search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுக்கு சங்கர்"

    • சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல்.

    யூ டியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார்.

    இதுதொடர்பாக, பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

    இந்நிலையில், சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதன்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த, பெண் காவலர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சவுக்கு சங்கர் மீது கடந்த மே மாதம் குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை தமிழக போலீசார் பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர் மீது குண்டர்  சட்டம் பாய்ந்துள்ளது.

    குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா? பொது அமைதிக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்துகிறார்? போன்ற கேள்விகளை உச்சநீதிமன்றம் அரசு நோக்கி எழுப்பியது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பல்வேறு முறைகேடான தகவல்களை பதிவிட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குண்டர் சட்டம் போடப்பட்டது என வாதங்களை முன்வைத்தார்.

    அரசு தரப்பு குற்றச்சாட்டை மறுத்த சவுக்கு சங்கர் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய அதே நீதிபதி, குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என தீர்ப்பு வழங்கியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிவிட்டதால் விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    அத்துடன் ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றததிற்கு மாற்றக்கோரிய மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

    • சவுக்கு சங்கர் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    • அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா?

    புதுடெல்லி:

    சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

    இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

    • கிருஷ்ணிடம் வாங்கிய பணத்தை சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
    • வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பரத்குமார், 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.

    கரூர்:

    சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சவுக்கு சங்கர் நடத்தும் யூ-டியூப் சேனலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், கரூரில் பிரியாணி கடை நடத்தும் கிருஷ்ணன் என்பவருக்கும் ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட இருவரும் பேசியுள்ளனர். அப்போது கிருஷ்ணனிடம் விக்னேஸ் ரூ.7 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தெரிகிறது.

    இதையடுத்து , கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்டையில், விக்னேஷிடம் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணிடம் வாங்கிய பணத்தை சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து விக்னேஷை கைது செய்த கரூர் நகர போலீசார். அவரை சிறையில் அடைத்தனர். இந்த, நிலையில், விக்னேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புழல் சிறையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருந்து வரும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக நேற்று கரூர் குற்றவியல் நடுவர் பரத்குமார் முன்னிலையில் போலீசார் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரிடம் விசரணை நடத்த 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்குமாறு அனுமதி கேட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பரத்குமார், 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து சவுக்கு சங்கரிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் போலீசாரிடம் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார். மேலும் ரூ.7 லட்சம் மோசடி குறித்து தனக்கு தெரியாது என்றும், இதில் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் மறுத்துள்ளார். அதே வேளையில் இந்த வழக்கில் சில ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர்.

    அதை அடிப்படையாக வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ம்தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர்.
    • ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    தேனி:

    பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ம்தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்தநிலையில், சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் 280 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். ஆன்லைன் மூலம் மதுரை சிறப்பு கோர்ட்டில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    • போலீசார் பதில் மனு தாக்கல் செய்யாமல், டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்கின்றனர்.
    • சவுக்கு சங்கர் தாய் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜான் சத்தியன், இந்த வழக்கை மீண்டும் டிவிசன் பெஞ்சுக்கு அனுப்ப அவசியமில்லை. அது நீதித்துறை நேரத்தை வீணடிக்கும் செயல்’’ என்றார்.

    சென்னை:

    பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசிய யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

    ஆனால், நீதிபதி பி.பி.பாலாஜி, போலீஸ் கமிஷனர் உத்தரவை ரத்து செய்ய மறுத்து, பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    இதையடுத்து, இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.

    இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''இந்த வழக்கில் 4-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஒரு நீதிபதி பி.பி.பாலாஜி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அந்த தீர்ப்பை ஏற்று, இந்த வழக்கை டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதி, ''குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான ஆவணங்களை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்வையிட்டுள்ளார்.

    அது சட்டப்படி பிறப்பிக்கப்படவில்லை என தன் உத்தரவில் கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கில் இரு நீதிபதிகளின் உத்தரவில் எது சரி என்பதை முடிவு செய்ய என்னை (நீதிபதியை) பொறுப்பு தலைமை நீதிபதி நியமித்துள்ளார். பதில் மனுதாக்கல் செய்ய 15 நாட்கள் ஏற்கனவே நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

    கடந்த முறை என்னிடம் விசாரணைக்கு வரும்போது, அவகாசம் வழங்கினேன். ஆனால், போலீசார் பதில் மனு தாக்கல் செய்யாமல், டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்கின்றனர்.

    இப்போது இந்த வழக்கில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தவறு என்று ஒருவேளை முடிவுக்கு வந்தால், சவுக்கு சங்கரை சிறையில் இதுவரை அடைத்ததற்காக ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 ஆயிரம் என்று அரசு வழங்க தயாராக உள்ளதா?

