ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. நாளை 4-வது போட்டி நடக்கிறது.
    Next Story
    ×