என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அணையின் நீர்மட்டம் 64 அடியை கடந்த நிலையில் விருதுநகர் கிருதுமால் நதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
    • 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகின்றன.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் கனமழை பெய்ததாலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததாலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    அணையின் நீர்மட்டம் 64 அடியை கடந்த நிலையில் விருதுநகர் கிருதுமால் நதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் இன்று காலை முதல் 5 மாவட்ட பாசனத்திற்கு 1900 கனஅடி, கிருதுமால் நதி பாசனத்திற்கு 442 கன அடி, மதுரை, திருமங்கலம், சேடப்பட்டி குடிநீர் தேவைகளுக்காக 69 கனஅடி என மொத்தம் 2319 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கால்வாய் மூலம் 1900 கன அடி மற்றும் 7 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.94 அடியாக உள்ளது. நீர்வரத்து 1411 கன அடி. இருப்பு 4398 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.50 அடி. வரத்து 596 கனஅடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6244 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி என அதன் முழு கொள்ளளவில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 15 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.30 அடி. வரத்து 12 கன அடி. திறப்பு 15 கனஅடி. 

    • அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
    • எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன்.

    சின்னத்திரையில் ஜொலித்த சந்தானம், சிம்புவின் 'மன்மதன்' படம் மூலமாக வெள்ளித்திரையில் எட்டிப் பார்த்தார். அதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கிய அவர், தற்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார்.

    இதற்கிடையில் வெள்ளித்திரையில் தனக்கு அறிமுகம் தந்த சிம்பு கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவர் நடிக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சூழலில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்-2' படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது.

    இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய... படம் தானே... சொல்லிட்டு தான் செய்வேன்'' என சந்தானம் தெரிவித்தார்.

    • இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பழையபடி விலை ‘கிடுகிடு'வென உயர ஆரம்பித்தது.
    • இந்த ஆண்டு இறுதிக்குள் ஏன், ஓரிரு நாட்களிலேயே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

    தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத காளையாய் துள்ளிக்குதித்து எகிறி வருகிறது. கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை எட்டியதும், 'என்னது 50 ஆயிரம் ரூபாயை தங்கம் தொட்டுவிட்டதா?' என திகைக்கும் அளவுக்கு விலை உயர்ந்து இருந்தது. அதன்பிறகு விலை கொஞ்சம்கூட குறையவில்லை.

    அவ்வாறு விலை உயர்ந்து வந்து, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது.

    கடந்த ஆண்டில் இருந்த உயர்வை காட்டிலும், நடப்பாண்டில் தங்கம் விலை, ராக்கெட், ஜெட் என இன்னும் நொடிப்பொழுதில் வேகம் எடுக்கக்கூடிய எதனுடனும் ஒப்பிடும் அளவுக்கு இருக்கிறது.

    கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. அந்தநேரத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை அதிகரித்தபடியே இருந்தது. ஆனால் அதன் விலையில் இடையில் சற்று சரிவு ஏற்பட்டது. அவ்வாறு விலை குறைந்து வந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கு கடந்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி விற்பனை ஆனது. இப்படியே விலை குறைந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் நினைத்த நேரத்தில், மீண்டும் விலை ஏறத்தொடங்கியது.

    அதிலும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பழையபடி விலை 'கிடுகிடு'வென உயர ஆரம்பித்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. தொடர்ச்சியாக ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனை ஆனது.

    நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம், பிற்பகல் நிலவரப்படி மேலும் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.320-ம், சவரனுக்கு ரூ.2,560-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதே நிலை தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஏன், ஓரிரு நாட்களிலேயே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

    இந்தநிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆக விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960

    11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400

    10-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,240

    09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000

    08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-12-2025- ஒரு கிராம் ரூ.216

    11-12-2025- ஒரு கிராம் ரூ.209

    10-12-2025- ஒரு கிராம் ரூ.207

    09-12-2025- ஒரு கிராம் ரூ.199

    08-12-2025- ஒரு கிராம் ரூ.198

    • ஏன் இப்படி பரவுகின்றன? என்று நினைத்து மனம் வருத்தம் கொள்கிறது.
    • பார்க்கும் எதையும், கேட்கும் எதையும் நம்பமாட்டார்.

    பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற 14 வயது பெண் குழந்தை உள்ளது.

    ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் இருவருமே இணக்கமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் வதந்திகளால் மனம் வருந்துவதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ''விவாகரத்து வதந்திகள் உண்மையில்லை என்றாலும், ஏன் இப்படி பரவுகின்றன? என்று நினைத்து மனம் வருத்தம் கொள்கிறது. என் மகளை பொறுத்தவரை பகுத்தறிவதில் கெட்டிக்காரர். பார்க்கும் எதையும், கேட்கும் எதையும் நம்பமாட்டார். ஆதாரமற்ற விஷயங்களை, வதந்திகளை நம்பக்கூடாது என்று என் மகளுக்கு ஐஸ்வர்யா ராய் சொல்லித்தந்திருக்கிறார். அது எனக்கு ஆறுதலாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் இருந்தாலும் தேவையற்ற விஷயங்களை பொருட்படுத்த மாட்டார், இருந்தாலும் என் மகளை பற்றி கவலையாக இருக்கிறது'' என்றார்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • திருமாலுக்குரிய 108 திவ்ய தேசங்களில் 24-வது தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது.
    • . வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது, தலசயனப் பெருமாள் கோவில்.

    திருமாலுக்குரிய 108 திவ்ய தேசங்களில் 24-வது தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. திருவரங்கத்தில் பெரிய வடிவில் சயன கோலத்தில் அருளும் பெருமாள், இத்தலத்தில் பாலகனாக சயன கோலத்தில் காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.

    ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும், கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்குவதற்காக ஆதிசேஷன் இத்தலம் வந்து தலசயனப் பெருமாளை நோக்கி தவம் இயற்றினார். அவரது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தில் காட்சி அளித்தார். மேலும், அவரை தனது படுக்கையாக ஏற்றுக்கொண்டு, குழந்தை வடிவில் சயன கோலத்தில் காட்சி தருவதாக தல வரலாறு கூறுகிறது.

     

    கோவில் தோற்றம்

    கோவில் நான்கு நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கருவறையில் தலசயனப் பெருமாள், நந்த வர்த்தன விமானத்துடன் சிறிய வடிவில் சயன கோலத்தில் உள்ளார். அவர் பாதத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் காட்சி தருகிறார். ஆதிசேஷன் தனிச் சன்னிதியில் ஆனந்தாழ்வார் என்ற பெயருடன் காணப்படுகிறார்.

    ஆலயத்தில் சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திர விழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    நாக தோஷம்,மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், எதிரிகளால் ஆபத்து உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கொல்லுமாங்குடி ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    டெல்லிக்கு செல்லும் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சலை தலை வெளியீட்டு விழாவிலும் நயினார் நாகேந்திரன் பங்கேற்கிறார். 

    • இது தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் நடைபெறும் மோசமான செயல்.
    • வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் மரணிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.

    வரதட்சணை கொடுமை!

    காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது, அல்லது காட்சிகள் மாறினாலும் காலங்கள் மாறாது என்ற வாக்கியத்திற்கு ஏற்ப வரதட்சணை கொடுமை என்பது பல நூற்றாண்டு காலமாக தொடரும் கதை.

    ஆசை ஆசையாக வளர்க்கும் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் தருணத்தில் பிள்ளை வீட்டார் வாய்க்கு வந்தபடி கேட்டு பெறுவதே வரதட்சணை என்பார்கள். வசதிக்கு ஏற்ப நகை, பணம், வாகனம் என கொடுத்து அனுப்பினாலும் வாழ சென்ற வீட்டில் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்பதே பெரும்பாலானோரின் பதில்.

    கேட்ட வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் ராணி மாதிரி வாழவைப்பேன் என்று சொல்லி அழைத்துச் செல்லும் பெண்களை மோசமான வகையில் நடத்தும் செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன. இது தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் நடைபெறும் மோசமான செயல். இதனால் பாதிக்கப்படுவதே ஆயிரம் கனவுகளுடன் புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள், அவர்களின் பெற்றோர் என்பதே நிதர்சனமான உண்மை.

    அப்படிப்பட்ட வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்தாண்டு பலரின் மனதில் பாதிக்கப்பட்டது ரிதன்யாவின் மரணம் தான். அது என்ன ரிதன்யாவின் மரணத்தை சொல்றோம் என நினைக்க வேண்டாம். நினைத்ததை பெற விரும்பும் பிள்ளை வீட்டார், திருமணம் ஆகி சில மாதங்கள் வரை பெண்ணை சந்தோஷமாக வைத்திருப்பார்கள். ஆனால் ரிதன்யாவோ திருமணம் ஆன 77 நாட்களில் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தான் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரிதன்யா எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.