    இதற்கு தயார் என்றால் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் தருகிறேன்'' என்று கருத்து தெரிவித்தார்.

    சவுக்கு சங்கர் தாய் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜான் சத்தியன், இந்த வழக்கை மீண்டும் டிவிசன் பெஞ்சுக்கு அனுப்ப அவசியமில்லை. அது நீதித்துறை நேரத்தை வீணடிக்கும் செயல்'' என்றார்.

    இதையடுத்து இந்த வழக்கில் 2.15 மணிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு ஜாமின் கேட்டு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார்.
    • மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

    அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்த 4-ந்தேதி அதிகாலையில் கைது செய்தனர். அவரை கோவை சிறையில் அடைத்தனர்.

    இதேபோல தேனியில் அவர், தனது உதவியாளர், டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர். அந்த வழக்கில் சவுக்கு சங்கரை கைது செய்து, மதுரை மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    இந்த நிலையில் அந்த வழக்கில் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்து ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை வாபஸ் பெறுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
    • சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாலமுருகனை பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    தேனி:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் சவுக்கு சங்கர். இவர் பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கடந்த 4ம் தேதி கைது செய்தனர்.

    தேனி அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் தனியார் விடுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது காரில் 400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்தனர். சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கைதான ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகிய 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி வழங்கியது தொடர்ந்து பரமக்குடி அருகே காரைக்குடியை சேர்ந்த மகேந்திரனிடம் கஞ்சா பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மகேந்திரனை கைது செய்த பழனிசெட்டிபட்டி போலீசார் அவரிடம் 2.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


    புதுக்கோட்டை சிறையில் இருந்த பாலமுருகனிடம் இந்த கஞ்சாவை பெற்று விற்பனை செய்ததாக மகேந்திரன் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாலமுருகனை பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகன், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து தூத்துக்குடி துறைமுகத்தில் பரவலாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. நான் அங்கு பணிபுரியும் லாரி டிரைவர்களிடம் கஞ்சா பெற்று மகேந்திரனுக்கு கஞ்சா வழங்கினேன். அவர் அதனை சவுக்கு சங்கர் உதவியாளரிடம் வழங்கியுள்ளார். மற்றபடி சவுக்கு சங்கரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை. சமூக வலைதளங்களில் தான் அவரது பேச்சை கேட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

    • மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
    • கோவையில் மற்றொரு வழக்கில் ஆஜராக செல்வதால் கால அவகாசம் கோரப்பட்டது.

    மதுரை:

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்த 4-ந்தேதி அதிகாலையில் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதேபோல தேனியில் அவர், தனது உதவியாளர் மற்றும் டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில் சவுக்கு சங்கரை கைது செய்து, மதுரை மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    இந்தநிலையில் அந்த வழக்கில் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது சவுக்கு சங்கர் தரப்பு வக்கீல் இன்று ஆஜராகவில்லை. கோவையில் மற்றொரு வழக்கில் ஆஜராக செல்வதால் கால அவகாசம் கோரப்பட்டது. மேலும் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்க கூடாது என கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதி பதி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
    • நீதிமன்ற காவலை தொடர்ந்து புழல் சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

    பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் 'யூடியூபர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்துள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. இதில், இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

    சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமி நாதன் உத்தரவிட்டார்.

    தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க நீதிபதி செந்தில்பாலாஜி உத்தரவிட்டார். இரு நீதிபதிகளின்மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

    மேலும் சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தில் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூன் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்ற காவலை தொடர்ந்து புழல் சிறைக்கு யூ டியூபர் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

    • பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றும் வெளிநாடு செல்ல இருந்தது தெரியவந்தது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சிவகங்கை, மேலதெரு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 53) மற்றும் சிவகங்கை மாவட்டம், இளையான் குடியைச் சேர்ந்த ஜபருல்லாகான் (56) ஆகிய இருவரும் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றும் பிறந்த தேதியில் மாற்றம் செய்தும் வெளிநாடு செல்ல இருந்தது தெரியவந்தது.

    இதனை அறிந்த இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் 2 பேரையும் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சவுக்கு சங்கர் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனர்.
    • பெலிக்ஸ் ஜெரால்ட் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    கோவை:

    பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை தொடர்ந்து அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.

    பெலிக்ஸ் ஜெரால்டை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று கோவை 4-வது ஜூடிசியல் கோர்ட்டில் நடந்தது.

    இதற்காக பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சியில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி சரவண பாபு, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டிடம் ஒரு நாள் மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து போலீசார் பெலிக்ஸ் ஜெரால்டை தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    சவுக்கு சங்கர் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனர். அவர் அளித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் இன்று மாலை 4 மணிக்கு பெலிக்ஸ் ஜெரால்ட் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    ×