என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 2024-25 ஆம் ஆண்டில் குஜராத்தின் கடன் ரூ.3,99,633 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஒவ்வொரு குஜராத்தியின் மீதும் ரூ.66,000 கடன் உள்ளது.

    குஜராத்தின் மொத்த பொதுக் கடன் 2023-24 நிதியாண்டில் ரூ.3.77 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று அம்மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

    மேலும் அம்மாநிலத்தின் மொத்த பொதுக் கடன் 2024-25 ஆம் ஆண்டில் அது ரூ.3,99,633 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2 நிதியாண்டுகளில், நிதி நிறுவனங்களிடம் இருந்து ₹10,463 கோடியை கடனாக பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    குஜராத்தின் மக்கள் தொகை 6 கோடியாக இருப்பதால், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட ஒவ்வொரு குஜராத்தியின் மீதும் ₹66,000 கடன் உள்ளது என தரவுகள் மூலம் நிரூபனமாகிறது

    பாஜக தலைமையிலான குஜராத் அரசு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், வளர்ச்சி என்ற பெயரில் கடனை அதிகரிப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    • தேசிய கல்விக்கொள்கை என்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை.
    • ரூ.2000 கோடிக்காக கையெழுத்திட்டால் 2000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விடுவோம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தமிழ்நாடு கல்வி துறையில் உலகத்தரத்திலான சாதனைகளை செய்து வருகிறது.

    * அன்பில் மகேஷ் அமைச்சராக இருக்கும் இக்காலம் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பொற்காலம்.

    * இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி உள்ளோம்.

    * தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் சிறப்பாக செயல்படுகிறது.

    * அரசு பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் நன்கொடை, பொருட்கள் வழங்குகிறார்கள்.

    * 234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்துள்ளார் அன்பில் மகேஷ்.

    * தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை தர மறுக்கின்றனர்.

    * மாணவர்களின் கல்விக்கான நிதியை தர மத்திய அரசு தர மறுக்கிறது.

    * தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காமல் இருப்பதே சரி.

    * தமிழக மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு வைக்கும் வேட்டு புதிய கல்விக்கொள்கை.

    * தேசிய கல்விக்கொள்கை என்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை.

    * மாணவர்களை பள்ளிக்கூடத்தில் இருந்து துரத்தும் கொள்கை என்பதால் தான் தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம்.

    * ரூ.10,000 கோடி தருகிறேன் என்று கூறினாலும் தேசிய கல்விக்கொள்கைக்கு கையெழுத்திட மாட்டேன்.

    * ரூ.2000 கோடி அல்ல ரூ.10,000 கோடியே கொடுத்தாலும் புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம்.

    * ரூ.2000 கோடிக்காக கையெழுத்திட்டால் 2000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விடுவோம்.

    * குலத்தொழில், சாதி தொழில் என மனுநீதி சொல்கின்ற திட்டத்தை ஏற்க மாட்டோம்.

    * குலக்கல்வி முறையை எதிர்க்க வேண்டும் என்பதால் தான் தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம்.

    * 6-ம் வகுப்பு முதல் தொழில்கல்வி கற்றுக்கொடுக்கிறோம் என குலக்கல்வியை திணிக்க முயற்சி செய்கிறார்கள்.

    * 6-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு வைத்து பள்ளிகளில் மாணவர்களை வடிகட்ட நினைக்கிறார்கள்.

    * 3, 5, 8-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வை வைத்து மாணவர்கள் கற்பதை தடுக்க பார்க்கிறார்கள்.

    * 12-ம் வகுப்பு முடித்து மாணவர்கள் எளிதாக கல்லூரிகளில் சேர முடியாமல் தேசிய கல்விக்கொள்கை தடுக்கும் என்று கூறினார்.

    • பைபிட் (Bybit) நிறுவனம் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது.
    • திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைபிட் (Bybit) மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் திருட்டுக்கு இரையாகி உள்ளது.

