search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா சப்ளை"

    • இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • இருவரையும் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காந்திநகர் ஏபி., நகரில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வட மாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் தங்கி இருந்த வீட்டில் 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் பாரிக் (24), மனோஜ் பொகாரா (36) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்திய போது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரெயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து சப்ளை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர். 

    • வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன.
    • கஞ்சா கிடைப்பது எப்படி? தொடர்பில் உள்ள கூட்டாளிகள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    காசிமேடு பள்ளம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த 2 இளம்பெண்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அவர்கள் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சுபா (வயது 37), சுதா (38) என்பது தெரிந்தது.

    அவர்கள் வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து சுபா, சுதாவை கைது செய்தார்.அவர்கள், செல்போன் மூலம் கஞ்சா ஆர்டர் பெற்று வாடிக்கையாளர்கள் இருக்கும் வீடுகளுக்கே சென்று கஞ்சாவை டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது.

    அவர்களுக்கு கஞ்சா கிடைப்பது எப்படி? தொடர்பில் உள்ள கூட்டாளிகள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்யாமலே இருந்துவந்தனர்.
    • சிறு சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் கஞ்சா சப்ளை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதமாக, வழக்கத்தைவிட கூடுதலாக கஞ்சா விற்பனை நடந்தவண்ணம் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டு வந்தனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு, சிறு, சிறு கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்துவந்தனர்.

    ஆனால், இவர்களுக்கு மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்யாமலே இருந்துவந்தனர். இந்நிலையில், காரைக்காலை அடுத்த நிரவி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற விஷ்ணு பிரியனை கடந்த வாரம் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவரது நண்பர் ரஜினி சக்தியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த கோழி என்ற ரஞ்சித்(வயது29) , காரைக்கால் லத்தீப் நகரை சேர்ந்த மொஹம்மத் அபிரிடியுடன்(23) இணைந்து, சென்னையில் இருந்து காரைக்காலில் உள்ள சிறு சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் கஞ்சா சப்ளை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி உத்தரவின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால், இருவரும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சென்றுவிட்டதாக கிடைத்த தகவலின் பேரில், தரங்கம்பாடி சென்று, அங்கு பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிமிடருந்து ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபர்களை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • புகழ்வாணனிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்  :

    திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளக்காட்டு புதூர் சோளியம்மன் கோவில் அருகில் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவரை கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரித்த போது தர்மபுரி மாவட்டம் பொய்யாபட்டி பகுதியை சேர்ந்த புகழ்வாணன் (வயது 20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் காங்கேயம் ரோடு நாச்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்து கஞ்சா வியாபாரம் செய்தது தெரியவந்தது. புகழ்வாணனிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • காரைக்காலில் சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1500 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே விழிதியூர் சங்கரன்தோப்பு பஸ் நிறுத்தம் அருகே, சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக, நிரவி காவல்நிலைய போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்ற போது, அதே பகுதியை ச்சேர்ந்த மகேஷ்(வயது24), கமலேஷ்(23) மற்றும் காரைக்கால் பெரிய பேட்டைச் சேர்ந்த கார்த்திகேயன்(22) ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து சோதனைச் செய்தனர். அப்போது அவர்களிடம் சிறு, சிறு பொட்டலங்களாக ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான 50 கிராம் கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1500 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை யும் கைது செய்தனர்.

    ×