என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆலங்குளம் 6 பேர் கைது"
பட்ஜெட் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சமீபத்தில் சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஜெ4 மற்றும் கேலக்ஸி ஜெ6 மாடல்களுடன் விற்பனையாகும் என கூறப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், குவால்காம் பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் நெதர்லாந்து மற்றும் வியட்நாம் நாட்டு வலைத்தளங்களில் வெளியானது. ஏற்கனவே வெளியான சாம்சங் கேலக்ஸி ஜெ4 மாடலில் 5.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1280 பிக்சல் சூப்பர் AMOLED பேனல், 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கிறது.
இத்துடன் குவாட்-கோர் சாம்சங் எக்சைனோஸ் 7570 சிப்செட், 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி மெமரி, புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஜெ6 மாடலில் 5.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பேனல், 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டுள்ளது. இதில் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 3 ஜிபி / 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #smartphone
ஊத்துக்கோட்டை:
பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சாலை கண்ணிகைப் பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணை, போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைகிறது.
இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணையில் 6 வழிச் சாலை அமைத்தால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் 800 அடி அகலத்தில் விளை நிலங்கள் கையகப்படுத்த வேண்டியிருக்கும். இதனால் 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் கிராமம் வழியாக 6 வழி சாலை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் சென்னங்காரனையில் நிலம் அளவிடும் பணிக்கு வந்த அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இந்தநிலையில் ஓய்வு பெற்ற தாசில்தார் விஜயராகவுலு தலைமையில் அதிகாரிகள் நேற்று மீண்டும் நிலம் அளவிடுவதற்காக சென்னங்காரணை கிராமத்துக்கு வந்தனர்.
இதனை அறிந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டனர். அவர்கள் அதிகாரிகளின் காரை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளிடமும் கடும் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகள் ஏதும் மேற் கொள்ளாமல் அங்கிருந்து காரில் திரும்பி சென்று விட்டனர். #LandAcquisition #Farmersprotest
ராஜபாளையம் பொன்னகரம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியம் (வயது34). கடந்த 2015-ம் ஆண்டு கொடுக்கல்-வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்ட ரமணி என்ற பெண் கொலை வழக்கில் சங்கர சுப்பிரமணியம் முக்கிய குற்றவாளி ஆவார்.
இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த இவர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் கார் டிரைவராக உள்ளார்.
நேற்று மாலை சங்கர சுப்பிரமணியம் தனது தாயார் இந்திராணியுடன் மலையடிப்பட்டி வழியாக ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்து வழி மறித்தது.
அவர்கள் சங்கரசுப்பிரமணியத்தை ஆட்டோவில் இருந்து இழுத்து போட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர சுப்பிரமணியம் தாய் கண் முன்பே பரிதாபமாக இறந் தார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் இந்திராணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் பழிக்குப்பழியாக சங்கரசுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரமணியின் மகன் ரெங்கராஜன் (30) அடிக்கடி சங்கரசுப்பிரமணியத்தை சந்தித்து எனது தாயை கொலை செய்த உன்னை பழி தீர்ப்பேன் என மிரட்டி உள்ளார்.
தற்போது அவர்தான் நண்பர்களுடன் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெங்கராஜன், அவரது நண்பர்கள் காளீஸ்வரன் (22), கிருஷ்ணமூர்த்தி (28), பாண்டியராஜன் (30), விகாஷ்ராஜ் (26), சந்திர பிரகாஷ் (26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மலையடிப்பட்டியை சேர்ந்த சசிஆனந்த் (29) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்