search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் கஞ்சா வாங்கி சவுக்கு சங்கர் உதவியாளருக்கு சப்ளை
    X

    தூத்துக்குடியில் கஞ்சா வாங்கி சவுக்கு சங்கர் உதவியாளருக்கு சப்ளை

    • 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
    • சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாலமுருகனை பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    தேனி:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் சவுக்கு சங்கர். இவர் பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கடந்த 4ம் தேதி கைது செய்தனர்.

    தேனி அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் தனியார் விடுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது காரில் 400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்தனர். சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கைதான ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகிய 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி வழங்கியது தொடர்ந்து பரமக்குடி அருகே காரைக்குடியை சேர்ந்த மகேந்திரனிடம் கஞ்சா பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மகேந்திரனை கைது செய்த பழனிசெட்டிபட்டி போலீசார் அவரிடம் 2.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


    புதுக்கோட்டை சிறையில் இருந்த பாலமுருகனிடம் இந்த கஞ்சாவை பெற்று விற்பனை செய்ததாக மகேந்திரன் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாலமுருகனை பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகன், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து தூத்துக்குடி துறைமுகத்தில் பரவலாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. நான் அங்கு பணிபுரியும் லாரி டிரைவர்களிடம் கஞ்சா பெற்று மகேந்திரனுக்கு கஞ்சா வழங்கினேன். அவர் அதனை சவுக்கு சங்கர் உதவியாளரிடம் வழங்கியுள்ளார். மற்றபடி சவுக்கு சங்கரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை. சமூக வலைதளங்களில் தான் அவரது பேச்சை கேட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

    Next Story
    ×