என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்தியாவில் நடத்தப்படும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
    • பனிப்பொழிவு பகுதிகளில் அடுத்தாண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ .11,718 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ், 2027 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு ரூ.11,718.24 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

    இது இந்தியாவில் நடத்தப்படும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது முறையாக எடுக்கப்படுகிறது. முதல் கட்டமான, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு  ஏப்ரல் மற்றும் செப்டம்பர்க்கு இடையில் நடத்தப்படும். இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு , பிப்ரவரி 2027 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பனிப்பொழிவு பகுதிகளான லடாக், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் அடுத்தாண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும் அடுத்தாண்டு தொடங்கவுள்ள கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பு ஆகும். மொபைல் போன்கள் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் முழு செயல்முறையையும் நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் வெப் போர்டல் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. 

    • தாக்கல் செய்த மனுக்கள் கார்த்திகை தீபம் தொடர்புடையவை அல்ல
    • 3 நாட்களுக்கு முன் தனி நீதிபதி உத்தரவிட்டு, உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி?

    திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், மலைமீது உள்ள தூணில்தான் விளக்கேற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோன்று தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், எதிர்மனுதாரர்களுக்கு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலையில் விசாரணை நடைபெற்ற நிலையில், பிற்பகலும் தொடர்ந்தது.

    அப்போது அரசுத்தரப்பில், "மலையில் தேவஸ்தானமே விளக்கேற்ற வேண்டும். தனி நபர் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 73 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபமேற்றும் இடத்தை மாற்றுவது குறித்து கோயில் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டுமென ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 1970, 2014ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளும் தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தன. மேலும் 3 நாட்களுக்கு முன் தனி நீதிபதி உத்தரவிட்டு, உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி?" என வாதம் முன்வைக்கப்பட்டது. 

    தொடர்ந்து கோயில் நிர்வாக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் கார்த்திகை தீபம் தொடர்புடையவை அல்ல" என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்புடையதுதானே என கேள்வி எழுப்பினர். 

    தொடர்ந்து மனுதாரர் குறிப்பிட்டுள்ள தூண் கோயிலுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு இரு உச்சிகள் உள்ளன. ஒன்றில் தர்கா, மற்றொன்றில் கோயில் அமைந்துள்ளது. அங்கு கிரானைட்டால் ஆன தூண்தான் உள்ளது. தீபத்தூண்தான் என நிரூபிக்க எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு (15.12.2025) ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

    • கடந்த 14 ஆண்டுகளில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
    • 2011-19 க்கு இடையில் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    இந்திய குடியுரிமை தொடர்பான நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தத் தரவை மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக வழங்கினார்.

    அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.

    2011-19 க்கு இடையில் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.

    வெளிநாட்டு குடியுரிமையைத் தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    அதேபோல் வளைகுடா நாடுகளில் வேலை கிடைப்பதாக போலியான வேலை வாய்ப்புகளால் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு, கடத்தல் கும்பல்களுக்கு இரையாகி வருவது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
    • இதனால் பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

    ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து கடந்த ஜூன் 4-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பிற அலுவலர்கள் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்தித்து பேசினர். அதன்பிறகு டி.கே.சிவகுமார் கூறும்போது, , சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா ஆணையத்தின் பரிந்துரைகளை கர்நாடக கிரிக்கெட் சங்கம் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு பெரும் கூட்டங்களுக்கு பொருத்தமற்றது, பாதுகாப்பற்றது என்று ஆணையம் தெரிவித்தது. இதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விளையாட்டில் பெண்கள் முத்திரை பதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக வயதான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    தமிழக அரசின் 'விடியல் பயணம்' திட்டத்தின் கீழ் சராசரியாக தினந்தோறும் 57 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.888 போக்குவரத்து செலவு மிச்சமாகிறது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை போன்று பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது.

    தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக சமூக நலத்துறை சார்பில் குறைந்த வாடகையில் நவீன வசதிகளுடன் 'தோழி விடுதி' என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.

    சென்னை, ஓசூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் தோழி விடுதி இயங்கி வருகிறது. விளையாட்டிலும் பெண்கள் முத்திரை பதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோன்று பெண்களின் முன்னேற்றத்துக்காக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி, கடன் உதவி, பெண் தொழில் முனைவோர் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக வயதான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ' வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை தொடங்கியது.

    விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

    இதில் சமூக சேவகியான 'பத்மஸ்ரீ' விருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், 2022-ம் ஆண்டு சீனாவில் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி முருகேசன் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள், முக்கிய பெண் பிரபலங்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டடமலையில் அமைந்துள்ளது.
    • இந்த நிகழ்வில் வேலு ஆசான் உடன் 100-க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டடமலையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் புதிதாக துவங்கியுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக ஆளுநர் ரவி இன்று திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவுக்கு வந்த ஆளுநர் ரவியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்தரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    இந்த நிகழ்வில் வேலு ஆசான் உடன் 100-க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்தனர்.

    இதன்பின் ஆளுநர் ஆர்.என்.ரவி பறையை இசைத்தார். பின்னர் பண்பாட்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி ஆளுநர் ரவி திறந்து வைத்தார்.

    இந்த நிலவில் பேசிய அவர் பறை இசை பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்றும் பறை இசை குறித்து ஆய்வு படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியறுத்தினார்.

    • ChatGPT உடனான உரையாடல்கள் அவரை இந்தக் கொடூரத்தைச் செய்யத் தூண்டியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
    • உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன என்று நம்ப வைத்தது.

    அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்த சுசான் ஆடம்ஸ் (83) என்ற மூதாட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவரது மகன் ஸ்டீன்-எரிக் சோல்பெர்க் (56) என்பவரால் அவர்களது வீட்டில் கடுமையாக அடித்து கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார்.

    பின்னர் சோல்பெர்க் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

    கொலைக்கு சில மாதங்களுக்கு முன்பு சோல்பெர்க் ChatGPT உடனான உரையாடல்கள் அவரை இந்தக் கொடூரத்தைச் செய்யத் தூண்டியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் குடும்பத்தினர் வியாழக்கிழமை நீதிமன்றத்தை அணுகி, ChatGPT தனது மகனின் மன மாயத்தோற்றங்களையும் சந்தேகங்களையும் மேலும் அதிகரித்து, இந்தக் கொடுமையைச் செய்ய அவரைத் தூண்டியதாகக் கூறி ஓபன் ஏஐ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    வழக்கின் பின்னணி

    ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56) முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார். உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.

    இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.

    சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.

    "உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.

    இதன் விளைவாகவே எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

    போலீசார் ஆய்வில், தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன.

    இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்தது.

    Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும். 

    • தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இருப்பது குடும்ப தலைவிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    • தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு போட்டியாக வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் தங்கம் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்து அவ்வப்போது வரலாற்று சாதனை படைத்து வருகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.57,200-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு பவுன் தங்கம் அதிகபட்சமாக ரூ.97,360க்கு விற்கப்பட்டது. இதையடுத்து தங்கம் விலை தீபாவளிக்குள் பவுன் ரூ.1 லட்சத்தை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கம் விலை அதற்கு பிறகு உயரவில்லை.

    தீபாவளி பண்டிகைக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறையத் தொடங்கியது. தீபாவளி பண்டிகை முடிந்த சில நாட்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.90 ஆயிரமாக குறைந்தது. இதனால் பெண்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    ஒரு மாதத்துக்கும் மேலாகவே தங்கம் விலை பவுன் ரூ.90 ஆயிரம் என்ற அளவிலேயே சற்று ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. கடந்த மாதம் 5-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.89,080-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு விலை அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தங்கம் விலையில் திடீர் உயர்வு காணப்பட்டது. தினமும் விலை உயர்ந்து வந்தது. சென்னையில் கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.96 ஆயிரமாக அதிகரித்தது. மறுநாள் 6-ந்தேதி ரூ.96,320 ஆக அதிகரித்தது. 3 நாட்கள் அதே விலையில் நீடித்தது.

