search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் கைது
    X

    போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் கைது

    • பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றும் வெளிநாடு செல்ல இருந்தது தெரியவந்தது.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சிவகங்கை, மேலதெரு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 53) மற்றும் சிவகங்கை மாவட்டம், இளையான் குடியைச் சேர்ந்த ஜபருல்லாகான் (56) ஆகிய இருவரும் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றும் பிறந்த தேதியில் மாற்றம் செய்தும் வெளிநாடு செல்ல இருந்தது தெரியவந்தது.

    இதனை அறிந்த இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் 2 பேரையும் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×