    கோவிலுக்கு செல்வதாக திருமணத்தின் போது தனக்கு கொடுத்த காரை எடுத்துக்கொண்டு சென்ற ரிதன்யா பாதி வழியிலேயே காரிலேயே தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் திருமணமான 77 நாட்களுக்குள், வரதட்சணை கேட்டு கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் துன்புறுத்தியதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்அப் வாய்ஸ் மேசேஜ் மூலம் அனுப்பியுள்ளார். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

     

    இவ்வழக்கு தொடர்பாக கணவர், மாமனார் கைதான நிலையில், மாமியாரை போலீசார் கைது செய்வதற்கு தாமதம் செய்தனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாமியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தற்போது மூவரும் நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளனர்.

    இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், ரிதன்யாவின் தந்தை, அரசியல் தலைவர்களைச் சந்தித்து முறையிட்டார்.

    எது, எப்படியோ வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் மரணிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அடுத்து ரிதன்யா போல் மற்றொரு பெண் வரதட்சணை கொடுமையால் மரணிக்கும் முன்பு நீதிமன்றங்கள் இதற்கு சரியான கடிவாளம் போட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
    • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். மேலும் நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் 'ஜெயிலர்-2' படப்பிடிப்பு தளத்தில் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.



    இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர். அவர்களுக்கு கையசைத்தபடி சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார்.
    • ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க தமிழக அரசியல் கட்சிகள் இடையே பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. அதிலும், தமிழக அரசியல் அரங்கில் புதிய வரவான த.வெ.க. சட்டசபை தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாத பொருளாக மாறி வருகிறது.

    பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மத்தியில் த.வெ.க.வின் அரசியல் பயணம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு தனியார் கல்லூரியில் உள் அரங்கத்தில் நடந்தது.

    இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் வாயிலாக மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். இனி வரும் நாட்களில் ஈரோடு மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ச்சியாக ஜனவரி 2-வது வாரம் வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்தநிலையில், ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். தொகுதிக்கு 4 பேர் வீதம் அவர் தேர்வு செய்துள்ளார். அதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள், பெண்களுக்கும், 40 சதவீதம் பிரபலங்கள், மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரபல தியேட்டர் உரிமையாளர்கள் சிலரும் சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் என குறிப்பிட்ட தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் தேர்வை விஜய் நடத்தி முடித்து, உடனடியாக அதற்கான அறிவிப்பையும் வெளியிட உள்ளார்.

    • கடையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அந்த கடை மேலும் பிரபலமானது.
    • ஆண்கள் தரப்பில் இருந்து கண்டன கருத்துக்களும் பதிவிடப்பட்டது.

    தெருவோர கடையில் அலைமோதுகிறது பெண்கள் கூட்டம். வழக்கமாக பெண்கள் டீ கடைகளிலோ, தெருவோர ஓட்டல்களிலோ ஆண்களுக்கு நிகராக நின்று சுதந்திரமாக பேசி சிரித்தபடி சாப்பிடமாட்டார்கள். ஆனால் இந்த கடையில் மட்டும் அவர்கள் சிரித்தபடி பானிபூரியை ருசிக்கிறார்கள். காரணம் அந்த கடையில் வைக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான பெயர் பலகைதான். "ஆண்கள் யாருக்கும் அனுமதி கிடையாது" என்று எழுதப்பட்டிருப்பதால் பெண்கள் சுதந்திரமாக உணர்கிறார்கள்.

    சிலர், அந்த கடையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அந்த கடை மேலும் பிரபலமானது. பலர் பாராட்டினாலும், ஆண்கள் தரப்பில் இருந்து கண்டன கருத்துக்களும் பதிவிடப்பட்டது. ''அந்த பானிப்பூரியை விற்பவரே ஒரு ஆண்தானே'' என்று ஒருவர் எழுதியிருந்தார். இதுகுறித்த வீடியோ பல லட்சம் பேரால் பார்வையிடப்பட்டு உள்ளது.



    • தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.
    • டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.

    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, அவற்றுக்கு 'மைக்ரோ சிப் பொருத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.

    இந்த மேக்ரோ சிப்களை வழங்கும் டெண்டர், 'எக்ஸ்ஹீலர் இன்னோவேடிவ் சொல்யூசன்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பின்னர், அந்த டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.

    இந்த டெண்டரை எதிர்த்து 'எக்ஸ்ஹீலர்' நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, "டெண்டரில் பல்வேறு குளறுபடிகள், விதிமீறல்கள் நடந்துள்ளன எனக்கூறி அந்த டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

    ×