    நேற்று (வெள்ளிக்கிழமை) பைபிட் நிறுவனம், அதன் ஆஃப்லைன் ஹாட் வாலட்களில் ஒன்றிலிருந்து Ethereum (ETH) திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

    அந்நிறுவனத்தின் அறிக்கைப்படி, 401,346 ETH டோக்கன் (1.13 பில்லியன் டாலர் மதிப்பு) பைபிட்டின் ஹாட் வாலட்டில் இருந்து அடையாளம் தெரியாத வாலட் முகவரிக்கு மாற்றப்பட்டது.

    பரிமாற்றத்தைத் தொடர்ந்து, திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் விசாரித்து வருகிறோம். இதனால் மற்ற பரிமாற்றங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பைபிட் தலைமை நிர்வாக அதிகாரி பென் சோவ் தெரிவித்துள்ளார்.  

    • டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன்.
    • மோசமான இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை

    போபால் - டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை கொடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இன்று நான் போபாலில் இருந்து டில்லிக்கு பயணம் செய்ய இருந்தேன். அதற்காக நான் ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கையில் அமர்ந்தபோது தான் அது சேதமடைந்து இருக்கிறது என்று எனக்கு தெரியவந்தது.

    சக பயணிகள் இருக்கையை மாற்றி நல்ல இருக்கையில் அமரும்படி என்னை வற்புறுத்தினார்கள், ஆனால் வேறு எந்த நபருக்கும் நான் ஏன் தொந்தரவு கொடுக்க கூடாது என்பதால் சேதமடைந்த இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்தேன்.

    டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அபப்டி எதுவும் நடக்கவில்லை.

    பயணிகளிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்த பிறகு, மோசமான மற்றும் வலிமிகுந்த இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை. இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா?

    ஏர் இந்தியா நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    • திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
    • பள்ளி மாணவன் போல் காரணம் கூறுவதாக நினைக்க வேண்டாம்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக கடலூருக்கு நேற்று மாலை வருகை தந்தார். பின்னர் அவர், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    * விழாவிற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    * பள்ளி மாணவன் போல் காரணம் கூறுவதாக நினைக்க வேண்டாம். வருகின்ற வழிநெடுக காத்திருந்த மக்களை சந்தித்து வந்ததால் தாமதம் ஆனது.

    * மேடையில் பேசாமல் நின்ற மாணவச் செல்வங்களின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறேன். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை வணங்குகிறேன் என்று கூறினார்.

    • த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    • சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து முதலாம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி ஈ.சி.ஆர். சாலையில் உள்ள Confluence Centre-ல் த.வெ.க. முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிக்கான பாஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    • போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
    • ஷாரிக் சதாவுக்கு, தாவூத் இப்ராகிம் கும்பலுடனும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடனும் தொடர்பு உள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 'ஷாஹி ஜமா' மசூதிக்குள் இந்து கோவில் இருப்பதாக கூறி இந்து அமைப்பு தொடர்ந்து வழக்கில் மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்டருடன் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர்.

    அதிகாரிகளுக்குத் துணையாக வந்த போலீஸ் மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்க்க வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

    இந்த கலவரம் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பான 4,400 பக்க குற்றப்பத்திரிகையை உ.பி போலீஸ் சிறப்பு விசாரணைக் குழு நேற்று முன் தினம் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் 79 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.

    இந்த கலவரத்தை சம்பலைச் சேர்ந்த ஷாரிக் சாத்தா என்பவர் திட்டமிட்டு நடத்தியதாக குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறது. தற்போது ஷாரிக் சாத்தா ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

    இதுகுறித்து சம்பல் போலீஸ் எஸ்.பி. கிருஷ்ண குமார் பிஸ்னோய் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "சம்பல் பகுதியில் கலவரம் நடைபெற்ற இடத்தில் இருந்து பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் பறி முதல் செய்யப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷாரிக் சதா என்பவர்தான் இந்த கலவரத்தை தூண்டிவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    டெல்லி - என்சிஆர் பகுதியில் மட்டும் இவரது கும்பல் 300-க்கும் மேற்பட்ட கார் திருட்டில் சம்பந்தப்பட்டுள்ளது. சம்பலை சேர்ந்த ஷாரிக் சதாவுக்கு, தாவூத் இப்ராகிம் கும்பலுடனும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடனும் தொடர்பு உள்ளது.

