search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Herath"

    இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹெராத் டெஸ்டின் நான்காவது இன்னிங்சில் 12 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி உச்சத்தில் உள்ளார். #SLvSA #Herath
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்பில் கடந்த 20-ந்தேதி முதல் நேற்று (23-ந்தேதி) வரை நடைபெற்றது. நான்கு நாட்களிலேயே முடிந்த இந்த டெஸ்டில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    490 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 113 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 6-வது விக்கெட்டுக்கு டி ப்ரூயின் உடன் பவுமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சாளர்களை விரக்தியடையச் செய்தது. 4-வது நாள் காலை முழுவதும் நிலைத்து நின்று விளையாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் ஹெராத் இந்த ஜோடியை பிரித்தார். பவுமா 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 123 ரன்கள் குவித்தது.

    பவுமா விக்கெட் வீழந்ததும் டி காக் 8, ஸ்டெயின் 6, ப்ரூயின் (101) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார். அத்துடன் 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இவரது சிறப்பான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா 290 ரன்னில் சுருண்டது.



    இந்த போட்டியின் கடைசி இன்னிங்ஸ்-ஆன 4-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹெராத் 34 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 12 முறை நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி எந்த பந்து வீச்சாளரும் எட்ட முடியாத உச்சத்தில் உள்ளார்.

    சுழற்பந்து ஜாம்பவான்களான முரளீதரன் மற்றும் வார்னே ஆகியோர் தலா 7 முறைதான் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 6 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    காலேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இலங்கையின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 126 சுருண்டது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கருணாரத்னே தனிஒருவராக நின்று 158 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 287 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், ஷாம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டீன் எல்கர் மற்றும் மார்கிராம் ஆகியோர் களம் இறங்கினார்கள். மார்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு நான்கு ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 4 ரன்னுடனும், மகாராஜ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இலங்கையின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.



    டீன் எல்கர் (8), மகாராஜ் (3), அம்லா (15), பவுமா (17), டி காக் (3) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 51 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 7-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நீண்ட நேரம் தாக்குப்பிடித்தது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 115 ரன்னாக இருக்கும்போது பிலாண்டர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டு பிளிசிஸ் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    கடைசி விக்கெட்டாக ஸ்டெயின் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 54.3 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், லக்மல் 3 விக்கெட்டும், ஹெராத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவை விட 161 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 161 முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ஹெராத் அறிவித்துள்ளார். #SLvSA
    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தற்போதைய முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ரங்கணா ஹெராத். 40 வயதாகும் இவர் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999-ம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணியில் அறிமுகமான இவர், முரளீதரனால் அதிக போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை.

    முரளீதரன் ஓய்வு பெற்றதும் இலங்கை அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். 71 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹெராத் 2015-ல் ஒருநாள் போட்டியிலும் இருந்தும், 2016-ல் டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்பின் நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. அத்துடன் சர்வதேச போட்டிகளை முடித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.



    இதுகுறித்து ரங்கணா ஹெராத் கூறுகையில் ‘‘இந்த வருட இறுதியில் நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் என்னுடைய கடைசி தொடராக இருக்கலாம். நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் இங்கிலாந்து தொடருக்கு சுமார் மூன்று மாதங்கள் இருக்கிறது. தற்போது நான் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகிறேன்.

    கிரிக்கெட்டிற்கு வரும் ஒவ்வொரு வீரரும் அவர்களது ஆட்டத்தை நிறுத்தியாக வேண்டியதற்கான நேரம் வரும். அதற்கான நேரம் எனக்கு வந்து விட்டதாக கருதுகிறேன்’’ என்றார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹெராத் டெஸ்ட் போட்டியில் 418 விக்கெட்டுக்கள் குவித்துள்ளார்.
    ×