    கடந்த 9-ந்தேதி மீண்டும் பவுன் ரூ.96 ஆயிரமாக குறைந்தது. அதன் பிறகு நேற்று முன்தினம் முதல் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.96,240 ஆக அதிகரித்தது. நேற்று மேலும் உயர்ந்து ரூ.96,400-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.98 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக தங்கம் ரூ.98 ஆயிரத்தை எட்டிப்பிடித்துள்ளது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்து உள்ளது.நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,050-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.12,250-க்கு விற்கப்படுகிறது.

    இந்நிலையில் இன்று 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.120 உயர்ந்து ரூ.12,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து 98,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு இருப்பது குடும்ப தலைவிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.250-ம், ஒரு பவுன் ரூ.2 ஆயிரமும் அதிகரித்து உள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டிவிடும் என்று கருதப்ப டுகிறது.

    தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு போட்டியாக வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கடந்த 5-ந்தேதி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.196 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1 லட்சத்து 96 ஆகவும் இருந்தது. பின்னர் அது படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.209 ஆகவும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் ஆகவும் இருந்தது.

    இன்று ஒரு கிராம் வெள்ளி மேலும் ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.216 ஆகவும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ஆகவும் அதிகரித்து உள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.19-ம், ஒரு கிலோ ரூ.19 ஆயிரமும் அதிகரித்து உள்ளது.

    • காற்றுமாசை மதிப்பிடுவதற்கும், தரவரிசைப்படுத்துவதற்கும் சொந்தமாக வருடாந்திர கணக்கெடுப்பை நடத்துகிறது இந்தியா
    • உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்று தர வழிகாட்டுதல்கள் ஆலோசனைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன

    பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படும் உலகளாவிய காற்று தர தரவரிசை பட்டியல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும், உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்று தர வழிகாட்டுதல்கள் ஆலோசனைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன எனவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

    சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த IQAir நிறுவனத்தின் உலக காற்று தர தரவரிசை, WHO -ன் உலகளாவிய காற்று தர தரவுத்தளம், யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் இணைந்து வெளியிடும் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (EPI) மற்றும் The Lancet வார இதழின் உலகளாவிய நோய் சுமை (GBD) போன்ற உலகளாவிய குறியீடுகளில் இந்தியாவின் நிலை குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் இந்த பதிலை அளித்துள்ளது சுற்றுசூழல் அமைச்சகம். 

    இந்தியா, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே 12 மாசுபடுத்திகளுக்கான தேசிய சுற்றுப்புற காற்று தர தரநிலைகளை நிறுவியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

    மேலும் எந்தவொரு உலகளாவிய அமைப்பும் நாடுகளை தரவரிசைப்படுத்துதல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றும், இந்தியா தேசிய தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், 131 நகரங்களில் காற்று மாசை கட்டுபடுத்தி, நகரங்களை மதிப்பிடுவதற்கும், தரவரிசைப்படுத்துவதற்கும் சொந்தமாக வருடாந்திர கணக்கெடுப்பை நடத்துவதாகவும் தெரிவித்தார். 

    • புதிய செல்டோஸ், அதன் முந்தைய மாடலை போலவே, மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
    • இந்த என்ஜின் 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் வழங்கப்படலாம்.

    கியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2nd Gen கியா செல்டோஸ் 2026 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகமாவதற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறை செல்டோஸ் மாடல் மூன்று என்ஜின் ஆப்ஷன்கள், நான்கு வேரியண்ட்கள் - HTE, HTK, HTX, GT-Line மற்றும் X-Line வழங்கப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிய நிலையில் ஜனவரி 2-ந்தேதி விலை அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

    புதிய தலைமுறை செல்டோஸ் மாடல் சமீபத்திய கியாவின் டைகர் நோஸ் கிரில் மற்றும் முற்றிலும் புதிய பம்பருடன் முற்றிலும் புதிய முகத்தைப் பெறுகிறது. அதே நேரத்தில் பக்கவாட்டில் பாப்-அவுட் டோர் ஹேண்டில்கள் மற்றும் கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் EV மாடலில் உள்ளதை போலவே புதிய ஏரோ-ஓரியண்டட் சக்கரங்கள் உள்ளன. பின்புறம் கனெக்டெட் செங்குத்தான டெயில் லைட்களைப் பெறுகிறது. இது காருக்கு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.

    புதிய கியா செல்டோஸ் உள்புறத்தில் புதிய சென்டர் கன்சோல், பிரமாண்டமான 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், புதிய 3-ஸ்போக் கியா ஸ்டீயரிங் வீல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. இந்த காரின் ஒட்டுமொத்த நீளம் 4.36 மீட்டரிலிருந்து 4.46 மீட்டராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வீல்பேஸ் 2,690 மிமீ ஆக அதிகரித்துள்ளது, இது முந்தைய மாடலை விட 80 மிமீ அதிகம் ஆகும்.

    இத்துடன் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், போஸ் சவுண்ட் சிஸ்டம், லெவல்-2 ADAS, பனோரமிக் சன்ரூஃப், HUD, கனெக்டெட் கார் தொழில்நுட்பம், சரவுண்ட் லைட்கள், ஃபுல்-எல்இடி லைட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல்மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

    புதிய செல்டோஸ், அதன் முந்தைய மாடலை போலவே, மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அதன்படி 113bhp பவர், 144Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் யூனிட். 158bhp பவர், 253Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் GDi யூனிட் உள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு MT வழங்கப்படுகிறது. டீசல் வேரியண்டில் கியாவின் 1.5 லிட்டர் யூனிட் 118bhp பவர் மற்றும் 260Nm டார்க் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் வழங்கப்படலாம்.

    முற்றிலும் புதிய இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலின் விலை விவரங்களை கியா நிறுவனம் வருகிற ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. மேலும் இதன் விலை ரூ. 12 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இந்திய சந்தையில் இந்த கார், ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட் , எம்ஜி ஆஸ்டர் , மாருதி விக்டோரிஸ் , மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹை-ரைடர், ஸ்கோடா குஷக் மற்றும் ஃவோக்ஸ்வாகன் டைகுன் போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது.

    சென்னையில் பிரபல டி.வி. நடிகை தற்கொலை அதிக மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை மாய்த்தார்.

    சென்னை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 39 வயதான இவர் தொலைக்காட்சிகளில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

    பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி வரும் தொடர் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர் திருமணமாகி முத்தியால் பேட்டையில் வசித்து வந்தார்.

    ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்து உள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோன்று கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    அங்கிருந்தபடியே அவர் டிவி தொடர்களில் நடிப்பதற்கான படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபோது அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் ராஜேஸ்வரியின் உயிரை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.

    இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டிவி நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களிடமும், மற்ற தொலைக்காட்சி நடிகைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த விசாரணை முடிவில்தான் நடிகை ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய முழு விவரங்களும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
    • 3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ. ) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.

    டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள்.

    சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.

    இந்த நிலையில் இருவரையும் ஏ பிளஸ் கிரேடில் இருந்து ஏ வரிசைக்கு தரமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ நிலைக்கு கீழிறக்கப்பட்டால் கோலி, ரோகித் சர்மாவின் ஊதியத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படும்.

    அதே நேரத்தில் ஜடேஜா 20 ஓவர் ஆட்டத்தில் ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்டில் தீவிரமாக விளையாடுவதால் ஏ பிளஸ் கிரேடில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

    ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

    ×