    போலி பாஸ்போர்ட் மூலம் ஷாரிக் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பியோடியுள்ளார். அங்கிருந்தபடியே சம்பல் கலவரத்துக்கு அவர் சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஷாரிக் கும்பலை சேர்ந்தவர்கள்தான் சம்பல் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     

    சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜியாவுர்ரகுமான் பார்க், எம்எல்ஏ இக்பால் மொகமூதின் மகன் சுஹைல் இக்பால் ஆகியோருடன் ஷாரிக்குக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, அவர்களுடைய பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

    • பல்கலைக்கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
    • பேராசிரியர் நிலை வரை பதவி உயர்வு வழங்கப்படுவதை பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு பேராசிரியர், மூத்த பேராசிரியர் நிலை வரையிலும், கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு இணைப் பேராசிரியர் வரையிலும் பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவற்றுக்கு பல ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2019-ம் ஆண்டில் உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன.

    அப்போது பல்கலைக்கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி 34 ஆசிரியர்கள் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துக் கொள்ளப்பட்டார்கள். இப்போது பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் திரும்பி விட்ட அவர்களுக்கு பேராசிரியர் நிலை வரை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

    ஆனால், அவர்களை ஏற்கனவே இருந்த கல்லூரி ஆசிரியர்களாகவே கருதி அவர்களுக்கு இணைப் பேராசிரியர் நிலை வரை மட்டும் தான் பதவி உயர்வு வழங்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது. இது தவறு மட்டுமின்றி, சமூக அநீதியும் ஆகும். அவர்களுக்கு பேராசிரியர் நிலை வரை பதவி உயர்வு வழங்கப்படுவதை பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால் அந்த மசோதா செயலிழந்து விட்டது என்று அர்த்தம்.
    • மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 12 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்து உள்ளார்.

    இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு மீதான விவாதம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. 4 நாட்கள் நடந்த அந்த விவாதத்தின் போது சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் கவர்னர் ஏன் பல ஆண்டுகளாக அமைதி காத்தார்? மசோதாவில் முரண்பாடுகள் இருப்பதாக தோன்றினால் அது தொடர்பாக அரசுடன் அவர் ஏன் தொடர்பு கொண்டு பேசவில்லை? என்று கேள்வி எழுப்பினார்கள்.

    இந்த விவாதத்தின் போது ஜனாதிபதிக்கு மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி இருப்பது பற்றியும் பேசப்பட்டது. அப்போது நீதிபதிகள், "மசோதாக்கள் நீர்த்து போகும் என்று கவர்னர் தரப்பில் சொல்கிறார்கள். அப்படியென்றால் அந்த மசோதாக்களை கவர்னர் எவ்வாறு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்" என்று கேள்வி எழுப்பினார்கள்.

    மேலும் மசோதாக்களை கவர்னர் சட்டசபைக்கு திருப்பி அனுப்பாமல் தன்வசமே வைத்துக் கொண்டால் அதன் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

    தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல்கள், "சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னரால் நிறுத்தி வைக்க முடியாது. மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டிய கட்டாயத்தை தவிர கவர்னருக்கு வேறு எந்த விருப்ப உரிமையும் கிடையாது" என்று வாதிட்டனர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு மீதான தங்களின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். அதற்கு முன்னதாக இரு தரப்பினரும் தங்களுக்கு எழும் சில கேள்விகளுக்கு விளக்கம் அளித்து சுப்ரீம் கோர்ட்டில் குறிப்புகளாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.

    சுப்ரீம்கோர்ட்டின் இந்த அறிவுறுத்தலை ஏற்று தமிழக அரசு சார்பில் சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கவர்னருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று உறுதிப்பட கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி தனக்கு இருக்கும் அதிகாரங்களை குறிப்பிட்டுள்ளார்.

