சவுக்கு சங்கர் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

சவுக்கு சங்கர் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா?
சவுக்கு சங்கர் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி:

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com