என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவன் அணி குறித்து இந்தியாவிற்கு தெளிவு இல்லை- ஜாகீர் கான்
Byமாலை மலர்30 Oct 2018 9:49 AM GMT (Updated: 30 Oct 2018 9:49 AM GMT)
உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடம் லெவன் அணி குறித்து இந்திய அணிக்கு தெளிவு இல்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். #TeamIndia
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த தொடருக்கான சிறந்த அணியை கண்டறிவதில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான், விராட் கோலி ஆகியோருக்கு முதல் மூன்று இடங்கள் உறுதியாகிவிட்டது. அதேபோல் பந்து வீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோரது இடம் உறுதியாகியுள்ளது. விக்கெட் கீப்பரில் டோனி இருந்தாலும், சமீப காலமாக அவரது பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டதால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
4-வது மற்றும் 6-வது இடத்திற்கு பேட்டிங்கில் இந்தியா இன்னும் தீர்வு காணாமல் இருக்கிறது. தற்போது அம்பதி ராயுடை 4-வது இடத்திற்கு இந்தியா தயார் செய்து வருகிறது. உலகக்கோப்பை வரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் கடந்த ஓராண்டிற்கு மேலாக விளையாடி வருகிறார்கள். ஆனால் தற்போது சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் அடிக்கடி நீக்கப்படுகிறார்கள். நேற்றைய போட்டியில் ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஹர்திக் பாண்டியா வெளியில் இருக்கிறார். கலீல் அஹமது 3-வது வேகப்பந்து வீச்சாளரான இடம்பிடித்துள்ளார்.
இதனால் ஆடும் லெவன் அணி எது என்பதை இந்தியா இன்னும் கண்டறியவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவன் அணி எது என்பதில் இந்தியா இன்னும் தெளிவாக இல்லை என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான், விராட் கோலி ஆகியோருக்கு முதல் மூன்று இடங்கள் உறுதியாகிவிட்டது. அதேபோல் பந்து வீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோரது இடம் உறுதியாகியுள்ளது. விக்கெட் கீப்பரில் டோனி இருந்தாலும், சமீப காலமாக அவரது பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டதால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
4-வது மற்றும் 6-வது இடத்திற்கு பேட்டிங்கில் இந்தியா இன்னும் தீர்வு காணாமல் இருக்கிறது. தற்போது அம்பதி ராயுடை 4-வது இடத்திற்கு இந்தியா தயார் செய்து வருகிறது. உலகக்கோப்பை வரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் கடந்த ஓராண்டிற்கு மேலாக விளையாடி வருகிறார்கள். ஆனால் தற்போது சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் அடிக்கடி நீக்கப்படுகிறார்கள். நேற்றைய போட்டியில் ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஹர்திக் பாண்டியா வெளியில் இருக்கிறார். கலீல் அஹமது 3-வது வேகப்பந்து வீச்சாளரான இடம்பிடித்துள்ளார்.
இதனால் ஆடும் லெவன் அணி எது என்பதை இந்தியா இன்னும் கண்டறியவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவன் அணி எது என்பதில் இந்தியா இன்னும் தெளிவாக இல்லை என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X