    அரசியல் சாசனத்தின் கீழ் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது. பிரிவு 200-ல் குறிப்பிடப்பட்டுள்ள "டிஸ்கிரீஷன்" என்ற வார்த்தை கவர்னருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தை குறிக்கிறது. கவர்னர் ஒவ்வொரு முறையும் அமைச்சரவை ஆலாசனை படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.

    ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால் அந்த மசோதா செயலிழந்து விட்டது என்று அர்த்தம். எனவே காலாவதியான மசோதாவை மாநில சட்டசபையில் நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்பும் போது அதன் மீது ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

    அவ்வாறு மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது.

    மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்குவது, ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பது, ஒப்புதலை நிறுத்தி வைப்பது உள்பட 4 அதிகாரங்கள் விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

    தேவைப்பட்டால் அரசியல் சாசன பிரிவு 200-ஐ மேலும் செம்மைப்படுத்த கவர்னர்கள் அதிகாரம் தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன பிரிவிற்கு மாற்றம் செய்து விசாரிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
    • இதுவரை ஊதியம் பெறாதவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்தியதில் 78 ஆயிரத்து 784 முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றின் மூலம் ரூ.14 கோடிக்கும் கூடுதலான தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூகத் தணிக்கை வாயிலாக தெரியவந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    அப்பட்டமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்திருக்கும் போதிலும், அவற்றின் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. ஊரக வேலைத் திட்டத்தின்படி பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்பது தான் முதன்மை குற்றச்சாட்டு ஆகும்.

    தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின்படி பணி செய்து இதுவரை ஊதியம் பெறாதவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மருத்துவம், கல்வி, எல்லா வரியையும் எடுத்துக்கொண்டால் எதற்கு மாநிலம் இருக்கிறது.
    • ஒற்றை மொழியை திணித்து இந்த நாட்டை கூறுபோட துடிக்கிறீர்கள்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மும்மொழி ஏன் இருக்கிறது. எம் மொழி ஏன் இல்லை.

    * கல்வி மாநில உரிமை. மருத்துவம், கல்வி, எல்லா வரியையும் எடுத்துக்கொண்டால் எதற்கு மாநிலம் இருக்கிறது. இதற்குத்தான் போராடி சுதந்திரம் பெற்றோமா?

    * கட்சியில் முழு சுதந்திரம் இருக்கிறது. இருந்து இயங்குவதற்கும் விருப்பமில்லை என்றால் வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது.

    * இது ஜனநாயக அமைப்பு. தங்கை காளியம்மாள் முதலில் சமூக செயல்பாட்டாளராக தான் இருந்தார். அவரை அழைத்து வந்ததும் நான் தான். அவர்கள் எல்லோருக்கும் எல்லா சுதந்திரமும் உள்ளது.

    * வரும்போது வாங்க வணக்கம். ரொம்ப நன்றி என்று சொல்வோம். போறதா இருந்தால் போங்க. ரொம்ப நன்றி. வாழ்த்துகள் என்று சொல்வோம். இதுதான் எங்கள் கொள்கை.

    * பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்று ஒன்று இருப்பதுபோல் எங்கள் கட்சிக்கு களைகள் உதிரும் காலம். திடீரென்று வருவார்கள் போவார்கள். என்ன இப்போது வெளியே போனால் நீங்கள் எல்லாம் கேள்வி கேட்பதால், பேட்டி எடுப்பதால் கடிதம் விலகுகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு போகிறார்கள்

    * உடனே நீங்கள் பேட்டி எடுத்து போடுகிறீர்கள். அதுவும் பார்ப்பதற்கு, கேட்பதற்கு, ரசிப்பதற்கு நல்லா தான் இருக்கிறது. எடுத்து போடுங்கள்.

    * தங்கைக்கு முழு சுதந்திரம் உள்ளது. கட்சியில் இருப்பதா? வேறு கட்சியில் சேர்ந்து இயங்குவதா? என்று முடிவு எடுக்கின்ற முழு உரிமை அவர்களுக்கு உள்ளது. அதில் நாம் ஒன்றும் சொல்ல முடியாது.

