என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்"

    • ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும்.
    • ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் அடுத்த மாதம் 12-ந்தேதி முதல் இயக்கப்படவுள்ளன. கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை ராயபுரம் வரை இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கான பார்சல்களை ஏற்றுவதற்கு ஒதுக்கப்படும்.

    ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும். வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் இந்த ரெயில் மங்களூருவில் இருந்து டிசம்பர் 12-ந் தேதி புறப்பட்டு 13-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை ராயபுரம் வந்தடையும். பின்னர், 16-ந்தேதி மாலை 3.45 மணிக்கு ராயபுரத்தில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்றடையும்.

    இதில் ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும். ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு 3 பிரிவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் இந்த ரெயிலானது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கன்னூர் உள்ளிட்ட 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அடுத்தக்கட்டமாக சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்
    • குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

    பராமரிப்பு காரணமாக சென்னை எழும்பூருக்கு கீழ்கண்ட ரெயில்கள் செல்லாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    1. உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்

    2. கொல்லம் - சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயிலும் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    3. ராமேஸ்வரம் - சென்னை சேது அதிவிரைவு ரெயிலும் இயக்கப்படும்10 முதல் 29 வரை தாம்பரம் மட்டுமே இயக்கப்படும்.

    4. ராமேஸ்வரத்தில் இரவு 8.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வரும்

    5. ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    6. ராமேஸ்வரத்தில் மாலை 17.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வரும்

    7. மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

    8. சென்னை எழும்பூர் மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரெயில் எழும்பூருக்கு பதில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்

    • நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
    • உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

    அந்த கோர விபத்தின் தாக்கம் மறைவதற்குள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் உள்ள சனார் ஜங்ஷன் பகுதியில் இன்று காலை 9 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று 4-வது நடைமேடை பகுதியில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் 3-வது நடைமேடையை கடந்து சென்று கொண்டி ருந்தனர்.

    பயணிகளில் மற்றொரு பிரிவினர் தண்டவாளத்தை கடந்து அடுத்த பக்கம் செல்வதற்கு நடந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர் திசையில் இருந்து மிக வேகமாக ஹவுரா செல்லும் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    ரெயில் மிக அருகில் வந்த போதுதான் பயணிகள் கவனித்து அலறினார்கள். 4-வது நடைமேடைக்கும், 3-வது நடைமேடைக்கும் இடையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அதற்குள் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர். அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சனார் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லக்கூடிய ரெயில் ஆகும். இதனால் அந்த ரெயில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

    ரெயில் மோதிய வேகத்தில் 3 பயணிகளின் உடல்கள் கடுமையாக சிதறி போனது. பலியான 6 பயணிகளும் இன்று பவுணர்மி தினத்தை முன்னிட்டு வாரணாசியில் புனித நீராடி சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    6 பேர் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் அதிர்ச்சி தெரிவித்தார். பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள அவர் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.

    சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர்.
    • கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இங்கிலாந்தில் டான்காஸ் டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் பகுதிக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ஹண்டிங்டன் பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். சிலர் கழிவறைக்குள் சென்று பதுங்கி கொண்டனர்.

    இதுகுறித்து பயணிகள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ரெயிலில் இருந்து பயணிகள் பயத்துடன் அவசர அவசரமாக வெளியேறினார்கள்.

    இந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பயங்கரவாத எதிர்ப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் பெரிய கத்தியை வைத்து இருந்தார் என்றும் எங்கே பார்த்தாலும் ரத்தம் இருந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.

    கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார். "ஹண்டிங்டன் அருகே ரெயிலில் நடந்த தாக்குதல் சம்பவம் பயங்கரமானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.

    அவசர நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் போலீசாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.

    • தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

    இன்றைய காலக்கட்டத்தில் பிழைப்பிற்காக நாட்டை விட்டோ அல்லது மாநிலம் தாண்டியோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலானவர்கள் சொந்த ஊர், குடும்பத்தினர்கள், உறவினர்களை விட்டு பிரிந்து சென்று பணி செய்யும் சூழ்நிலையில் ஆண்டுக்கு முறையோ, பல ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, பண்டிகை, சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ சொந்த ஊருக்கு வருவார்கள்.

