என் மலர்
நீங்கள் தேடியது "காலே டெஸ்ட்"
- முதல் இன்னிங்சில் 148 ரன்கள் விளாசினார்.
- 2ஆவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் குவித்தார்.
இலங்கை- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (148), முஷ்பிகுர் ரஹிம் (163) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 495 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை, தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 187 ரன்கள் விளாச 485 ரன்கள் குவித்தது.
10 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றதுடன் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. ஷான்டோ 56 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹிம் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ரஹிம் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஷான்டோ அபாரமாக விளையாடி சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அவர், 2வது இன்னிங்சில் சதம் அடித்து சாதனைப் படைத்தார்.
வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷான்டோ 125 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வங்கதேசம் 295 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணிக்கு 296 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் கடைசி நாளான இன்று 37 ஓவர்கள் மட்டுமே மீதமுள்ளதால் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டு பிளிசிஸை (49) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 161 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 161 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.
குணதிலகா, கருணாரத்னே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குணதிலகா 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 60 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த டி சில்வா 9 ரன்னிலும், மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் ஏஆர்எஸ் சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-ம் நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

மேத்யூஸ் 14 ரன்னுடனும் சில்வா 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை இலங்கை 272 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால் இலங்கை அணி முடிந்த அளவிற்கு விளையாடிவிட்டு, தென்ஆப்பிரிக்காவை சேஸிங் செய்ய வைக்கும்.
காலே மைதானத்தில் நான்காவது இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இயலாத காரியம். இதனால் இலங்கையின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டீன் எல்கர் மற்றும் மார்கிராம் ஆகியோர் களம் இறங்கினார்கள். மார்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு நான்கு ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 4 ரன்னுடனும், மகாராஜ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இலங்கையின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

டீன் எல்கர் (8), மகாராஜ் (3), அம்லா (15), பவுமா (17), டி காக் (3) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 51 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 7-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நீண்ட நேரம் தாக்குப்பிடித்தது.
தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 115 ரன்னாக இருக்கும்போது பிலாண்டர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் டு பிளிசிஸ் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டாக ஸ்டெயின் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 54.3 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், லக்மல் 3 விக்கெட்டும், ஹெராத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவை விட 161 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 161 முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.