    * ஒரு மொழியை திணித்து இந்த நாட்டை துண்டாடுகிறீர்கள். பிரிவினைவாதத்தை தூண்டுகின்ற பிரிவினைவாதிகள் என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.

    * ஒற்றை மொழியை திணித்து இந்த நாட்டை கூறுபோட துடிக்கிறீர்கள்.

    * அந்த நொடி எந்த நொடி. நிதி தரவில்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். என் மாநிலத்தில் இருந்து உனக்கு ஒரு ரூபாய் வரி வராது என்று சொல்ல முடியாதா? என்று கூறினார்.

    • கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி இதுவரை வரவில்லை.
    • டெல்லி தலைநகரில் துப்பாக்கி சூடுகள், குண்டு வெடிப்பு, அடிக்கடி பள்ளி மாணவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி நடந்து வருகிறது.

    மதுரை:

    ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை.வைகோ எம்.பி. மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சகோதரர் உதயநிதிக்கும், அண்ணாமலைக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என அண்ணாமலை கூறுகிறார். தமிழகத்தில் பா.ஜ.க.வை தவிர அனைத்து இயக்கங்களும், இருமொழிக் கொள்கையால் கல்வி உயர்ந்து அனைவரும் படித்துள்ளனர் என உறுதியாக இருக்கிறோம்.

    வடமாநிலங்களுக்கு தமிழக பா.ஜ.க.வினர் செல்ல வேண்டும். அங்கு பா.ஜ.க. தலைவர்கள் வைக்கின்ற பிரசாரம் ஆங்கிலம் தேவையில்லை என்று. இன்றைக்கு உலக அளவில் மருத்துவத்துறை, வர்த்தகத் துறை, தொழில்துறை ஆகியவற்றில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஆங்கில புலமை தான் காரணம்.

    பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களின் புள்ளி விவரம் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 சதவீதம். இன்றைக்கு உள்ள பள்ளி மாணவர்களுக்கு மன உளைச்சல் அதிகம். மருத்துவத்துறையில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுத வேண்டும். பொறியியல் படிப்பு செல்ல வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. அப்படி இருக்கையில் எதற்காக மாணவர்கள் மூன்றாவது மொழியில் படிக்க வேண்டும்.

    மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறுகிறார்கள். ஆனால் மூன்றாவது மொழியை தேர்ந்து எடுத்தால் இந்தியை தான் தேர்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகும். உலக மொழியை கற்றுக் கொள்வதில் என்ன தவறு? இதற்கிடையே ஒன்றிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், தமிழகம் என்றைக்கு தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறதோ அப்போது தான் நிதி வழங்கப்படும் என தெள்ளத்தெளிவாக கூறி விட்டார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி இதுவரை வரவில்லை. பா.ஜ.க. அல்லாத பிற மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு நிதியை கொடுக்காமல் இருக்கிறது. அதன் மூலமாக மக்களுக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவது அல்லது ஆளுநர் மூலமாக இடையூறு அளித்து மாநில அரசுக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.

    கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை அதிகம் நடந்துள்ளது. தனிமனித ஒழுக்கம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டும். தவறு செய்யும்போது தவறு செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய வழக்குகள் இந்தியாவிலேயே முதலிடம். டெல்லியை பொறுத்தவரை காவல் துறை ஒன்றிய அரசின் கையில் தான் இருக்கிறது. அங்கேயும் சட்டம், ஒழுங்கு மோசமடைந்துள்ளது.

    டெல்லி தலைநகரில் துப்பாக்கி சூடுகள், குண்டு வெடிப்பு, அடிக்கடி பள்ளி மாணவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி நடந்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள டான்கள் டெல்லியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை மற்றும் மாநிலங்களை விட குற்றச்சம்பங்கள் குறைவுதான்.

    மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள், ஜாதி, மத அரசியல் செய்கிற இயக்கங்கள் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு இன்றைக்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் நடக்கின்ற சம்பவங்களை முதலில் பார்க்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×