    அந்த வகையில், சமீபத்தில் தீபாவளி பண்டிகை நாடு ழுமுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் ரெயில்கள் முன்பதிவு செய்தும், முன்பதிவில்லாமலும் படிக்கட்டுகளில் நின்று பயணிப்பது என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகவே உள்ளது.

    இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை பார்த்து, பலரும் அடடே! இது நமக்கு தோன்றாமல் போனதே என்று யோசிக்கும் அளவிற்கு உள்ளது.

    விஷால் என்பவர் பகிர்ந்து வீடியோவில், ஒரு நபர் ரெயில் கழிப்பறையை தனது படுக்கையறையாக மாற்றி பயணிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பிளாட்பாரத்தில் ரெயில் வந்து நின்ற போது இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த விஷால் வீடியோ எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரிடம் சென்று கழிவறையை ஒரு படுக்கையறையாக மாற்றியுள்ளீர்கள் என்று கூறும் விஷால் அந்த நபர் வைத்துள்ள பொருட்களை வீடியோவில் காட்டுகிறார். மேலும் இதெல்லாம் உங்கள் வீட்டுப் பொருட்களா? என்று விஷால் கேட்க அந்த நபரோ, அலட்சியமாக ஆம் என்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தள பயனர்களிடையே, இந்திய ரெயில்களின் நிலை, இடப்பற்றாக்குறை, பொது சொத்துக்களை பயணிகள் மதிக்காதது குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது. மேலும் விவாத பொருளாகவே மாறியுள்ளது.



    • அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க பாடுபட்டனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.

    இதனையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டு அணைத்து பயணிகளும் உடனடியாக வெளியற்றப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தினால் ஒரு பெண் பயணிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 

    • கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் உள்ள பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மற்றும் 5வது நடைமேடைகளில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    ரெயில்களில் ஏறவும் இறங்கவும் பயணிகள் முண்டியடித்து முயன்றதால் பலர் கீழே விழுந்து மிதிபட்டு காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ரெயில்வே மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர் சிகிச்சைக்காக பர்தாமன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பண்டிகை கால கூட்டம் காரணமாக ரெயில் நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    • இந்த சம்பவம் ரெயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
    • இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா ரெயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் உடனடியாக அப்பெண்ணை பத்திரமாக காப்பாற்றினர்.

    இந்த சம்பவம் ரெயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரயில் நிறுத்தப்பட்டது.
    • முதலில் ரயிலின் ஓசையைக் மிரண்ட யானை, பின் வளத்திற்கும் சென்றது

    மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

    ரெயில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் யானை, ரெயில் வருவதை கண்டதும் திடீரென வேகத்தை அதிகரித்து அலறல் சத்தம் எழுப்பும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார்.

    ரெயில் நின்றபிறகு யானை தண்டவாளத்தை விட்டு நகர்ந்து காட்டுக்குள் சென்றது. 

    • மது அருந்தியதை பயணிகள் எச்சரித்தும், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை.
    • மது அருந்தியதை எதிர்த்துப் பேசிய மூத்த பயணியையும் அவர் மதிக்கவில்லை.

    நாகர்கோவிலில் இருந்து மதுரை சென்ற ரெயிலில் , பயணிகள் முன்னிலையில் ஒரு வடமாநிலத்தவர் வெளிப்படையாக மது அருந்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மது அருந்தியதை பயணிகள் எச்சரித்தும், அவர் அதைக் கண்டுகொள்ளாமல் தனது செயலைத் தொடர்ந்துள்ளார். இதை எதிர்த்துப் பேசிய மூத்த பயணியையும் அவர் மதிக்கவில்லை.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரெயில்களில் இதுபோன்று அநாகரீகமான சம்பவங்களைத் தடுக்க, ரெயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறப்பு ரெயில் (06029), வரும் செப்டம்பர் 8-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06030), வரும் செப்டம்பர் 7-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06029), வரும் செப்டம்பர் 8-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருச்சியில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06190), வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் (செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலும் (மேற்கண்ட நாட்களில்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றினார்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பெண்ணை, கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி காப்பாற்றினார்.

    ரெயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த விரைவு ரெயிலில் இருந்து கீழே இறங்க முற்பட்டபோது இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை, அவ்வழியே சென்ற ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

    இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ×